Thursday, October 13, 2011

பாமக வித்தியாசமான கட்சி: ராமதாஸ் பேச்சு

சேத்தியாத்தோப்பில் நேற்று இரவு பாமக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர், ‘’பாமக ஒரு வித்தியாசமான கட்சி என்பதை மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாமக உள்ளது.

அதனால் தான் படித்தவர்கள், பெண்கள், விவசாயிகள் ஆதரவு பெருகி வருகிறது. விவசாய வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி பாமக. தமிழ்நாட்டை பாதுகாக்க பாமகவால் மட்டுமே முடியும் என படித்தவர்கள் கூறுகிறார்கள்.

பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை திராவிட கட்சிகள் குழிதோண்டி புதைத்து விட்டன.

சாராயத்தை கொடுத்து மக்களை சீரழித்து விட்டார்கள். இப்போது ஓட்டுக்கும் சாராயம் கொடுக்கிறார்கள். 2016ல் பாமக ஆட்சி அமைக்கும். அப்போது சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பாமக போராடும் கட்சி. உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும். அனைவரும் பாமகவை ஆதரிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

Friday, October 7, 2011

2016 ல் பா.ம.க. ஆட்சி

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,


உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும். இதனை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளோம். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி ஆகியவற்றுக்கு உள்ளாட்சிக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். இதற்கு முடிவு எடுத்து செயல்படுத்துகிற அதிகாரத்தை உள்ளாட்சிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.


மாநிலத்துக்கு சுயாட்சி கேட்கிற திராவிட கட்சிகள் உள்ளாட்சி அமைப்புக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு 10 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையின் ஐகோர்ட்டின் 8 வாரகால அவகாசம் முடியும் தறுவாயில் உள்ளது. 3 பேரும் புதிய மனுக்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளனர். தமிழக அமைச்சரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


நெல் கொள்முதல் விலையை அ.தி.மு.க. அரசு ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் கரும்பு டன்னுக்கு ரூ.2,500 அளிக்க வேண்டும்.


ராமேஸ்வரம் மீனவர்களை தொடர்ந்து தற்போது நாகை மீனவர்களும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இலங்கை அரசு கடுமையான விளைவுகள் சந்திக்க வேண்டி வரும் என்று இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, நடுநிலையோடு நடத்த வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெற தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். சாராயம் இல்லாமல் இருந்தால் தேர்தல் அமைதியாக நடைபெறும்.


சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து நின்று இருந்தால் 40 50 தொகுதிகளில் வெற்றி கிடைத்து இருக்கும். 11 சதவீத புதிய வாக்காளர்கள் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அ.தி.மு.க.வுக்கு ஓட்டு அளித்துள்ளனர்.


பா.ம.க. இனிமேல், திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் இணையாது. தனித்து போட்டியிடும். வருகிற 2016 ல் பா.ம.க. ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்போம்.


வேலூர் மாநகராட்சியில் 36 வார்டுகளில் பா.ம.க. போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெருமளவில் வெற்றி பெறுவோம்.


இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: