Wednesday, March 31, 2010

தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி:ராமதாஸ்

சென்னை: தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி என்பதும், அரசியலில் அதன் பங்களிப்பை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பென்னாகரம் தொகுதியில் பணத்தின் பக்கம் பலமாக காற்று வீசுகிறது என்ற கணிப்பு மெய்யாகி இருக்கிறது. பணநாயகம் வெற்றி பெற்று, ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் 13 கட்சிகளின் துணையுடனும், அனைத்து வசதி, வாய்ப்புகளுடனும் ஆளும் கட்சி களமிறங்கியது.

பிரதான எதிர்கட்சியும் 4 கட்சிகளின் துணையுடன் தேர்தலை சந்தித்தது. பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டு மக்களை சந்தித்தது. மற்றவர்களைப் போல பண பலம் இல்லை, மக்கள் ஆதரவு ஒன்றை மட்டுமே நம்பி களம் இறங்கினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

தனியாகப் போட்டியிட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறோம். பா.ம.க.வை பொறுத்தவரையில் இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, தார்மீக ரீதியில் மகத்தான வெற்றி ஆகும்.

பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்ற சில ஆரூடக்காரர்களின் கணிப்பை, பென்னாகரம் வாக்காளர்கள் பொய்யாக்கி இருக்கிறார்கள். தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி என்பதும், அரசியலில் அதன் பங்களிப்பை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும், பென்னாகரத்தில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு பெற்றுள்ள 41 ஆயிரத்து 285 வாக்குகள் உறுதிப்படுத்தியிருக்கிறது.

பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்பதையும், மக்கள் மனதில் பா.ம.க. நீங்காத இடத்தை பெற்றிருக்கிறது என்பதையும் இந்த வாக்குகள் எடுத்துக் காட்டுகின்றது.

இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய பென்னாகரம் வாக்காளர்களுக்கும், இரவு பகல் பாராது, இடையூறுகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, தேர்தல் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலை வணிகச் சந்தையாக்கும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக தேர்தல் ஆணையம் இந்த ஆபத்தை உணர்ந்து, இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துபேசி உரிய சட்ட நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டாலொழிய, ஜனநாயகத்தை வீழ்த்தி கொண்டிருக்கும் பணநாயகத்தை ஒழிக்க முடியாது. இதற்கு உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் முனைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உரத்தக் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Tuesday, March 30, 2010

பா.ம.க -தனிப்பெரும் கட்சி

1. பா.ம.க-வை எதிர்த்து கருத்து எழுதுபவர்கள் இப்போது எங்கே போனீர்கள்? இருக்கிறீர்களா? அல்லது தொலைந்து போய்விட்டீர்களா? இப்போதாவது நாகரீகமாக எழுத பழகிகொள்ளுங்கள். பா.ம.க தனித்து நின்று 41 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்றுள்ளது. இங்கே முன்பு எழுதியவர்கள் பா.ம.க- ஒரு ஜாதி கட்சி, மரம் வெட்டி, பச்சோந்தி என்று எல்லாம் வசைபாடிநீர்களே. இப்போது சொல்லுங்கள் அவர்களுக்கு எப்படி 41 ஆயிரத்து 285 பேர் வாக்களித்தார்கள்? அல்லது 41 ஆயிரத்து 285 பேரும் முட்டாள்களா? ஆட்சி அதிகாரம், பண பலம் கொண்ட தி.மு.க-வை எதிர்த்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்பதே பா.ம.க-விற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். அ.தி.மு.க. கூட்டணி (அ.தி.மு.க. , ம.தி.மு.க, வலது மற்றும் இடது கம். ), மற்றும் தே.மு.தி.க. ஆகியவை டெபொசிட் இழந்தன. ஆளும் கட்சிலிருந்து கங்கணம்கட்டி பா.ம.க-வை டெபொசிட் இழக்க செய்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, பா.ம.க தமிழக அரசியலில் தவிர்க்கப்படமுடியாத ஒரு சக்தி என்பதை இந்த தேர்தல் மூலம் பா.ம.க நிருபித்துள்ளது

2. பாமக, திமுக, அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் வன்னியர்கள் தான். வெற்றி பெற போவது என்னவோ ஒரு வன்னியன் மட்டுமே. பாமக-வை முன்னிறுத்தி வன்னியர்களை சாடும் அனைவருக்கும் இது ஒரு செருப்படி. ஜாதி ஒழிப்பை பற்றி பேசறவங்களும், வன்னியர்களை தரம் தாழ்த்தி பேசும் மடையங்களுக்கும் இந்த தேர்தல் ஒரு நல்ல விளக்க பாடம்

3.ஜெனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் பா.ம.க தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். 2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பா.ம.க பென்னகரத்தில் வெற்றி என்பது இன்று உறுதியுடன் கூறலாம்.

4.அதிமுக, பாமக, தேமுதிக, வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், மதிமுக, இவைகள் ஒரே அணியில் சேர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

5.பா ம க பற்றி எந்த பொறமை புடிச்சவங்க கத்தினாலும்...பா ம க பத்தி கேவலமா பேசினாலும்... பா ம க வை அழிக்க யாராலும் முடியாது என்பதை இந்த தேர்தல் காட்டி விட்டது.

6.மொத்தம் 13 கட்சிகளோடு கூட்டணி ,ஓட்டுக்கு 2000 பணம், இதை எல்லாவற்றையும் மீறி தனியாளாக நின்று சுமார் 42000 ஓட்டுகள் வாங்குவது சர்வ சாதாரணம் இல்லை.'பாமக' சிங்கம் சிங்கம் தான்

7.பா ம க வெற்றிய மட்டும் ஏன் ஏற்றுக்க முடியல. அதுக்கு காரணமும் ஒரு ஜாதி வெறி. எப்படி வன்னியன் முன்னேறுறது என்ற குறுகிய மனபோக்குதான். பா ம க ஒரு ஜாதி கட்சின்னு சொல்லுற உங்களுக்கு தி மு க என்ன கட்சின்னு சொல்லுங்க பார்க்கலாம், தி மு க வும் ஒரு வன்னியானதான் நிருத்தினாங்களே ஒழிய ஒரு அடுத்த ஜாதிக்காறன நிக்க வைக்கல. இதுலுல எங்க பா ம க மட்டும் ஜாதி கட்சி. வளர்ச்சிய புடிக்காத முட்டா பசங்கதான் பா ம க ஒரு ஜாதி கட்சி சொல்லி சொல்லி அந்த வளர்சிய தடை செய்ய நினைக்கிரானுங்க.

8. தலைவர் ராமதாசு அவர்களுக்கு, இது நம் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்லலாம், ஏன் எனில் ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சியையும் எதிர்த்து இரண்டாம் இடம் பிடிப்பது என்பது எத்தகைய செயல். இது நமக்கு வேண்டுமானால் சாதரணமாக உருக்கலாம் அனால் ஆளும்கட்சிக்கும் அதிர்கட்சிக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் செயல். நம் மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் தேவை. அது மட்டும் இருந்திருந்தால் நாம் வெற்றிபெற்றே இருப்போம், இனியாவது நாம் மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கோடு அரசியல் நடத்துவோம் வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம்

9.பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லாமல் தனித்தே இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது. 2009-ல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செந்தில் 32,753 வாக்குகள் பெற்றார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி இருந்தது. இப்போது தனித்தே 41 ஆயிரம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது என்பது திமுக மற்றும் அதிமுகவில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் அரங்கில் அசைக்கமுடியாத சக்தி: பா.ம.க.

சென்னை, மார்ச் 30: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்றாலும், பா.ம.க.வுக்கும் இந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் பெரிய வெற்றியாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் போனதும், இனி தமிழகத்தில் கூட்டணிகள் உருவாகும் போது பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாது என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மட்டுமே, "ஏற்கெனவே படுதோல்வியை சந்தித்த கட்சிகள் கூட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியையே பிடிக்க முடிந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி பா.ம.க. அழிந்துவிடவில்லை' என்று கூறிவந்தார்.
இருந்தாலும் அரசியல் வட்டாரத்தில் அவரது பேச்சுக்கு யாரும் அதிக முக்கியத்துவம் தரவில்லை. எனவே தங்கள் செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டது. பென்னாகரம் இடைத்தேர்தல் இதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
1996-ல் அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பா.ம.க. சார்பில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
மற்ற இடைத்தேர்தல்களைப் புறக்கணித்து வந்த பா.ம.க. இந்த இடைத் தேர்தலில் தீவிரமாக களமிறங்கியது.
வெற்றி பெறுவோம் என்று வெளியில் கூறினாலும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்க வேண்டும் என்பதே இக் கட்சியின் குறிக்கோளாக இருந்தது. இப்போது சட்டப்பேரவைக்குச் செல்லும் வாய்ப்பை பாமக வேட்பாளர் பெற முடியாமல் போனாலும், கட்சியின் கொடியை தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுவிட்டார் என்று கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லாமல் தனித்தே இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.
2009-ல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செந்தில் 32,753 வாக்குகள் பெற்றார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி இருந்தது. இப்போது தனித்தே 41 ஆயிரம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது என்பது திமுக மற்றும் அதிமுகவில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் இருந்தாலே, தாங்கள் இல்லாமல் எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்று ஒரு கட்சியால் கூற முடியும். ÷இப்போது பா.ம.க. 41 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பதால் 2011 தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்குவதில் மீண்டும் பா.ம.க. முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக பணியாற்றாமல், கடைசியில் ஜெயலலிதா வருகை நேரத்தில் மட்டும் தீவிரம் காட்டியதே அக் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை இழந்திருப்பதற்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முந்தைய இடைத்தேர்தல்களைப் புறக்கணித்ததால் தொண்டர்களிடையே ஏற்பட்ட ஆர்வக் குறைவு, நிர்வாகிகள் மீதான அதிருப்தி, ஆரம்பத்தில் இருந்தே தீவிர பிரசாரம் செய்தாதது ஆகியவையே தங்களின் மோசமான தோல்விக்குக் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.
தேமுதிகவைப் பொருத்தவரை 2006 தேர்தலைவிட இப்போது சுமார் 600 வாக்குகள்அதிகம் கிடைத்துள்ளது. இடைத் தேர்தலில் பெரிய கட்சிகளின் கடுமையான போட்டிக்கு இடையே இவ்வளவு வாக்குகளைப் பெற முடிந்தது அந்தக் கட்சியினருக்கு ஆறுதலாகவே இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ÷2009 மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 19239 என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தேமுதிகவின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியில் இடம் பெறாமல் போனால் கட்சியின் செல்வாக்கு மேலும் குறையத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று பரபரப்பாக வாக்கு எண்ணும் இடத்தில் கட்சித் தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.
திமுகதான் தமது முதல் எதிரி என்று கடந்த வாரம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்திலும் திமுகவை அவர் கடுமையாகச் சாடினார்.
பா.ம.க.வினர் அதிமுகவை அதிகம் விமர்சிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது என்றாலும், மறுபடி கூட்டணி என்று வரும் போது வாக்கு விவரங்கள்தான் பேசப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் பென்னாகரம் தொகுதியை மட்டும் வைத்து அரசியல் கணிப்பைக் கூற முடியாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 1996-ம் ஆண்டிலேயே தனித்து வென்ற தொகுதி பென்னாகரம். இதே செல்வாக்கு மற்ற தொகுதிகளிலும் இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
இதையும் கருத்தில் கொண்டே முக்கிய கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்கும். வெற்றியா, தோல்வியா என்பதில் வேண்டுமானால் பா.ம.க. தோற்றிருக்கலாம். ஆனால் பெரிய கட்சிகளை சிந்திக்க வைக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்கியிருப்பதே பா.ம.க.வைப் பொருத்த வரையில் வெற்றிதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆளும் திமுகவை அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்கொள்ள பாமக, தேமுதிக, மதிமுக மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஒன்றை அதிமுக உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பென்னாகரம் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக முக்கிய அதிமுக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

தோல்வியிலும் வென்ற பாமக!

பென்னாகரம்: பென்னாகரம் இடைத் தேர்தலில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவை, 3வது இடத்திற்குத் தள்ளி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது பாமக.

இதன் மூலம் பாமக தனது செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளது.

பென்னாகரத்தில் 2வது இடத்தைப் பிடிக்கப் போவது பாமகவா அதிமுகவா என்ற பட்டிமன்றம் தான் கடந்த 1 மாதமாக தமிழகத்தி்ல நடந்து வந்தது.

பென்னாகரம் வன்னியர் சமூக மக்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இங்கு பாமகவின் செல்வாக்கு சற்று உறுதியாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் பாமகவின் நிலையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டன.

எனவே பென்னாகரம் தேர்தலில் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு பாமகவினர் தள்ளப்பட்டனர்.

அவர்களுடைய இலக்கு வெற்றியாக இருந்தாலும் கூட உண்மையான இலக்கு 2வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது.

பென்னாகரம் தொகுதியில் 1991ம் ஆண்டு தான் முதன்முதலாக பாமகவின் செல்வாக்கு வெளியுலகுக்குத் தெரிய வந்தது. 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்தது பாமக. அந்தத் தேர்தலில் வென்றது அதிமுகவின் புருஷோத்தமன்.

பின்னர் 1996 தேர்தலில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெற்றி பெற்றார். 2வது இடத்தைப் பிடித்த கட்சி சிபிஐ.

2001ல் நடந்த தேர்தலிலும் பாமகவின் ஜி.கே.மணியே வெற்றி பெற்றார்.

2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. அதனால் தொகுதியை திமுகவுக்குக் கொடுத்து விட்டு மேட்டூருக்கு இடம் மாறினார் ஜி.கே.மணி. அத்தொகுதியில், முன்பு பாமகவில் இருந்தவரான பி.என்.பெரியண்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இப்படி பாமகவின் ஆதிக்கமே இத்தொகுதியில் அதிகம் இருந்து வந்த நிலையில் தற்போதைய தேர்தல் சூழல் வேறு மாதிரியாக இருந்தது. லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் பாமக இனி அவ்வளவுதான், வன்னியர்கள் பாமகவை கைவிட்டு விட்டனர் என்ற பேச்சு பலமாக எழுந்தது.

இதை மாற்ற பென்னாகரத்தில் வென்றாக அல்லது 2வது இடத்தையாவது பிடித்தாக வேண்டும் என்ற நிலைக்கு டாக்டர் ராமதாஸ் தள்ளப்பட்டார்.

இதனால்தான் திமுகவுக்கு நிகராக மிக மிக வேகமான முறையில் பாமகவினரின் தேர்தல் பணிகள் இருந்தன.
அதன் உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 2வது இடத்தைப் பிடித்துள்ளது பாமக.

இதன்மூலம் தனது வலிமையை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது பாமக.

இதை வைத்து வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தன்னை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள பாமக தீவிரமாக களமிறங்கும்.

எனவே பென்னாகரத்தில் பாமக தோற்றிருந்தாலும் கூட அதன் மறு எழுச்சிக்கு இந்தத் தேர்தல் முடிவு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

Sunday, March 28, 2010

பென்னாகரம் தேர்தல்- மேச்சேரியில் மீண்டும் மோதல் - 7 பாமகவினர் கைது

பென்னாகரம்: பென்னாகரம் எல்லையில் உள்ள மேச்சேரி பகுதியில் நேற்று நள்ளிரவிலும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏழு பாமக வினரை இன்று காலை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பென்னாகரம் தொகுதியின் எல்லையில் உள்ள மேச்சேரியில் நேற்று வாக்குப் பதிவு தினத்தன்று திமுக , பாமக வினருக்கிடையே கடும் மோதல் மூண்டது. கள்ள ஓட்டுப் போட முயல்வதாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி மோதிக் கொண்டனர்.

இதில் திமுகவினரின் கார்கள் தாக்கப்பட்டன. பதிலுக்கு திமுகவினர் நடத்திய தாக்குதலில் பாமகவினரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். பெரும் பதட்டம் நிலவுவதால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். ஐந்து வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. கட்சிகளின் கொடிக் கம்பங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.

7 பாமகவினர் கைது

இதற்கிடையே, மேச்சேரி மோதல் தொடர்பாக இன்று 7 பாமகவினரை போலீஸார் கைது செய்தனர்.

மோதலில் காயமடைந்த மேச்சேரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜா, கோல்காரனூரை சேர்ந்த மணிவண்ணன் உள்பட சிலர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேரை சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று போலீசார் இன்று கைது செய்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீய சக்தி என்று பாமக மீது பழிபோடுவதா - கருணாநிதிக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: தீயசக்தி, தீவிரவாத சக்தி என்று பாமக மீது பழி போடுவதா என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பல இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த இடைத்தேர்தல்களின் போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலையொட்டி கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக பாமக மீது அவருக்கு ஆத்திரமும், வெறுப்பும் கொந்தளித்திருக்கிறது. கருத்து கணிப்பில் பாமக இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதை கூட கருணாநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தீய சக்திகள், தீவிரவாத சக்திகள் என்றும், வன்முறைக்கான தூண்டுகோல், அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள் என்றெல்லாம் பாமக மீது பழி சுமத்தியிருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பாமக எத்தகைய தீய செயலில் ஈடுபட்டு இருந்தது? எத்தகைய தீவிரவாத செயல்களை அரங்கேற்றியிருக்கிறது? எத்தனை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளது? எத்தனை அராஜக ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது? பட்டியலிட முடியுமா முதலமைச்சரால்?

தொலைபேசியில் நான் பேசியதற்கும், பின்னர் பென்னாகரத்தில் நான் பேசியதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்று ஆச்சரியப்பட்டதாகவும், பின்னர் அந்த ஆச்சரியத்தை போக்கியது கடந்தகால எனது நடவடிக்கைகளும், அறிக்கைகளும், பேச்சுகளும் என்று கருணாநிதி கூறிஉள்ளார்.

'சட்டசபை நுழைவு சாரமற்றது; அதிகார பீடம் வெறும் ஆர்ப்பாட்டம்; பட்டங்கள் வெறும் பகல் வேஷம்; மந்திரிப் பதவி முதலானவை மாயாஜாலம்; அரசியல் வித்தை' என்று ஆரம்பத்தில் முழக்கமிட்ட திமுக பின்னர் அதிகார பீடம் ஏறவும், மந்திரி பதவிகளை பிடிக்கவும் எத்தகைய வழிமுறைகளையெல்லாம் கையாண்டு வந்திருக்கிறது?

யார், யாருடன் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஆச்சரியத்தில் அனைவரின் கண்களும் விரியும்!

திமுகவில் இதுபற்றி யாராவது கேட்டால், ஆதரித்தாலும் உறுதியாக ஆதரிப்போம். எதிர்த்தாலும் உறுதியாக எதிர்ப்போம் என்று அதற்கு விளக்கம் தருவார்கள். திமுகவிற்கு பொருந்தும் இந்த இலக்கணம் மற்ற கட்சிகளுக்கு பொருந்தாதா?

பண்போடும், அன்போடும், அமைதி காக்கும் மனத்தெம்போடும் வெற்றி ஒன்றை மட்டுமே நாட்டம் கொண்டு தீயசக்திகளுக்கு இடம் கொடாமல் கருமமே கண்ணாயினார் என்ற முதுமொழிக்கு ஏற்ப பணியாற்றி, ஜனநாயகத்தை அலுங்காமல், குலுங்காமல் காத்திட வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்த தேர்தலில் பண்போடும், அன்போடும் அவர்கள் எப்படியெல்லாம் பணியாற்றினார்கள் என்று நாம் விவரிக்க தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

Friday, March 26, 2010

தண்ணீர் கொடுக்காத திமுகவுக்கு தண்ணீர் காட்ட வேண்டும்-ராமதாஸ் ஆவேசம்

பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியில் இன்று குடிநீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. மக்களுக்கு தண்ணீர் கொடுக்காத திமுகவுக்கு பென்னாகரம் வாக்காளர்கள் தண்ணீர் காட்ட வேண்டும். திமுக வென்றால் அராஜகம்தான் தலை விரித்தாடும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பென்னாகரத்தில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த்து. கடைசி நாளான நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் கடைசிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாமக சார்பில் நேற்று மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. ஜி.கே.மணி தொடங்கி வைத்த அந்த ஊர்வலத்தில், டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பென்னாகரம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த பெரியண்ணன், இத்தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார். பெரியண்ணன் நல்லது செய்தார் என யாராவது கூற முடியுமா?.

ஐந்து ஆண்டு முதல்வராக இருந்தும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை; அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று பிரசாரத்துக்கு வந்த முதல்வர் கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, 'நான் உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை. புதிய சட்டசபை கட்டடத்தை வந்து பாருங்கள்; நீங்கள் வரவில்லையென்றால், இன்பசேகரனையாவது அனுப்பி வையுங்கள்' என கூறியுள்ளார்.

இன்னும் 50 ஆண்டுகளுக்கு நல்ல முறையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை விட்டு, அவசர கதியில் புதிய சட்டசபை கட்டடத்தை கட்டி வைத்துள்ளார்.

சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. அதைப் பற்றி தான் சொல்வதற்கில்லையே.

புறம்போக்குகள் சொல்கிறார்கள்...

பா.ம.க. ஆட்டம் கண்டு விட்டது, அமைதியாகி விட்டது என புறம்போக்குகள் சிலர் கூறுகின்றனர். இப்போது சொல்கிறேன்; தி.மு.கவை அழிப்பது தான் என் முதல் வேலை. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, இத்தொகுதி மக்களை பிச்சை எடுக்க வைத்துள்ளார். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல், சாராயத்தையும், பணத்தையும், மூக்குத்தியையும் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர்.

எல்லா மக்களையும் குடிகாரர்களாக ஆக்கி விட்டனர். தமிழ்நாடு குடிகார நாடாக மாறிவிட்டது. கருணாநிதியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்; மன்னிக்கவும் கூடாது.

சட்டசபையில் இருக்கும் 50 எம்.எல்.ஏக்கள், ஆறு அமைச்சர்கள், பா.ம.க. தொண்டர்களின் உழைப்பால் தான் வெற்றி பெற்றனர். இப்போது கூறுகிறேன்; தி.மு.கவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும். தண்ணீர் கொடுக்காத தி.மு.கவுக்கு, பென்னாகரம் வாக்காளர் கள் தண்ணீ காட்ட வேண்டும். அக்கட்சிக்கு ஓட்டு போட்டால், அராஜகம் தான் தலை தூக்கும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.​ பாமரர்களுக்கும் வேலை இல்லை.​ ​ இவற்றையெல்லாம் மறைக்க,​​ ஆளும் கட்சியினர் பணத்தைக் கொட்டி வாக்காளர்களையும்,​​ மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.​ எனினும் இதையும் மீறி தோற்றுப் போவோம் என்ற பீதி ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே,​​ பா.ம.கவுக்கும்,​​ தி.மு.கவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக வதந்திகளைப் பரப்பி,​​ குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.​ இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.​ இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் உயிரோடு புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.​ எனவே ஜனநாயகத்தை வீழ்த்த முயல்வோரைப் பென்னாகரம் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும்.

வாக்களிப்பது மிகவும் ரகசியமானது.​ யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.​ எனவே,​​ பணம் வாங்கி விட்டோம் என்று கருதாமல்,​​ மனசாட்சியின்படி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Thursday, March 25, 2010

மக்கள் மனதில் பாமகவுக்கே முதலிடம்: ராமதாஸ்

சென்னை: லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு முரண்பாடாக உள்ளது. பாமகவுக்கு அவர்கள் 2வது இடத்தைக் கொடுத்தாலும், மக்கள் மனதில் பாமகவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பென்னாகரம் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தை சேர்ந்த குழுவினர் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என வாக்காளர்கள் முடிவு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை இனம் காணவும், அந்த காரணிகளின் தாக்கத்தால் வாக்காளர்களின் எண்ணப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யவும் இந்த கள ஆய்வை நடத்தியதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் கண்டறிந்துள்ள காரணிகள் மற்றும் அவற்றால் வாக்காளர்களின் எண்ணப்போக்கில் ஏற்பட போகும் மாற்றத்திற்கும், இவர்கள் கள ஆய்வில் தெரிவித்து இருக்கும் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சமே இந்த இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காரணிகளில் முதன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. வேலையில்லாத திண்டாட்டம் இரண்டாவது காரணியாக ஆய்வறிக்கை கூறுகிறது. இவைதான் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்க போகும் வாக்காளர்களின் எண்ணப்போக்கின் மாற்றங்களை உருவாக்கப்போகின்றன என்று சொல்லி விட்டு அதற்கு நேர் மாறான முடிவை ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

பென்னாகரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்திற்கும், வேலையில்லாத திண்டாட்டத்திற்கும் யார் காரணம்? எந்த ஆட்சி காரணம்? 1967-ம் ஆண்டிற்கு பின்னர் தமிழகத்தில் 5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்திருக்கிறது. ஆனாலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. வேலையில்லாத திண்டாடத்தை போக்கவில்லை. தி.மு.க. ஆட்சியின் அலட்சியம் காரணமாகவே காவிரி கரையில் வாழ்கின்ற பென்னாகரம் மக்கள் குடிநீருக்காக இன்றளவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிழைப்புக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று கொத்தடிமைகளாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மறந்து விட்டா இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு அவர்கள் வாக்களிப்பார்கள்? அப்படி சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக இல்லையா?

குடிநீருக்கு தவியாய் தவிர்ப்பதையும், பிழைப்பிற்காக சொந்த மண்ணை விட்டு வெளியேறி கொத்தடிமைகளாக வெந்து மடிவதையும் மறந்து விட்டு தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள் என்ற முடிவிற்கு கள ஆய்வை நடத்தியவர்கள் எப்படி வந்தார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது.

வாக்களிக்க பணம் கொடுப்பது தவறு என்றும், அந்த பணத்தை வாங்குவதும் தவறு என்றும் வாக்காளர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் என்று கள ஆய்வு அறிக்கையின் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்கள். பணம் கொடுப்பதில் தி.மு.க. தான் முன்னணியில் இருக்கிறது என்றும் கண்டறிந்து அறிவித்து இருக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்றும், எதுவும் செய்ய முடியாமல் ஆணையம் தவித்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு வாக்காளர்கள் தி.மு.க.விற்கு அதிகம் பேர் வாக்களிப்பார்கள் என்றும், இப்போதைக்கு அந்த கட்சி முதலிடத்தில் இருக்கிறது என்ற ஒரு முடிவிற்கு கள ஆய்வு நடத்தியவர்கள் எப்படி வந்தார்கள்? என்பது வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறது.

லயோலா கல்லூரி கள ஆய்வு முடிவு தொகுதி மக்களின் உண்மையான எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கவில்லை. உண்மை நிலைக்கும், கள ஆய்வின் முடிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணமே இந்த தேர்தலில் பிரதான இடத்தை பெற்றிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதுவே முடிவை நிர்ணயிக்கப்போவதில்லை. பணத்தை பெற்றுக்கொண்டுள்ள வாக்காளர்களில் பெரும்பாலானார் தங்களது மனசாட்சியின் படி விரும்புகின்ற கட்சிக்கு வாக்களிப்பது என்ற முடிவில் இருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் பென்னாகரம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்ற கட்சி பா.ம.க. தான். இரண்டாவது இடமல்ல. வாக்காளர்கள் மனதில் பா.ம.க. முதலிடத்திலேயே இருக்கிறது. அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

Wednesday, March 24, 2010

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டதா?பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் சந்தேகம் :ராமதாஸ்

தர்மபுரி:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, இந்த இடைத்தேர்தலிலும் பிரதானமாக பேசப்பட்டு வருவதால், திட்டம் துவங்கப்பட்டதா, இல்லையா என்ற சந்தேகம், பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் ப்ளோரைடு தன்மை அதிகம் இருப்பதால், இப்பகுதி மக்கள், 'ப்ளோரசிஸ்' நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த மாவட்ட மக்களுக்கு, காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து மட்டுமே பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும் என்றாலும், காவிரி பாய்ந்தோடும் ஒகேனக்கல் பகுதி, கடல் மட்டத்தில் இருந்து பல அடி ஆழத்தில் இருப்பதாலும், உயரத்தில் உள்ள பென்னாகரம், தர்மபுரி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தொழில் நுட்ப பிரச்னைகள் அதிகம் இருந்தது.

காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையே தொடர்ந்தது.ஒவ்வொரு முறையும் சட்டசபை, லோக்சபா தேர்தல் நேரத்தில் மட்டும், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக ஒகேனக்கல் குடிநீர் திட்டம் எதிரொலித்து வந்தது.கடந்த 2006ம் ஆண்டில், 'தி.மு.க., தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்' என, வாக்குறுதி அளித்து, தற்போது ஜப்பான் பன்னாட்டு வங்கி நிதியுதவியுடன் 1,938 கோடி ரூபாயில் திட்டப் பணிகளின் முதல் கட்ட பணி நடந்து வருகிறது.

இதனால், இடைத்தேர்தல் பிரசாரத்தில், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து பிரதானமாக இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.நேற்று முன்தினம் பிரசாரத்துக்கு வந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 'ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்படவில்லை' என பேசினார்.பா.ம.க.,வும், ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை கூறி வருகிறது.நேற்று முன்தினம் பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வர் ஸ்டாலின், ஒகேனக்கல் திட்டப் பணிகள் நடந்து வருவதாகவும், அதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், நிரூபிக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சிப் பதவிகளில் இருந்து விலகி கொள்வார்களா, திட்டப் பணிகள் நடக்கவில்லை என்றால் தன்னுடைய பணியை ராஜினாமா செய்வதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த இடைத்தேர்தலிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, பிரதானமாக பேசப்பட்டு வருவதால், திட்டம் துவங்கப்பட்டதா, இல்லையா என்ற சந்தேகம், வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு புதிய ஆபத்து வந்துள்ளது. இதில், பிரச்னை இருப்பதாகவும், பிரச்னை தீர்வுக்கு பின் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், கர்நாடகா, தமிழக தலைமை செயலர்கள் இது குறித்து சந்தித்து பேச வேண்டும் எனவும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.நாளை (இன்று) பென்னாகரத்துக்கு வரும் முதல்வர் கருணாநிதி, இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி இரு ஆண்டுகள் கிடப்பில் போட்டதற்கான காரணத்தையும், திட்டத்தில் சிக்கல் இல்லை என்பதையும், இரு மாநில தலைமை செயலர்கள் சந்தித்து பேச வேண்டியது இல்லை என அறிவிக்க வேண்டும். அப்போது தான் திட்டம் குறித்து தெளிவு கிடைக்கும்.இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

ராமதாஸ் பிரசாரத்துக்குஅனுமதி மறுப்பு:பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் பிரசாரம் செய்ய ராமதாஸ், அன்புமணி இருவரும் திட்டமிட்டிருந்தனர். நேற்று, ஜெயலலிதா வருகையால் பா.ம.க., பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதேபோல், இன்று பென்னாகரம் பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் ராமதாஸ் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், முதல்வர் கருணாநிதி வருகையாலும், பொதுக்கூட்டம் நடப்பதாலும் ராமதாஸ் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே ராமதாஸ் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Tuesday, March 23, 2010

'தோல்வி பயம் காரணமாக பென்னாகரம் வரும் கருணாநிதி'-ராமதாஸ்

பென்னாகரம்: தோல்வி பயம் காரணமாகத் தான் முதல்வர் கருணாநிதி பென்னாகரத்துக்கு பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பென்னாகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

1962ல் காங்கிரஸ் பணம் கொடுத்து ஓட்டு வாங்கியது என்று அண்ணா பிரசாரம் செய்து திமுகவை வளர்த்தார். ஆனால் இன்று அண்ணாவை தலைவராக கொண்டு இருக்கும் கலைஞர் தலைமையிலான திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதோடு நின்று விடுகிறது. தொகுதியில் விதிமுறைக்கு மீறி நடப்பவைகளை கண்டிப்பதில்லை.

பென்னாகரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவருக்கு ரூ. 50 லட்சம் செலவில் பிரமாண்டமான ஏப்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் பென்னாகரத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ. 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

திமுகவில் சேர வேண்டும் என்று பாமக தொண்டர்களை மிரட்டி வருகிறார்கள். ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் பாமகதான் வெற்றி பெறும்.

தோல்வி பயத்தில்தான் முதல்வர் கருணாநிதி பென்னாகரத்துக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்றார் ராமதாஸ்.

ஒகேனக்கல் திட்டம்-ராமதாஸ் 'கிடுக்கிப்பிடி':

இந் நிலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கருணாநிதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டே இதற்கான தடையில்லாச் சான்றிதழை மத்திய அரசு அளித்திருந்தாலும், தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தியபோது கர்நாடகாவில் பிரச்சனை வெடித்தது.

ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என கர்நாடக கட்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு கிளம்பின. அப்போது கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடந்து கொண்டிருந்ததால் கர்நாடக கட்சிகள் இவ்விவகாரத்தை பயன்படுத்தின.

இதற்கு பதிலடியாக தமிழகத்தில் உள்ள அமைப்புகளுடன், நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து, ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என உண்ணாவிரதம் இருந்து, நட்சத்திர போராட்ட களேபரங்கள் நடந்தேறின.

அப்போது இவ்விவகாரத்தில் தலையிட்ட முதல்வர் கருணாநிதி தேர்தல் முடியட்டும், பொறுமையாக இருங்கள். அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி தற்காலிமாக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் அதன் பின்னர் நீண்டநாட்களாக மறக்கடிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தற்போது பென்னாகரம் இடைத்தேர்தலை ஒட்டி மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு ஆயுதமாக சிக்கியுள்ளது.

கடந்த வாரம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் கர்நாடகத்தில் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

முதல்வர் கருணாநிதியின் அன்பு சகோதராக வர்ணிக்கப்படும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, ஒகேனக்கல் திட்டத்தில் பிரச்னை உள்ளது. அதை சரி செய்யாமல் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். இதுபற்றி தமிழகத்துடன் பேசுவோம் என்று கூறியிருந்தார்.

ஜப்பான் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு ரூ.1,938 கோடி செலவில் திட்டப் பணிகள் நடந்து வருவதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினாலும், பிரதான திட்டப் பணிகள் துவங்கும் சமயத்தில் கர்நாடகா தரப்பில் முட்டுக்கட்டை விழாமல் இருக்காது என்றே கருதப்படுகிறது.

கர்நாடகாவின் எதிர்ப்பை சமாளித்து, கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை உரிய முறையில் தொடங்கி நடத்துவது என்பது தமிழக அரசுக்கு சவாலாகவே அமையும்.

இந்த சூழலிலை பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு மிக லாவகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஒகேனக்கல் திட்டத்தை தாமதப்படுத்தி, தர்மபுரி மாவட்ட பென்னாகரம்வாசிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் வறட்சி நிலையை ஏற்படுத்தியதற்கு திமுகவே காரணம் எனக் கூறி வாக்காளர்களை உசுப்பேற்றி உள்ளார்.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸும் இதே அஸ்திரத்தை தன் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார்.

இதுபற்றி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெங்களூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கர்நாடகமும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடும், காவிரி தண்ணீரில் அவரவருக்கான பங்கீட்டிலிருந்து நிறைவேற்றி கொள்ளலாம் என பல ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டவுடனேயே கர்நாடக அரசு, வேகவேகமாக பெங்களூர் குடிநீர் திட்டத்தை தொடங்கி நிறைவேற்றியது. ஆனால், தமிழக அரசு மட்டும் ஒகேனக்கல் திட்டத்தை நீண்டகாலமாக கிடப்பில் போட்டு விட்டது.

பெங்களூர் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றத் தொடங்கியிருந்தால், இந்நேரமும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களின் தாகம் தீர்ந்திருக்கும்.

ஜப்பான் நாட்டில் இருந்து நிதி உதவி வரவேண்டும் என்று தமிழக அரசு காலம் கடத்தியது. அதன் விளைவாக இன்றைக்கு காவிரி கரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தண்ணீருக்காக தவித்து நிற்கிறார்கள்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான உடன்பாடு கையெழுத்தான 10 ஆண்டுகள் கழித்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போதாவது போர்க்கால அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால், இடைப்பட்ட 2 ஆண்டு காலத்தில் திட்டத்தை நிறைவேற்றி முடித்திருக்கலாம்.

பென்னாகரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு முதல்வர் கருணாநிதி வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரை நடந்த இடைத் தேர்தல்களின் போதெல்லாம் பிரசாரத்திற்காக செல்லாத முதல்வர், பென்னாகரத்தில் மட்டும் பிரசாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

அவர் வருவதற்கு முன்பாக அவரது அன்பு சகோதரர் எதியூரப்பா சொல்வதை போல, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவிப்பு செய்ய வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் இடையில் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தையும், அதற்கு யார் காரணம்? என்பதையும் அவர் பென்னாகரம் தொகுதி வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும்.

எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும், மனச்சாட்சியின்படி வாக்களிப்போம் என்ற உறுதியான முடிவிற்கு பென்னாகரம் வாக்காளர்கள் வந்திருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பு வழங்கி, ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் ஆண்டு கணக்கில் காலம் கடத்தியவர்களுக்கு சரியான பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Saturday, March 20, 2010

தமிழக அரசின் பட்ஜெட் கசக்குது-ராமதாஸ்

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

11வது ஐந்தாண்டுத் திட்டம் விரைவில் நிறைவடையப் போகிறது. மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிற மக்கள் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதே இந்த ஐந்தாண்டு திட்டக் காலங்களில் முக்கியமானது.
ஆனால், 6 கோடி மக்களில் மூன்றரை கோடி பேர் இன்னமும் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வேட்டி, ஒரு சேலை கூட வாங்க முடியாத நிலையில் வறுமையில் உள்ளனர் என்று தமிழக முதல்வரே கூறியுள்ளார்.

இந்த வறுமைக்கு, மது வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதுதான் காரணம். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் மது வருமானம் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அப்பாவி மக்களின் வருமானத்தைச் சுரண்டி, அரசு வருமானத்தை பெருக்குவது மக்கள் நல அரசின் இலக்கணமாக இருக்க முடியாது. படிப்படியாக மதுவிலக்கு என்ற கொள்கையை அறிவித்துள்ள அரசு, அதற்கான முயற்சியை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Friday, March 12, 2010

பென்னாகரத்தில் வேட்டி, சேலை, அரிசி ஏற்றிச் சென்ற லாரிகள் சுற்றிவளைப்பு!

பென்னாகரம்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரத்தில் வேட்டி, சேலை மற்றும் அரிசி மூட்டைகளுடன் வந்த 2 லாரிகளை பாமகவினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி அரசியல் கட்சியினர் மும்முரமாக பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகள் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்குவதாக புகார் [^] கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பென்னாகரத்தில் ஒகேனக்கல் பிரிவு சாலையில் 2 லாரிகள் சென்றன. அந்த லாரிகளை பாமகவினர் திடீரென்று வழிமறித்து நிறுத்தினர்.

கூட்டத்தினரை கண்டதும், டிரைவர்கள் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்கள். அப்போது பாமகவினர், 'வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 2 லாரிகளிலும் வேட்டி-சேலைகள் கொண்டு செல்லப்படுகிறது' எனக் கூறி கோஷமிட்டனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து உதவிகலெக்டர் முன்னிலையில் லாரி சோதனையிடப்பட்டது.

அப்போது 2 லாரிகளிலும் அரிசி மூட்டைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் வேட்டி-சேலைகள் இருப்பது தெரிய வந்தது.

உடனே பாமகவினர் ஓரமாக நின்று கொண்டிருந்த 2 லாரி டிரைவர்களையும் பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

உடனே பாமகவினர் லாரிகளின் சக்கரத்தில் இருந்த காற்றை பிடுங்கி விட்டனர். லாரிகளை சுற்றி அமர்ந்துகொண்டனர்.

கலெக்டர், தேர்தல் பார்வையாளர்கள் இங்கு வந்து விசாரணை நடத்த வேண்டும், வேட்டி-சேலைகளை கொண்டு வந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

பின்னர் தேர்தல் பார்வையாளர் உத்தரவுப்படி 2 லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொகுதியில் 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் இருந்தும் போலீஸ் பாதுகாப்புடன் ஆளுங்கட்சியினர் இவ்வாறு பொருட்களை கொண்டுச் செல்வதாக பாமக எம்எல்ஏ தமிழரசு புகார் கூறினார்.

Thursday, March 11, 2010

பென்னாகரம்: வேலு இயக்கத்தில் டிராமா போடும் திமுக- ராமதாஸ்

தர்மபுரி: அமைச்சர் வேலு இயக்கத்தில் திமுக மிகப் பெரிய நாடகத்தை பென்னாகரத்தில் அரங்கேற்றி நடத்திக் கொண்டிருக்கிறது. பென்னாகரத்தை போர்க்களமாக மாற்றி வெற்றியைத் தட்டிப் பறிக்க முயன்று வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

தர்மபுரியில் அவர் இதுதொடர்பாக அளித்த பேட்டி...

தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம் என வர்ணிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடக்கும் பென்னாகரம் தொகுதி போர்க்களமாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. பா.ம.க.,வினரை கோபப்படுத்தி, ஆத்திரம் மூட்டி, தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி, பல்வேறு குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கு பதிவு செய்து, பின் கைது செய்து தேர்தல் பணிகளில் பா.ம.க.,வினரை முடக்கிட வேண்டும் என, திட்டமிட்டு நாடகம் அரகேற்றப்பட்டு வருகிறது.

இந்த நாடகத்தின் இயக்குனராக தி.மு.க., தொகுதி தேர்தல் பொறுப்பாளர், தி,மு.க.வின் புதிய வரவாக வந்துள்ள, புதிய கோடீஸ்வரர் அமைச்சர் வேலு செயல்பட்டு வருகிறார். மாவட்டத்தில் சில அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு குறிப்பிட்ட டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களை நடிக்க வைத்து கொண்டிருக்கிறார். சோதனை சாவடிகளில் அமைதியான முறையில் வாகன சோதனை நடத்துவது தவறில்லை.

திமுக கார்களுக்கு மட்டும் சல்யூட்...

சமூக விரோதிகள், ஆயுதங்கள் செல்கிறதா, தேர்தல் சட்ட விதிமுறைக்கு எதிராக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆளுங்கட்சி வாகனங்கள் சோதனை செய்வதில்லை; சுதந்திரமாக சோதனை சாவடிகளை கடந்து செல்கிறது. தி.மு.க., வாகனங்கள், "சல்யூட்' அடுத்து அனுப்பி வைக்கப்படுகிறது. பா.ம.க., வாகனங்கள் சோதனை என்ற பெயரில் வாகனங்களை முடக்க செய்கின்றனர்.

அன்புமணி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யாமல் காக்க வைத்து, பா.ம.க.,வினர் ஆத்திரம் அடைய செய்து பின் தடியடி நடத்தியுள்ளனர். சம்பவம் நடந்த சோதனை சாவடியில் நேற்று அமைச்சர் வேலு கார் சோதனை செய்யப்பட்டதாக ஒரு நாடகம் நடந்துள்ளது. அதோடு, சட்டத்தின் முன் அமைச்சர் முதல் அனைவரும் சமம் என, அமைச்சர் வேலு உபதேசம் வேறு செய்துள்ளார்.

இது வரை எத்தனை முறை வேலு மற்றும் தி.மு.க., அமைச்சர்கள் தொகுதிக்குள் சென்றுள்ளார்கள்; அவர்கள் வாகனங்கள் எல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? என்பதை வீடியோ ஆதரத்தோடு எங்களுக்கு காட்டி அதிகாரிகள் நடுநிலையுடன் நடப்பதை தெளிவு படுத்த வேண்டும்.

மூட்டை மூட்டையாக பணம்...

தொகுதியில் பல இடங்களில் வேட்டி, சேலைகள், வாக்காளர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் பணம் கொடுக்க மூட்டைகள் எப்படி தொகுதிக்குள் வந்தது. சிலவற்றை நாங்கள் பிடித்து கொடுத்துள்ளோம். சில இடங்களில் அதிகாரிகள் கணக்கு காட்ட பிடித்துள்ளனர். இது போன்று பிடிக்கப்பட்ட பொருட்கள் எப்படி தொகுதிக்குள் சென்றது.

பத்திமரன்அள்ளியில் ஒரு வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் பணம் மூட்டைகள் இருந்துள்ளது. போலீஸாருக்கு தகவல் சொன்னால் இரு போலீஸார் மட்டுமே அங்கு வந்தனர். உயர் அதிகாரிகள் வரவில்லை. அந்த வீட்டில் 3 லட்ச ரூபாயை தீயில் போட்டு எரித்ததாக சொல்கின்றனர்.

மணிக்காரன்கொட்டாயில் இரண்டு சூட்கேஸில் இருந்த பணம் குறித்து தகவல் தெரிவித்து, டி.எஸ்.பி., வந்தும் அந்த பணத்தை மக்கள் முன்னிலையில் வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிலைக்குழு அமையுங்கள்...

தேர்தல் நடத்தை விதிமுறையில் ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட அளவில், தொகுதி அளவில் நிலைக்குழு அமைக்க வேண்டும் என விதி உள்ளது. பென்னாகரம் தொகுதியில் நிலைக்குழு அமைக்கப்படவில்லை. நிலைக்குழு அமைக்கப்பட்டால், உள்ளூர் பிரச்னைக்கு தலைமை தேர்தல் கமிஷன் அளவில் சென்று புகார் செய்ய வேண்டியது இல்லை.

தேர்தலை நியாயமான முறையில் நடத்திட எஸ்.பி., மற்றும் தாசில்தார் டியூக் பொன்ராஜ் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். குறைந்த பட்சமாக பணி இடமாற்றமாவது செய்திட வேண்டும்.

திருச்செந்தூர் தொகுதியில் தேர்தலை நியாயமான முறையில் நடத்திய எஸ்.பி.யை போன்ற நேர்மையான அலுவலர்களை நியமிக்க வேண்டும். பா.ம.க.,வினர் தேர்தலை அமைதியாக நடத்த முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

எங்களை ஆத்திரமூட்டக் கூடாது...

எங்களை ஆத்திரமூட்டும் வகையில் நடத்த கூடாது. நேற்று முன்தினம் நடந்த தடியடி சம்பவம், "என் கவுண்டர்' நிகழ்வு போல் போலீஸார் நடத்தியுள்ளனர். போலீஸார் நடுநிலை யுடன் செயல்பட வேண்டும். காவல் துறை அமைச்சர் வேலுவின் ஏவல் துறையாக செயல்பட கூடாது. தொகுதியில் பதிவு எண் இல்லாமல் சுற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம் தோறும் பண மேளா...

நேற்று முன்தினம் இரவு தி.மு.க.,வினர் கிராமங்கள் தோறும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும், பண மேளா நடத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு முதல் கட்டமாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாம், மூன்றாம் கட்டம் என பணம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அமைச்சர் அன்பரசுக்கு தி.மு.க.,வில் ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிக்கான அதிர்நத்தம், தென்னப்பள்ளம் ஆகிய கிராமங்களில் 1,000 ரூபாய் மற்றும் வேட்டி, சட்டை, பேண்ட், சர்ட் பேக்கேஜ் செய்து கொடுத்துள்ளனர்.

நேற்று அதிகாலை வரையில் எல்லா கிராமங்களிலும் பணம் அன்பளிப்பு பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றார் ராமதாஸ்.

Monday, March 8, 2010

திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை

தர்மபுரி: இடைத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் காரை துப்பாக்கி ஏந்திய போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றதையடுத்து பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பென்னாகரம் அருகே தின்னப்பட்டியில் பிரச்சாரத்துக்கு சென்ற ராமதாஸின் கார் நத்தஹள்ளி பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

கார் கண்ணாடிகளை இறக்கிய ராமதாஸ், தன்னை யார் என்று அடையாளப்படுத்தினார். அப்போது சோதனைச் சாவடியில் இருந்த 2 துப்பாக்கி ஏந்திய போலீஸார், காரை சோதனை செய்ய வேண்டும் என கூறினர்.

இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் அவருடன் மற்ற கார்களில் வந்த தொண்டர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் செயலை கண்டித்து ராமதாஸ் காரில் அமர்ந்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் இருந்த நூற்றுக்கணக்கான பாமகவினரும் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி சுதாகர், நடந்த நிகழ்ச்சிக்காக ராமதாசிடம் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது மறியலை ராமதாஸ் கைவிட்டார்.

இது குறி்த்து பென்னாகரம் தொகுதி பாமக பொறுப்பாளரான எம்எல்ஏ வேல்முருகன் கூறுகையில்,

பிரசாரத்துக்கு வந்த எங்கள் தலைவரின் கார் மட்டும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. ஆனால், திமுக முக்கிய நிர்வாகிகள் சென்ற கார்களை போலீசார் எநத சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. ராமதாசின் காரை சோதனை செய்து பாமகவுக்கு அவமானத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்தனர் என்றார்.

திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை:

இந் நிலையில் பென்னாகரத்தில் திமுக-பாமகவினர் இடையே ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த இரு பாமகவினர் பென்னாகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில்,

பென்னாகரம் இடைத்தேர்தலில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்காமல், வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, செல்போன்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர். அதை நிறுத்த வேண்டும். இதைத் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.

தேர்தல் பணியாற்றி கொண்டிருந்த பாமக நிர்வாகிகள் 11 பேரை திமுகவினர் தாக்கியுள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெற திமுகவினர் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் பாமக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கும் என்றார்.

Saturday, March 6, 2010

மக்கள் டிவி மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது-பாஜக

சென்னை: மக்கள் டிவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருப்பதும், அதையொட்டி கருத்துக்கள் தெரிவிப்பதும், விமர்சிப்பதும் இயல்பானது. ஆனால் சமீப காலமாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு மீடியாவின் செய்திகளுக்கு அவற்றின் அலுவலகங்களை முற்றுகையிடுவதும், கட்சி அலுவலகங்களை தாக்குவதும் அதிகரித்து வருவது கவலையளிக்க கூடியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயக நெறிமுறைகளை தாண்டிய வன்முறை அரசியல் கட்சி தொண்டர்கள் இடையே ஒழுங்கையும், நல்லிணக்கத்தையும், குழிதோண்டி புதைப்பதாக உள்ளது. வன்முறை எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை தாண்டி கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் அடைப்பு...

இதற்கிடையே, மக்கள் டிவி அலுவலகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக கைதான 99 பாமகவினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அனைவர் மீதும் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, March 5, 2010

மக்கள் தொலைக்காட்சி மீது தாக்குதல்: ராமதாஸ் கண்டனம்

சென்னை, மார்ச் 5- மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இத்தாக்குதலில், தொலைக்காட்சியின் அலுவலகம் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. விலை உயர்ந்த ஒளிப்பதிவு கருவிகள் சேதமடைந்துள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நொறுக்கப்பட்டன. தொலைக்காட்சியின் பெண் ஊழியர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட பல ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை குறித்து மற்றவர்களை விட அதிகம் பேசி வருபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். அதற்கு மாறாக இன்று அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கியிருப்பதன் மூலம் உண்மையில் அவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் நடத்தி வருகிற வன்முறை கலாச்சாரத்தை இன்று தமிழகத்திலும் அரங்கேற்றியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறு என்று கருதினால் அதற்கு ஜனநாயக ரீதியில் மறுப்பு அறிக்கை வெளியிடலாம்.

சம்பந்தப்பட்ட செய்தி வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மக்கள் தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு, மறுப்பு அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அவ்வாறு மறுப்பு அறிக்கை வெளியிட்டால் அதை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக தொலைக்காட்சியின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரத்திலும், கருத்து சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சியினரும் அனைத்து அமைப்பினரும் இந்த தாக்குதலை கண்டிக்க முன்வர வேண்டும்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 3, 2010

ரூ.7,030 கோடி 'விவசாய நிழல் பட்ஜெட்'-வெளியிட்டார் ராமதாஸ்

சென்னை: விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில ஆண்டுகளாக வேளாண் நிழல் பட்ஜெட் வெளியிட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் வேளாண் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த பட்ஜெட் ரூ.7,030 கோடி அளவிற்கு திட்ட மதிப்பீடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமதாஸ் கூறுகையில்,

இந்த பட்ஜெட் ரூ.7,030 கோடி அளவிற்கு திட்ட மதிப்பீடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தியில் வேளாண் பிரிவு முதன்மையானதாக கருதப்பட்டாலும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், இரண்டாம் நிலையில் இருக்கும் தொழில் பிரிவிற்கும், மூன்றாம் நிலையிலிருக்கும் சேவைப் பிரிவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து, அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

உணவிற்குப் பின்தான் 'வசதிகள்' என்ற உண்மையை உணர்ந்து அரசுகள் செயல்படாவிட்டால் உணவுப் பற்றாக்குறையும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஏற்பட்டு 'உணவு வீக்கத்திற்கு' வழிவகுத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் குலைத்துவிடும்.

எனவே வேளாண்மையை முதன்மை நிலையில் நிறுத்துவதற்கான முக்கியத்துவத்தை கொடுக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயத்துறை வளர்ச்சி 2 சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. அதை 4 சதவீத அளவிற்கு உயர்த்தும் வகையில் இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதத்துக்கு மேல் நிலப்பரப்பில் பருவ மழையை நம்பியிருக்கும் புன்செய் நிலங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இன்று உணவிலும், ஊட்டச்சத்துகளிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதனால் புன்செய் நிலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் உற்பத்தி செய்து, அவற்றை உரிய விலைக்கு கொள்முதல் செய்து, பொது வழங்கல் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்ய இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் நிரந்தர வருமானம் பெற 'உழவர் ஊதியக் குழு' அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் குறைந்தப்பட்சமாக ஆண்டுக்கு ரூ. 25,000 வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம் கிடைக்க வழி செய்யப்படும்.

அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு இருப்பதுபோல் விவசாயிகளுக்கு இந்த ஊதியக் குழு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டு அவர்களது ஊதியம் உயர்த்தப்படும்.

நகரங்களில் வீட்டுக்கு ஒரு செடி திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கான செடிகள், விதைகள், இடுபொருட்கள் முதலியவற்றைக் கொடுத்து உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வீட்டைச் சுற்றி இடம் வைத்திருப்பவர்கள் வீட்டுத் தோட்டம் போடுவதற்கும் வசதிகள் செய்து தரப்பபடும்.

நகரங்களில் பால் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த பாலோடு கீரை வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழக சட்டசபைக்கு நியமன எம்எல்ஏக்களாக 2 விவசாயிகளை நியமிக்க வேண்டும். இதன் மூலம் சட்டமன்றத்தில் விவசாயிகளின் கோரிக்கை சரிவர கவனிக்கப்படும் என்றார் ராமதாஸ்.

Tuesday, March 2, 2010

பாமக எம்எல்ஏக்களுக்கு கொலை மிரட்டல்!:

இந் நிலையில் பாமக எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு தரக் கோரி காவல்துறை மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை வினியோகிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றன.

இந் நிலையில் பாமக எம்எல்ஏவும் அக் கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவருமான வேல்முருகன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு கடந்த வாரம் ஒரு புகார் அனுப்பினார்.

அதில், பென்னாகரம் தொகுதியில் ஒரே இரவில் அதிகாரிகள் உதவியுடன் 32,000 குடும்பங்களுக்கு, வேஷ்டி, புடவை, ஜாக்கெட், துண்டு, மற்றும் ரூ. 3,000 வழங்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

மேலும், இதுபோன்ற புகார்களை அனுப்புவதால், என் மீது கோபம் கொண்டவர்கள், என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.

இது குறித்து நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில்,

பாமக அளித்த புகாரைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரை விசாரணை அறிக்கை அனுப்புமாறு ஞாயிற்றுக்கிழமையன்று அறிவுறுத்தியிருந்தேன். கலெக்டர் விடுப்பில் சென்றிருந்ததால், தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி ரவிகுமார் தான் அறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதேபோல எஸ்பி சுதாகரும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், பல இடங்களில் வேஷ்டி, சேலைகள் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பியுள்ள அறிக்கையில், மாதேஹல்லி கிராமத்தி திமுக பிரமுகரிடமிருந்து 35 வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வல்லூர், சேக்காடு, ஒண்டிக்கோட்டை கிராமங்களில் இருந்தும் வேஷ்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட இடத்தில் இருந்தும் வேஷ்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பென்னாகரத்தில் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பாமக எம்.எல்.ஏ. வேல்முருகனுக்கும் அதே அளவில் பாதுகாப்பு தருமாறு போலீசாருக்கு கடிதம் எழுதவுள்ளேன்.

தேர்தலின்போது மத்திய படை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. காவல்துறையினர் நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்பட்டால் இடைத் தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவைப்படாது.

நேர்மையாகவும், நடுநிலையாகவும், நெருக்கடிக்கு பணியாமலும் தேர்தல் பணிகளை போலீசார் மேற்கொள்வதை உள்துறை செயலாளரும், டிஜிபியும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் குப்தா.

புதுச்சேரி பாமக எம்எல்ஏவுக்கும் கொலை மிரட்டல்:

இந் நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி பாமக எம்.எல்.ஏ அனந்தராமன், பொன்னகரத்தில் பாமக வேட்பாளருக்காக இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந் நிலையில் அவரது வீட்டுக்கு வந்துள்ள ஒரு கடிதத்தில், ஒரு ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. எனவே நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

அந்த தபாலில் அனுப்புனர் முகவரியில் எஸ். முருகன் நோணாங்குப்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. வர்மாவிடம் அனந்தராமன் புகார் அளி்த்துள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: