Monday, December 31, 2012

அதிமுகவின் தனித்துப் போட்டி முடிவுக்கு பாமக 'பலத்த' வரவேற்பு-திமுகவையும் சீண்டுகிறது

சென்னை: லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அதிமுக எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம். இதேபோல திமுகவும் தனித்துப் போட்டியிட முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓராண்டுக்கு முன்பு 2 சவால்கள் விடுத்தேன். இனி வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும். அதுபோல் இரு கட்சிகளும் போட்டியிடத் தயாரா? வாக்காளர்களிடம் வாக்கு பெறுவதற்காக ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்கத் தயாரா என்று இரண்டு சவால்கள் விடுத்தேன்.

இதில் முதல் சவாலை அதிமுக ஏற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது சவாலையும் அதிமுக ஏற்க முன் வரவேண்டும்.

அதேபோல திமுகவும் தனித்துப் போட்டியிட தயார் என்று அறிவிக்க வேண்டும். அதனை சவாலாக அல்லாமல் திமுகவுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.

1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. இது அதிமுக ஆட்சியிலும் நீடித்து வந்துள்ளது. 2016-ல் பாமக நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது பூரண மதுவிலக்கு கட்டாயம் அமல்படுத்தப்படும். இரு திராவிடக் கட்சிகளுக்குமே நிர்வாகம் செய்யும் திறமை இல்லை.

ஊழிலின் ஊற்றுக்கண் திமுக என்றால், அதை ஆற்றுநீராகப் பெருக்கியது அதிமுக.

ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கிறோம் என்று இப்போது தமிழகம் இருள்மயமாகி உள்ளது. விவசாயம் நசிந்துவிட்டது. கல்வியை அரசே தனியாருக்குத் தாரை வார்த்துள்ளது. அதனால் திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

பட்டியல் இனத்தில் இருக்கும் 75 தலித் இனத்தவருக்கோ, காதல் திருமணத்துக்கோ பாமக எதிரான இயக்கம் இல்லை. காதல் என்ற பெயரால் கபட நாடகமாடி பணம் பறிப்பவர்களுக்கும், வன்கொடுமை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு சிலருக்கும்தான் பாமக எதிரானது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கோரியும், காதல் என்ற பெயரால் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிப்ரவரி 6-ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை என் போராட்டம் ஓயாது என்றார் ராமதாஸ்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இன்று நடைபெற்ற பாமகவின் பொதுக்குழுவில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தாமதமின்றி அரசிதழில் வெளியிட வேண்டும், காவிரி பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்; தமிழ் நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் நுழையாமல் தடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதிப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசுக்கு பொதுக் குழுவில் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது



சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் 2012-ம் ஆண்டில் பாமகவின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பது தொடர்பாக விவாதிக்க ப்படுவதுடன், 2013-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது

புத்தாண்டு : ராமதாஸ் வாழ்த்து

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராமதாஸ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொரு இரவுக்கும் பின்னே புதிய விடியல் என்ற நம்பிக் கையுடன் 2013ம் ஆண்டு பிறக்கிறது.

புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிற அனைத்து மக்களு க்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித் துள்ளார்
.

Saturday, December 29, 2012

இந்தியா இன்னும் உண்மையான சுதந்திரம் அடையவில்லை: அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்: ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தில்லியில் ஓடும் பேரூந்தில் கயவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், கவலையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நள்ளிரவில் பெண்கள் எந்தவித அச்சமும், பாதிப்புமின்றி சுதந்திரமாக நடமாடும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று தான் இந்திய உண்மையான சுதந்திரம் அடைந்ததாக கருதமுடியும் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் கூறியிருந்தார்.
அதன்படி பார்த்தால் இந்தியா இன்னும் உண்மையான சுதந்திரம் அடையவில்லை என்று தான் கருதவேண்டியிருக்கிறது. இது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.
தில்லியில் மட்டுமின்றி, தமிழகத்திலும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. நேற்று கூட வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இனிவரும் காலத்திலாவது இதுபொன்ற கொடூரங்கள் நிகழாமல் தடுத்து இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத் தருவதும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தருவதும் தான் தில்லி மாணவிக்கும், தமிழகத்தின் புனிதாக்களுக்கும் நம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, December 27, 2012

பெரியாரே காதலை எதிர்த்தவர் : ராமதாஸ்



நாடக காதல் திருமணங்களால் பெண்கள் வாழ்க்கை பாதிக்கபடுகிறது பெண்ணியத்துக்கு எதிரானது மனித உரிமைக்கு எதிரானது தமிழ் பண்பாட்டிற்கே எதிரானது தமிழ் பண்பாட்டில் காதலே இல்லை என்றார் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சேலம் ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க ராமதாஸ்.
அப்போது 'அகநானூறு புறநானூறு' என்றுதானே தமிழ் இலக்கியங்கள் வாழ்வியலே அமைந்துள்ளன என பத்திரிக்கையாளர்கள் கூறியபோது, ‘’ அது வேறு’’ என்றார் ராமதாஸ்.
தொடர்ந்து, 'பெரியாரே காதலை எதிர்த்தவர் என்று சொல்லி, கீ.வீரமணி தொகுத்த பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை என்ற நாலாம் பாகத்தில் பெரியார் காதலை திட்டி எதிர்த்து பேசியது உள்ளது என்று படித்து காட்டினார்.பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க வெறும் பி.சி எம்.பி.சி மக்கள் மட்டுமல்ல எப்.சி எனும் உயர் சாதியினரும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்...பிராமண சங்க தலைவர் நாராயணன் எங்களுக்கு முழு ஆதரவு தரார். அவர் பாணியில் சொல்லனும்னா 'உங்களுக்கு ஆதரவு தருவது எங்களுக்கு பரிபூரண சம்மதம் 'என்றார்.

இந்த நாடக காதல் திருமணங்களால் பிராமணர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் சைடில் பலர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி எவனாவது வாலாட்ட முடியுமா?அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன்ன நிற்போம். காவல்துறை அரசுகிட்ட போவோம் கடத்தி போனவனை இழுத்துவந்து பெண்ணை மீட்ப்போம்...ஆனால் நாங்கள் வன்முறை அமைப்பில்லை....வன்முறை கூடாது எனும் அமைப்பு' என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கோ.க மணி,அகில இந்திய தேசிய பார்வர்டு ப்ளாக் தலைவர் அரசகுமார் உட்பட்ட பல்வேறு அமைப்பினரும் கூட இருந்தனர்.

என்னை ஊருக்குள் வரக்கூடாது என்று


மதுரையில் ஒரு கூட்டத்தில் ராமதாஸ் பேசிய பேச்சு, குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறி வைத்து பேசப்பட் டிருப்பதாக கூறி அவரை இரண்டு மாத காலத்திற்கு மதுரைக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டு மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.


இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராமதாஸ் பேசினார்.
பாமக நிறுவுனர் ராமதாஸ் அண்மைக் காலமாக நடத்தி வரும் அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளின் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. தொடர் கூட்டத்தின் 4 வது ஆலோசனைக் கூட்டமான இது, சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘’வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில், திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அடுத்து வரும் 24ம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் அமைதி வழி போராட்டம் நடத்தப்படும்.
என்னை ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லும் தகுதியும் உரிமையும் யாருக்கும் இல்லை என்று கூறிய ராமதாஸ், அனைத்து ஊர்களிலும் காதல் திருமணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்காக நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.இங்கு வந்திருக்கும் பிரதிநிதிகளின் சாதிகளுக்குள்ளே நடைபெறும் காதல் திருமணங்களை ஆதரிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், சொந்த மாமன் மகள், அத்தை மகன் என உறவு இருந்தாலும், ஆண் படிக்காதவனாக, ஊர் சுற்றியாக, மதுவுக்கு அடிமை ஆனவனாக, இதுபோன்ற லாயக்கற்றவனாக இருந்தாலேயே யாரும் பெண் கொடுக்க விரும்ப மாட்டார்கள்; வீடு புகுந்து வெட்டுவார்கள்’’என்று தெரிவித்தார்.

ஆற்றங்கரையில் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆற்றங்கரையில் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேரூந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், குடியரசுத் தலைவர் மாளிகையை பல நாட்கள் முற்றுகையிட்டு போரட்டங்கள் நடத்தப்பட்டன.
விருத்தாசலம் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்வாளிகள் 3 பேரும், அவர்களுக்கு துணையாக இருந்த 7 பேரும் குடிபோதையில் இருந்ததாகவும், குடிவெறியில் தான் இந்த செயலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளதென்றும் இதை தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மதுவை விற்று வருவாய் தேட துடிக்கும் தமிழக அரசு இதையெல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இனியாவது மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை செயல்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;; என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Wednesday, December 26, 2012

பாமக பொதுக்குழு 31-ல் கூடுகிறது

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் வரும் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. 2013-ம் ஆண்டில் நடக் கும் முதல் பொதுக்குழு கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிப்பார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்பார். முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுவார். பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

புதுச்சேரி மாநில பா.ம.க. நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். 2012-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
2013-ம் ஆண்டில் பா.ம.க. ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விரிவான கலந்தாய்வு நடத்தப்பட்டு செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன’’என்று கூறியுள்ளார்.

Tuesday, December 25, 2012

தூத்துக்குடியில் மாணவி படுகொலை சம்பவத்தைக் கண்டித்து பாமக போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தூத்துக்குடியில் மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி புனிதாவை, பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்த சம்பவத்தை அறிந்து துயரம் அடைந்தேன். மாணவியின் குடும்பத்துக்கு எனது ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புனிதா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வரே கூறியுள்ள போதும், குற்றவாளி மீது கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான பிரிவில் கூட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடியே இந்த சம்பவத்துக்கு மூலக்காரணமாக இருந்துள்ளது. எனவே, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க இழப்பீடு வழங்கக் கோரி பாமக போராட்டம் நடத்தும்

தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க இழப்பீடு வழங்கக் கோரி பாமக போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகம், காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. தமிழக அரசு செய்த முயற்சிகளில் ஒன்று கூட பலனளிக்கவில்லை. இந்த நிலையில், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், தண்ணீர் இன்றி வாடும் பயிரைக் கண்டு வாடி நிற்கின்றனர்.
கடன் வாங்கி செலவு செய்த விவசாயிகள் ஒரு பைசாவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல், கடன்காரர்களாகி உள்ளனர்.
காவிரி மாவட்டங்களில் இதுவரை 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பா பயிர் கருகியதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்றால், தாங்கள் செலவு செய்த பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் மொத்த மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். இதில் ஒரு பகுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
அதைக்கொண்டு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி காலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

தூத்துக்குடியில் மாணவி படுகொலை சம்பவத்தைக் கண்டித்து பாமக போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தூத்துக்குடியில் மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி புனிதாவை, பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்த சம்பவத்தை அறிந்து துயரம் அடைந்தேன். மாணவியின் குடும்பத்துக்கு எனது ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புனிதா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வரே கூறியுள்ள போதும், குற்றவாளி மீது கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான பிரிவில் கூட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடியே இந்த சம்பவத்துக்கு மூலக்காரணமாக இருந்துள்ளது. எனவே, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Thursday, December 20, 2012

அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை:டாக்டர் ராமதாஸ்

மதுரை: மதுரையில் 51 சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து புதிய அமைப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருவாக்கியுள்ளார்.

மதுரையில் நாடார் பேரவை, செளராஷ்டிரர் சங்கம் போன்ற 51 சாதிக சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் ராமதாஸ்.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். நாடக காதல் திருமணங்களால் பாதிக்கப்படும் பெண்களை, பெற்றோர்களை பாதுகாத்திட அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இது அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையாக பின்னர் சுருக்கமாக ஒரு பெயர் வைக்கப்படும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம்

இக்கூட்டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டில் இருந்து அப்பாவி சமுதாய மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் நாடகங்களால் பாதிக்கப்படும் இளம்பெண்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது. இத்தகைய காதல் நாடகங்களைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த வயதுகளுக்கு முன்னர் திருமணம் செய்வது என்றால், அதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்பதை சட்டபூர்வமாக அறிவித்து, சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்.பணம் பறிக்கும் நோக்குடன் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்துபவர்களுக்கு, கடுமையான தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் சிறப்பு பெருந்துகள்

இந்தக் காதல் நாடகங்களில், பல்வேறு சமுதாயத்தினர் அடங்கிய ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவைச் சேர்ந்த சில தலைவர்கள், இத்தகைய காதல் நாடகங்களை பணம் பறிப்பதற்காக இளைஞர்களைத் தூண்டிவிட்டு, அரங்கேற்றி வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் அனைத்து சமுதாயப் பெண்களும் பாதுகாப்பாகச் சென்று வர, சென்னையைப் போன்று மகளிர் மட்டும் சிறப்புப் பேருந்துகளை பள்ளி, கல்லூரி, அலுவலகப் பகுதிகளுக்கு அரசு இயக்க வேண்டும். காதல் நாடகத் திருமணங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் குறித்து இந்தக் குழு உண்மை நிலையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜனவரி 24-ல் போராட்டம்

தமிழகத்தில் எஸ்சி., எஸ்டி., வன்முறைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தச் சட்டப் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப் படுவதுதான் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட காரணமாக உள்ளது. இதைத் தடுக்க, எஸ்சி., எஸ்டி., வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வலியுறுத்தி, அனைத்து சமுதாயத்தின் சார்பில் ஜன.24ம் தேதி மாவட்ட தலைநகர்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Monday, December 17, 2012

மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை 'வெற்றிகரமாக' நடத்திய பாமக

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, ஜி.கே. மணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனையில் ராமதாஸ் தலைமையில் மதுக்கடை ஒன்றுக்கு பூட்டு போட பாமகவினர் முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது பேசிய ராமதாஸ், அரசே மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
விழுப்புரத்தில் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் மதுக்கடைக்கு பூட்டு போட முயற்சித்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சேலத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் மதுக்கடைகளைப் பூட்ட முயன்றதால் கைதாகினர்.
முன்னெச்சரிக்கைக்கு எதிர்ப்பு
முன்னதாக கடந்த 2 நாட்களாக பாமகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் திருவண்ணாமலை அருகே நூக்காம்பாடி என்ற கிராமத்தில் மதுபானக் கடை மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறது. இதில் கடைக்குள் இருந்த இரண்டு பெட்டிகள் எரிந்து நாசமாகின. டாஸ்மாக் கடை ஊழியர்கள் புகாரின் பேரில் திருவண்ணாமலை பாமக நிர்வாகி பெரியண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ராமதாஸ் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்!

 





 

Sunday, December 16, 2012

இன்று பாமகவின் பூட்டு போராட்டம்... விடிய விடிய கடைகளிலேயே தங்க வைக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

சென்னை: பாமகவின் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் இன்று நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக பல பாமகவினரை நேற்றே போலீஸார் கைது செய்தனர். மேலும், கடை ஊழியர்களையும் நேற்று இரவே கடைகளில் தங்க வைத்தனர் போலீஸார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு இன்று பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 823 மதுக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு ரோந்து போலீசாரையும் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து செல்லும்படி உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக நேற்று இரவு கடை வர்த்தகம் முடிந்ததும் கடைகளிலேயே ஊழியர்களைத் தங்க வைத்தனர் போலீஸார். இதற்கு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இரவில் வந்து பாமகவினரோ அல்லது சமூக விரோதிகளோ தாக்குதல் நடத்தினால் யார் பொறுப்பு ஏற்பது என்று அவர்கள் புலம்பினர்.

Saturday, December 15, 2012

திட்டமிட்டப்படி மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாமகவினரை கைது செய்தாலும், மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரும் தங்களது போராட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாமகவினர் கைது செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தால் போக்குவரத்திற்கோ அல்லது பொது அமைதிக்கோ பாதிப்பு ஏற்படாது. இரவு நேரத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடப்போவதாக காவல்துறை தவறான தகவல்களை பரப்பி முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் திட்டமிட்டப்படி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் 17.12.2012 அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள்:

பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 63ஆவது பிறந்த நாள் விழா 13.12.2012 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்" என்று கோரியுள்ளார்.
பல லட்சக்கணக்கான இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் அவர்களின் இந்த கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதே பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய நண்பர் ரஜினிகாந்த், முன்பு அவர் ''பாபா' படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு "அவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாடு ஒரு மிகப்பெரிய கேடாகும். இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். இந்திய அளவில் ஆந்திராவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் புகைபிடிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு சிறுவர்கள் புகையிலைத் தீமைக்கு அடிமையாகும் போக்கு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் '2000 ஆம் ஆண்டில் பள்ளிக்குழந்தைகளில் 7 சதவீதத்தினர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினர். இதுவே 2009 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக அதிகரித்துவிட்டது' என்று தெரியவந்துள்ளது.

புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைபிடிக்கும் காட்சிகளும் ஒரு காரணமாக உள்ளன. சிகரெட் நிறுவனங்கள் திரைப்படங்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை திணித்து வருகின்றன. உரிய வயதாகும் முன்பே இறந்து போகும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டவே சிகரெட் நிறுவனத்தினர் திரைப்படங்களில் மறைமுகமாக விளம்பரம் செய்கின்றனர். இப்பேராபத்து உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
இந்த சூழலில் நண்பர் ரஜினிகாந்த் "புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்" என்று ரசிகர்களுக்கு துணிச்சலாக வேண்டுகோள் விடுத்துள்ளதை மனமார வரவேற்கிறேன். அவரது இந்த முன் உதாரணத்தை தமிழ்நாட்டின் மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.

தமிழ் திரைப்பட நடிகர்களில் கமலஹாசன், சூர்யா, விஜய், விக்ரம் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அவர்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுடைய வழியில் புகையிலைத் தீமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் முன்வர வேண்டும். மேலும் திரைப்படங்களில் தொடர்ந்து புகைபிடிக்கும் காட்சிகளில் இப்போதும் நடித்துவரும் மற்ற நடிகர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.
'மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். முதலில் பெற்றோரைக் கவனிக்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்' என்று நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகள் மிக உயர்வான கருத்துகளாகும். இதே கருத்துகளைத்தான் எங்களது நிறுவனர்மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என குறிப்பிட விரும்புகிறேன்.
இளைஞர்கள் மதுபானத்திற்கும் புகையிலைக்கும் அடிமையாகக் கூடாது. இளம்வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பம் வேலைக்கு பின்னர்தான் அரசியல் என வலியுறுத்தும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
இந்த தருணத்தில், தமிழ் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை நலமாக அமைக்கும் வகையில் புகையிலை மற்றும் மதுபானத் தீமைகளுக்கு எதிராக நண்பர் ரஜினிகாந்த் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கிறேன். இந்த உன்னதமான நோக்கத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியும் பாட்டாளி இளைஞர் சங்கமும் அவருக்கு துணையாக நின்று தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் வளமாக அமைய பாடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கோள்கிறேன்.

இதே போன்று, தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து, நாட்டின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் கொடூரமான மதுபான பழக்கத்திற்கு எதிராக மற்ற நடிகர்களும், நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களும் குரல் கொடுக்க, போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்றென்றும் நலமோடு வாழவேண்டும் என எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, December 11, 2012

மது விலக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகள்: நிறைவேற்றாவிட்டால் போராட்டம் என ராமதாஸ் எச்சரிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 11.12.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெற்ற குழந்தைக்கு தாயே நஞ்சு கொடுப்பது எவ்வளவு கொடுமையானதோ, அதைவிடக் கொடுமையானது மக்களை காக்க வேண்டிய அரசே மது விற்பனை செய்வதாகும். மது விற்பது தவறு என்று தெரிந்தும், அதை தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தவற்றைத் திருத்தி, மக்களைக் காக்கவேண்டும் என்பதற்காக கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின்னர் மதுவிலக்கிற்கு ஆதரவாக தமிழக மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முழுமையானமதுவிலக்கை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி வரும் 17ஆம் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த பா.ம.க. தீர்மானித்துள்ளது. தமிழக அரசும் மக்களின் இந்த உணர்வுகளை மதித்து, படிப்படியாகவாவது மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
மதுவிலக்கு என்பது நடைமுறைப்படுத்தமுடியாத ஒன்றல்ல. குஜராத், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களிலும் காலங்காலமாக மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் 1949ஆம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்படி மதுவிற்பனை கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.
அதன்படி, ஏதேனும் ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்; அதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்வாக்காளர்கள் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால் உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும்.
தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் காலை முதல் மாலை வரை உழைத்து பெற்ற ஊதியத்தை மாலை வேளைகளில் தான் மதுக்கடைகளில் இழக்கிறார்கள். இதைத் தடுக்க மதுக்கடைகளில் மது விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 5 மணி நேரம் என குறைக்க வேண்டும். அதேபோல் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் தீப ஒளி , பொங்கல் போன்ற திருநாள்களுக்கு முன்பு 3 நாட்கள், பின்னர் 3 நாட்கள் என மொத்தம் ஒரு வாரத்திற்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதுமுள்ள குடிப்பகங்கள் (பார்கள் ) உடனடியாக மூடப்பட வேண்டும். மாதத்திற்கு குறைந்தது 500 கடைகள் வீதம்மூடி, காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதிக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.
மது என்னும் அரக்கனின் பிடியில் குடும்பத்தலைவர்கள் சிக்குவதால் அக்குடும்பங்கள் படும் பாடு சொல்லி மாளாது. படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் குடிக்க துடித்தல், குடியால் உடல்நலம் பாதிக்கப்பட்டும், விபத்தில் சிக்கியும் குடும்பத்தலைவர்கள் உயிரிழப்பதால் இளம் கைம்பெண்கள் உருவாதல் என எண்ணெற்ற துயரங்களுக்கு குடிப்பழக்கம் தான் அடிப்படையாக அமைகிறது.
குடியால் ஏற்படும் சீரழிவுகள் எத்தகையவை என்பதை குடும்பத்தலைவிகளான பெண்கள் தான் அறிவார்கள் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். மதுவால் ஏற்படும் தீமைகளை தமிழக முதலமைச்சர் அறிவார் என்பதால் மது விலக்கு தொடர்பான கோரிக்கைகளான.....
1) மராட்டியத்தில் உள்ளதைப் போன்று மக்களின் விருப்பப்படி மதுக்கடைகளை மூட வகை செய்யும் மதுவிலக்கு சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும்,
2) மது விற்பனை நேரத்தை 5 மணி நேரமாக குறைக்க வேண்டும்,
3) பண்டிகைக் காலங்களில் ஒரு வாரத்திற்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுக்கடைகளை மூடவேண்டும்,
4) அனைத்துக் குடிப்பகங்களையும் உடனடியாக மூட வேண்டும்,
5) மாதத்திற்கு குறைந்தது 500 கடைகள் வீதம் மூட வேண்டும் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றுவதுடன், அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கவேண்டும்.
வரும் 15ஆம் தேதிக்குள் இந்த அறிவிப்பை வெளியிடாவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி வரும் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Saturday, December 8, 2012

கருகும் பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் போதுமா? ராமதாஸ் கேள்வி

சென்னை: தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகி வரும் நிலையில் அவற்றை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்து விடச் சொல்லி உத்தவிடுவது போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி பாசன மாவட்டங்களில் கருகி வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அக்குழு அறிவித்திருக்கிறது.

இறுதித் தீர்ப்பு கடந்த 2007ஆம் ஆண்டிலேயே வழங்கியபோதிலும், அத்தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றம் கண்டித்தபிறகு, வேறுவழியின்றி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரி கண்காணிப்புக் குழு ஒதுக்கியுள்ள 12 டி.எம்.சி தண்ணீர் போதுமானதல்ல. தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற குறைந்தது 60 டி.எம்.சி தண்ணீர் தேவை. டிசம்பர் மாதத்தில் குறைந்தது 30 டி.எம்.சியாவது திறந்து விடபட்டால் தான் பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற முடியும். ஆனால், 12 டி.எம்.சி மட்டும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஆனால், இந்தத் தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதே நிலை தொடர்ந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அவலநிலை மீண்டும் ஏற்படக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Friday, December 7, 2012

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி : பா.ம.க

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாமக புதிய கூட்டணியை உருவாக்கிப் போட்டியிடும் என்று அம்மாநில செயலாளர் அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் ஜனவரி 4,8,10 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.
பாமக
புதுவை உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வியாழக்கிழமையன்று பெறப்பட்டன. அப்போது அனந்தராமன் வெளியிட்ட அறிக்கையில், பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜாதிய கூட்டணி என்று பேசிவரும் பாமக, புதுச்சேரியில் எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது
அதிமுக
இதனிடையே புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் பெயரை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக புதுச்சேரி மாநிலத்திற்கு (காரைக்கால் நீங்கலாக) எம்.சி.சம்பத் ,(கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்) நா.பாலகங்கா, எம்.பி., (வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்) காரைக்கால் மாவட்டத்துக்கு, ஆர்.காமராஜ் (திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், உணவுத்துறை அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கான இடங்களையும் அதிமுக அறிவித்திருக்கிறது. புதுச்சேரி மாநிலம் (காரைக்கால் நீங்கலாக) - உப்பளம் தொகுதியில் உள்ள புதுச்சேரி மாநிலக் கழக அலுவலகம், காரைக்கால் மாவட்டம்-9, பாரதியார் ரோடு, கோட்டுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவோர் கட்டணமாக, நகரசபை தலைவர் -ரூ.10 ஆயிரம், நகரசபை உறுப்பினர் (கவுன்சிலர்) -ரூ.2 ஆயிரம், கொம்யூன் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர் -ரூ.1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கபப்ட்டிருக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

Thursday, December 6, 2012

டாக்டர் ராமதாஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு: அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் அறிவிப்பு

அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் தலைவர் பி.டி.அரசகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்து சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில், வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தி அடுத்த (ஜனவரி) மாதம் 4-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பது என, கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பி.டி.அரசகுமார் கூறி உள்ளார்.

மாயாவதி போன்ற ஒருமித்த கருத்துடையவர்களுடன் கூட்டணி: ஜி.கே.மணி

திண்டுக்கல் மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம் 06.11.2012 வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொள்ளவந்த கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி போன்ற ஒருமித்த கருத்துடைய சமூக சிந்தனை கொண்டவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் திராவிட கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றார்.

என் மக்கள் முன்னேற வேண்டும், படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும்.

உளுந்தூர்பேட்டை: நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் நடந்த பாமக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய அவர்,

நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும், படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான்.

மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னியர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள்.

நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.

ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி பறக்க வேண்டும்.

2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அப்படியே வெற்றி பெறுவோம். எல்லோரும் விழிப்பாக இருங்கள் சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்றார்.

காவிரி: இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும்-ராமதாஸ்:

 ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, சம்பா பயிர்களை காப்பதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க கர்நாடக அரசு மறுத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய போவதாகவும் கர்நாடகம் கூறியிருக்கிறது. தேசிய ஒமைப்பாட்டுக்கு எதிரான கர்நாடகத்தின் இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. தமிழகத்தில் சம்பா பயிர்களைப் காக்க 60 டிஎம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அதில் இருப்பதில் ஒரு பங்கை மட்டும் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது யானைப் பசிக்கு சோளப்பொரியாக அமைந்திக்கிறது. அதுமட்டுமின்றி, இனி திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் அளவை காவிரி கண்காணிப்புக் குழுவின் மூலம் தான் தீர்மாணிக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
டிசம்பர் மாதத்திற்கு சுமார் 5 டி.எம். ஜனவரி மாதத்திற்கு சுமார் 1.25 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கண்காணிப்புக் குழு ஆணையிட முடியும். ஏற்கனவே உள்ள நிலுவை தண்ணீரை திறந்துவிடும்படி ஆணையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என கண்காணிப்புக் குழு ஏற்கனவே கூறியிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்திற்கு சிறிதளவு மட்டும் தண்ணீரை கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்ற கர்நாடகத்தின் திட்டத்திற்கு உச்சநீ திமன்றம் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவ்வளவு குறைகள் இருக்கும் போதிலும், இதைக்கூட நிறைவேற்ற முடியாது என கர்நாடகம் கூறியிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் விடப்பட்ட சவால் ஆகும்.
பிரதமர், காவிரி கண்காணிப்புக் குழு, உச்ச நீதிமன்றம் என எந்த ஒரு அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பையும் கர்நாடக அரசு மதிக்காததையும், அதை மத்திய அரசு கண்டிக்காததையும் பார்க்கும் போது, இந்தியாவின் ஆளுகைக்குள் கர்நாடகம் இருக்கிறதா அல்லது கர்நாடகத்தின் ஆளுகைக்குள் இந்தியா இக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. இந்தபோக்கு தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால், இந்திய அரசியல் சட்ட பிரிவு 356 அல்லது 365 ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி கர்நாடகம் மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப் படுவதை உறுதி செய்யவேண்டும்; இதன்மூலம் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Wednesday, December 5, 2012

தர்மபுரி கலவரத்திற்கு பாமக, வன்னியர் சங்கம் காரணம் அல்ல: ஜி.கே. மணி

ஈரோடு: தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு பாமகவும், வன்னியர் சங்கமும் காரணம் அல்ல. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள 142 பேரில் பலர் திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.

பாமக ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வரை சந்தித்து பேசியும் தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு பாமகவும், வன்னியர் சங்கமும் காரணம் அல்ல. அந்த கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று சிலர் குற்றம் கூறி வருகிறார்கள். அது தவறான கருத்து.

அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள 142 பேரில் பலர் திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதில் 14 கல்லூரி மாணவர்களும் அடக்கம்.

காதல் திருமணங்களுக்கு பாமக எதிரான கட்சி அல்ல. ஆனால் காதல் என்ற பெயரில் பெண்களை கடத்தி பணம் பறிப்பது, அப்பாவி பெண்களை ஏமாற்றுவதைத் தான் கண்டிக்கிறோம்.

எங்கள் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் திருமாவளவன், வீரமணி போன்றவர்களை எங்களுக்கு எதிராக சிலர் பேச விட்டு பாமகவை அசிங்கப்படுத்தப் பார்க்கிறார்கள். அதனால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது என்றார்.

Sunday, December 2, 2012

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத்தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்:7தீர்மானங்கள்


தலித் பகுதிகளின் வழியாகச் செல்லும் தலித் அல்லாத பெண்கள், மாணவிகள் சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களை அப்பகுதி இளைஞர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் ஈவ்-டீசிங் செய்வதால் பலரும் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலை உள்ளது; அவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்பன உள்ளிட்ட பாமக நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்த தீர்மான விவரம்:

தீர்மானம் 1: எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்
அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையுடனும், சம மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், கருத்தும் ஆகும். சாதியின் பெயராலோ அல்லது மதத்தின் பெயராலோ பாகுபாடு காட்டப்படுவதை எவரும் விரும்பவில்லை. குறிப்பாக காலங்காலமாக ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேனறவேண்டும் என்பதுதான் அனைத்து சமுதாயத்தினரின் விருப்பமாகும். இந்தத் துறைகளில் அவர்கள் முன்னேனறி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல், தமிழகத்தின் எந்தப்பகுதிகளிலும் தீண்டாமை என்பது எந்த வடிவத்திலும் நிலவக்கூடாது; மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்கக்கூடாது என்பது தான் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களின் நிலைப்பாடு ஆகும். தீண்டாமை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக அனைத்து சமுதாயத்தினரும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்றாக உள்ளது.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டிய தலித் சமுதாயத்தினரில் சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி பொய்ப் புகார்களை அளிப்பது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
பொதுவாகவே, தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவும், பொய்ப் புகார்களை அளிக்கவும், காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யவும் தான் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தலித்துகளில் சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் .1989ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை, இச்சட்டப் பிரிவுகளின் படி தொடரப்பட்ட வழக்குகளில் 2.2 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

இதிலிருந்தே இந்தச் சட்டப்படி தொடரப்பட்ட வழக்குகளில் 97.8 விழுக்காடு வழக்குகள் பொய் வழக்குகள் என்பது தெளிவாகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த தில்லி அமர்வு நீதிமன்றம்,‘‘ எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது.


தங்களுக்கு பிடிக்காதவர்களுடனான சிறு சிறு பிரச்னைகளை தீர்த்து பழி வாங்குவதற்காக இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தான் பல்வேறு சமுதாயங்களிடையே மோதலை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அதன்படி கைது செய்யப்படுபவர் ஜாமினில் வெளிவரமுடியாத நிலை உள்ளது; இதை மாற்றி ஜாமினில் வெளிவரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவேண்டும்.எனவே, இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில்,கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் அனைத்தையும் இக்குழுவின் பார்வைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பிறகே அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் அளிக்கப்படும் புகார்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில், அவை பொய்ப் புகார்கள் எனக் கருதப்பட்டு, அவற்றை அளித்தவர்கள் மீது நேரடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பிரிவுகளை சேர்க்கும் வகையில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: வன் கொடுமை சட்டத்தில் திருத்தம் கோரி போராட்டம்
தமிழ்நாட்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் அதே அக்கறையை, அதற்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் காட்ட வேண்டும். அப்போது தான் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப் படுவதையும், இச்சட்டப் பிரிவுகளால் அப்பாவிகள் பழிவாங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும். எனவே,எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அதில் தேவையான திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தி அனைத்து சமுதாயங்களின் சார்பில் வரும் 2013ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3: காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தமிழக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கின்றனர். நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், அதை காலில் போட்டு மிதித்துவிட்டு, சாதி உணர்வுடன் தங்களது சாதிக்காரர்கள் பக்கமே நிற்கின்றனர். இதனால், பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் மீதே பொய் வழக்குகள் போடப்படுவதும், பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்படுவதும் நடைபெறுகிறது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு சில காவல்துறை அதிகாரிகளின் இந்தப் போக்கே காரணமாக உள்ளது.


இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக, நேர்மையுடனும், ஒரு தரப்பு நிலை எடுக்காமலும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4: 21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் அவசியம்
நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு திருமணங்களுக்கோ தடை போடுவது சரியானதாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை.
ஆனால், காதல் திருமணங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகத் திருமணங்களால் சமுதாயத்தில் பல்வேறு சீரழிவுகள் ஏற்படுகின்றன. எனவே,இத்தகைய நாடகத் திருமணங்களைத் தான் அனைத்து சமுதாயங்களும் எதிர்க்கின்றன.

இந்தத் திருமணங்கள் உண்மையான அன்பையும் நேசத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்காமல் , உடல்கவர்ச்சி, நாடகம் நடத்தி திருமணம் செய்த பின்னர் பெண் வீட்டாரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. இரு மனம் இணைவது தான் திருமணம் என்ற இலக்கணத்திற்கு பொருந்தாத வகையில் நடைபெறும் இந்த நாடகத் திருமணங்கள் ஓரிரு மாதங்களினேலயே தோல்வியில் முடிகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.
உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் நாடகத் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

காதல் நாடகத் திருமணங்களால் சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன் தோல்வியடைந்த திருமணங்களும், பெற்றோரின் தற்கொலைகளும் தான். சமூக மோதலுக்கும், நல்லிணக்கம் கெடுவதற்கும் இவைதான் அடிப்படையாக அமைகின்றன. தோல்வியடைந்த காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே தலித் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் ; அவர்களை ஏமாற்றி மணந்து கொண்டவர்கள் அனைவரும் தலித்துகள் என்பதிலிருந்தே ,இத்தகைய திருமணங்கள் எப்படி திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதையும், இத்தகைய திருமணங்களை செய்யும்படி தலித் இளைஞர்களை அந்த சமுதாய தலைவர்கள் எப்படியெல்லாம் தூண்டுகிறார்கள் என்பதையும் உணர முடியும்.
காதல் நாடகத் திருமணங்கள் என்ற வலையில் வீழ்த்தப்படும் பெண்கள் அனைவருமே பதின் வயது பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் தங்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடியாது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குடும்பம் நடத்துவதற்குரிய தகுதியை அவர்கள் பெற்றிருப்பதில்லை என்பதால் இவை குழந்தை திருமணங்களாகவே அமைகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த வயதுக்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்று சட்டத்திருத்தம்
கொண்டுவரப்பட வேண்டும். சீனா, சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்திலும் குறிப்பிட்ட வயதுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்ள பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே போன்ற
சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவந்து காதல் நாடக திருமணங்களைத் தடுக்கவேண்டும் என்று அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இஸ்லாமிய, கிறித்தவ மத கோட்பாடுகளுக்குட்பட்டு நடைபெறும் திருமணங்களை இத்தீர்மானம் கட்டுப்படுத்தாது என்றும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 5 : மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு தேவை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தலித்துகள் வாழும் பகுதிகள் வழியாக மாணவிகனேளா, பெண்கனேளா சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் மானவிகளை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அருவறுக்கத்தக்க வகையில் ஈவ் டீசிங் செய்வதால் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதைத்
தடுக்க காவல்துறையில் ஈவ் டீசிங் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி , அப்பிரிவைச் சேர்ந்த காவலர்களை மாணவியரும், பெண்களும் செல்லும் பாதைகளிலும், னேபரூந்து நிறுத்தங்கள் , பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களிலும் சாதாரண உடையில் நிறுத்தி கண்காணிக்க வேண்டும்.
மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சென்னையில் இருப்பதைப் போல மாணவிகளும், பிற பெண்களும் பயணம் செய்வதற்கு வசதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் உள்ள பகுதிகளுக்கு ‘மகளிர் மட்டும்’ என்ற சிறப்பு னேபரூந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரøச அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 : 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதி மாற்றம்
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தனித் தொகுதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 : காதல் நாடகத் திருமணங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி விசாரணை
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணங்களால் ஆயிரக்கணக்கான இளம்பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஓர் விசாரணைக் குழுவை அமைத்து, விசாரித்து, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

டிசம்பர் 17ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்

திண்டிவனம்: டிசம்பர் 17ந் தேதி முக்கியமான நாள். டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம். அதில் பா.ம.க.வினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். நானும் 2 திண்டுக்கல் பூட்டு வாங்கி வைத்துள்ளேன். போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
திண்டிவனத்தில் பாமக சார்பில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மக்களுக்காக பாடுபடும் கட்சி பா.ம.க.தான். தமிழகத்தை ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறோம்.
தி.மு.க., அ.தி.மு.க. அரசு சரியான மின்திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதனால்தான் தற்போதைய மின்வெட்டு அவலத்தை தமிழகம் சந்திக்க நேரிட்டுள்ளது.

வருகிற தேர்தலில் எல்லா சாதிய இயக்கங்களும் மற்ற அமைப்புகளும் சேர்ந்து நாங்கள் அமைக்கும் கூட்டணியை அனைவரும் பாராட்டுகின்றனர். நாங்கள் தனியாக நிற்கிறோம். எந்த கட்சிக்கு இந்த தைரியம் வரும்? டாக்டர் ராமதாஸ் தேர்தல் வந்தால் மாறிவிடுவார் என கூறுகிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க.வை அகற்றி விட்டு பா.ம.க. புதிய அவதாரம் எடுத்துள்ளது. இது தான் நல்ல தருணம் என மாற்றத்தை கொண்டு வரும்படி காலதேவன் சொல்கிறான்.
ஜாதிய இயக்கங்களோடு தான் கூட்டணி அமைத்து தன்னிச்சையாக நிற்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க தயாரா? நாங்கள் இதுவரை தமிழகத்தை ஆளவில்லை. 2 கட்சிகளும் ஆண்ட கட்சிகள் தானே. தனியாக நிற்க தைரியம் உள்ளதா?
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இலவசங்கள், சினிமா, மதுவை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவை மூன்றையும் அழிப்போம். அதில் சினிமாவை நல்ல சினிமாவை வரவேற்போம். ஆனால் சினிமா மோகத்தை அழிப்போம்.

கேரளா, கர்நாடகம், தமிழகம் மூன்றும் சேர்ந்தது தான் திராவிடம் என்கிறார்கள். இந்த திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள், காவிரியில் இருந்து தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் திருவனந்தபுரத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே?
பா.ம.க.வில் இருப்பவர்கள், எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நல்லதுக்கு பாடுபட வேண்டும். பா.ம.க.வில் தலைமை பண்புகள், ஆளுமை பண்புகளை வளர்க்கும் விதத்தில் பயிற்சி கொடுத்து வருகிறோம். இந்தியாவில் எங்கும் கொடுக்காத பயிற்சி பா.ம.க.வில் கொடுக்கப்பட்டு வருகிறது.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்கு தான். டிசம்பர் 17ந் தேதி முக்கியமான நாள். டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம். அதில் பா.ம.க.வினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். நானும் 2 திண்டுக்கல் பூட்டு வாங்கி வைத்துள்ளேன். போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.

Friday, November 30, 2012

பொங்கலூர் மணிகண்டன் - ராமதாஸ் சந்திப்பு

தருமபுரி கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தருமபுரியில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இன்று(30.11.2012) மாலை 3.30 மணியளவில் கொங்கு வேளாள கவுண்டர்களுக்காக அமைப்பு வைத்து நடத்தும் பொங்கலூர் மணிகண்டன் கலவரம் நடந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்றுவிட்டு வரும்வழியில் பொங்கலூர் மணிகண்டன், அதியமான் பேலஸ்சில் தங்கியிருந்த மருத்துவர் ராமதாஸ்சை சந்தித்து பேசியுள்ளார்.

இரண்டு தரப்பும் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பதை இதுவரை வெளியிடவில்லை.

பெங்கலூர் மணிகண்டன், மாற்று சாதியினர் கொங்கு கவுண்டர் இன பெண்களை திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். அதோட தலித் அல்லாதோர் அமைப்பை தொடங்கியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் வன்னியர் இன பெண்களை மாற்று சாதியினர் திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இருவரும் சந்திப்பு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி திருமாவளவனுடன் கூட்டணி கிடையாது;

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும் அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறை தூண்டும் வசனம் கட்சி கொள்கையா? இங்க பாருங்க எப்படி எல்லாம் வசனம் எழுதப்பட்டுள்ளது பாருங்கள் இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது, ஒழுக்கமான தலித் தலைவர் உருவானல் கூட்டணி வைப்போம் என்றார் ராமதாஸ்.

சிங்கபூர், அமெரிக்க மிசிசிப்பி, சீனா, ஜப்பான், பிரேசில் போன்ற வெளிநாட்டில் உள்ளது போல் பெற்றோரரின் சம்மதத்துடன் பெண்ணுக்கு18, ஆணுக்கு21 வயதிலும் திருமணமும், பெற்றோர் சம்மதமின்றி பெண்ணுக்கு 21, ஆணுக்கு 23 வயதிலும் திருமணம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும். இதை விடுத்து 18, 20 வரை பெண் குழந்தைகளை வளர்த்து இவர்களின் காம பசிக்கு கொடுக்க முடியுமா? என்றார் ராமதாஸ்.

கலவர சம்பவத்திற்கு நாகராஜனின் மரணம் மட்டுமே காரணமில்லை. அதற்கு முன் பெண்களை குறிவைத்து நடந்த ஈவ்டீசிங் கேலி கிண்டல்களும் காரணம். தமிழகத்தில் ஈவ்டீசிங் நடப்பதை தடுக்க காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பஸ்நிலையங்கள் முன்பு ஈவ் டீசிங்கை தடுக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகம் நிறைந்த பகுதிகளுக்கு பெண்கள் சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.
வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் எந்த சாதிக்கும் எதிரான இயக்கம் இல்லை. தலித்களுக்கு எதிராக நான் பேசியது இல்லை. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, சி.பி.ஐ.யோ விசாரணை நடத்து ஆட்சேபணை இல்லை. ஆனால் உண்மை காரணம் வெளி கொண்டுவர வேண்டும். கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது என்றார் அழுத்தமாக

Tuesday, November 27, 2012

சம்பா பயிர்கள் கருகும் நிலைக்கு தமிழக அரசின் மெத்தனம் தான் காரணம்: ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரை காப்பாற்ற கர்நாடக அணைகளிலிருந்து போதிய அளவு தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று தமிழக விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றமோ இந்த வழக்கில் உறுதியான தீர்ப்பை அளிப்பதற்கு பதில் இரு மாநில முதல்வர்களும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற பிற்போக்கான ஆலோசனையை அளித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாகும்.
வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கிய பின்னர் இந்த விசயத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல்விட்டதன் விளைவுதான் காவிரி பாசன மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கர்நாடக அணைகளைப் பொறுத்தவரை நடப்பாண்டில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் இருந்து வந்திருக்கிறது.
காவிரி பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருந்த அக்டோபர் 15ம் தேதி வாக்கில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் மொத்தமாக 105 டி.எம்.சி தண்ணீர் இருந்தது. தற்போது கர்நாடகத்தில் இரண்டாம் பருவ சாகுபடி முடிவுக்கு வரவிருக்கும் இன்றைய நிலையில்கூட கிருஷ்ண ராஜ சாகரில் 23.6 டி.எம்.சி, ஹாரங்கியில் 30.47 டி.எம்.சி, ஹேமாவதியில் 13.7 டி.எம்.சி, கபினியில் 8.15 டி.எம்.சி என மொத்தம் 76 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. கர்நாடகத்திற்கு இனி தண்ணீர் தேவைப்படாது என்ற நிலையில் கோடை சாகுபடிக்காக இந்த தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.
எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் பாதியையாவது தமிழகத்திற்கு திறந்துவிடும்படி ஆணையிட வேண்டும். அதற்கு கர்நாடக அரசு மறுத்தால் அரசியல் சட்டத்தின் 365வது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அணைகளை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

39 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள்

 
மிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி வருகிற டிசம்பர் 17-ந்தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக பாமக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பொதுக்குழு விளக்க கூட்டம் நெல்லையில் இன்று நடந்தது.
நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’வருவாய்க்காக அரசு மதுபானக் கடைகளை நடத்துகிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் குடியால் அதிக உயிழப்புகள் ஏற்படுகிறது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. எனவே, வருகிற டிசம்பர் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாள் (டிசம்பர் 17) தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்’’என்றார்.
அவர் மேலும், ‘’தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டால் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சியில் தடை ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய மின் திட்டங்களை காலதாமதப்படுத்தாமல் தொடங்க வேண்டும். பழைய மின் நிலையங்கள் பழுது ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணைகளில் நீர் இருப்பு குறைந்து ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை போக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இருந்து நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் பாடத்தை இதுவரை நீக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினையில் முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது பா.ம.க தான். தமிழகத்தில் தற்போது சாதி, சமய மோதல்கள் தலை தூக்கியுள்ளன. அதை சரி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தவுடன் அனைத்து பகுதிகளிலும் பா.ம.க.வுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 39 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
சமுதாய அமைப்புகள் உரிய நேரத்தில் ஆதரவு கொடுத்தால் அதை ஏற்று அவர்களுடன் பா.ம.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது’’என்றார்

Monday, November 26, 2012

''நான் காதலுக்கு எதிரி அல்ல''.. என்கிறார் ராமதாஸ்

அரக்கோணம்: நான் காதலுக்கு எதிரி அல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ்,

தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கழக கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. பாமக தற்போது புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை என புதிய முறையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் 18 மணி வரை மின்வெட்டு இருந்து வருவது பரிதாபத்திற்குரியது. நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று உறுதி அளிக்கிறேன். 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழக உபயோகத்திற்கு போக பக்கத்து மாநிலங்களுக்கு விற்கும் அளவிற்கு மாற்றி காட்டுவோம்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று ரூ. 200 கோடிக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையானது. இந்த தீபாவளிக்கு ரூ. 270 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதுதான் தமிழகத்தின் சாதனையாக உள்ளது.

நாங்கள் இனி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். வானமும், பூமியும் இருக்கும் வரை கடலில் தண்ணீர் இருக்கும் வரை திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக இந்த கூட்டத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் தேர்தல் காலத்தில் யாருக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தனியாக நின்று தேர்தலை சந்திப்போம். இதே போல் உறுதிமொழியை வேறு எந்த கட்சியாவது மக்களுக்கு கொடுக்க முடியுமா? என சவால் விடுகிறேன்.

நாங்கள் எந்த ஜாதிகளுக்கோ, சமுதாயத்திற்கோ எதிரிகள் கிடையாது. நான் இது வரை 14 மாநாடுகளை நடத்தி உள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேர்த்துதான் நான் போராடி வருகிறேன். இது வரையிலும் 100 போராட்டங்கள் நடத்தி உள்ளேன். தமிழகத்தில் உள்ள 7 கோடியே 24 லட்சம் பேருக்கு சேர்த்துதான் இந்த போராட்டத்தை நடத்தி உள்ளேன்.

இந்த கூட்டத்திற்கு வந்துள்ள தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களது மகன் மற்றும் மகள்கள் கல்வி கற்கும் போது காதல் வேண்டாம். இவையெல்லாம் 21 வயதுக்கு மேல் வைத்து கொள்ளட்டும். நான் காதலுக்கு எதிரி அல்ல. பள்ளி செல்லும் பருவத்தில் பாடத்தை நன்றாக படித்து பெண்கள் முன்னேறி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்து கண்காணிப்புடன் உங்கள் மகள்களின் எதிர்காலத்தை உருவாக்குங்கள் என்றார்,

Wednesday, November 21, 2012

இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது; அதை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்: ராமதாஸ்

சேலம்: திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ''புதிய பாதை, புதிய நம்பிக்கை, புதிய அரசியல்'' விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
இங்கு கூடியிருக்கும் கூட்டம் மிக பிரமாண்டமாக உள்ளது. இந்தக் கூட்டத்தை பார்த்தால் நாளை வருகிற தேர்தலில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். வருகிற எல்லா தேர்தலிலும் வன்னியர்கள் ஆட்சியை பிடிக்க தயார் ஆகிவிட்டார்கள்.
ஊழலில் கொள்ளை அடித்து மாறி மாறி ஆட்சியை பிடித்தார்கள். ஊழலில் கொள்ளை அடித்த பணத்தை கொண்டு ஓட்டை விலை பேசுவார்கள். எச்சரிக்கையாக இருக்கவும். இவற்றை தடுக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திரண்டு ஊரின் முக்கிய இடங்களில் உங்கள் போட்டோவுடன் டிஜிட்டல் போர்டு வைக்கவும்.

அதை ''தேர்தல் சட்டப்படியும், அரசியல் சட்டப்படியும் ஓட்டை விலைக்கு வாங்க கூடாது'' என்ற வாசகத்துடன் வைக்கவும். 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் பாமகவில் சேர்ந்து வருகிறார்கள்.
திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்.

அதிமுக, திமுக கதை எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது எங்கு பார்த்தாலும் வன்னியர் அலைகள், வன்னியர் மந்திரம் முழங்கி கொண்டு உள்ளது. வீரம், விவேகம் மிக்க இளைஞர்கள் கட்சியில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வருடத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும் என்று கூறி அதற்காக முதன் முதலாக திட்டம் தயார் செய்து கொடுத்தோம்.

ஆனால் நிறைவேற்றவில்லை. ஏனென்றால் சேலம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் விவசாயிகள் வாழ்ந்து விடுவார்கள் என்பதால். 2016-ல் பாமக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் புதிய வேலை வாய்ப்பில் வன்னியர் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வன்னியர் ஆள வேண்டும் என்ற மந்திரம் ஒவ்வொரு நாளும் உச்சரிக்க வேண்டும் என்றார்.

Thursday, November 15, 2012

கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: ராமதாஸ்





கல்வியியல் படிப்புகளுக்கு நுநுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் இராஜு தலைமையில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 60ஆவது கூட்டத்தில் கல்வியியல் பட்டயம் (D.T.Ed.), பட்டம் (B.Ed) மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு(M.Ed) நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்வதென முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கான நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக தெரிகிறது. நுழைவுத்தேர்வு நடத்துவதன் மூலம் தரமான மாணவர்களை கல்வியியல் படிப்புகளில் சேர்க்க முடியும் என்றும், அவ்வாறு சேர்த்தால் மட்டுமே தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியும் என்றும் மத்திய அரசின் தரப்பில் கூறப்படுகிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான அடித்தளம் பள்ளிக் கல்வியிலிருந்து அமைக்கப்படவேண்டும். பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் தரமானதாகவும், சமச்சீரானதாகவும் மாற்றினால் தான் சிறந்த பட்டதாரிகள் உருவாவார்கள். அவர்களைத் தான் தரமான ஆசிரியர்களாக உருவாக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசோ, மாநில அரசோ மேற்கொள்ளவில்லை. அடிபடை வசதிகளே இல்லாமல் ஐந்து வகுப்புகளுக்கு ஓராசிரியர் மட்டுமே உள்ள அரசு பள்ளிகளில் தான் ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும்; குளிர்சாதன வசதியுடன் கூடிய, சர்வதேச தரம் கொண்ட, வகுப்புக்கு ஓராசிரியர் உள்ள பள்ளிகளில் பணக்கார மாணவர்கள் படிப்பார்கள் என்ற நிலைதான் இன்று தமிழகத்தில் நிலவுகிறது.


இந்த அவலநிலையை மாற்ற நடவடிக்கை எடுக்காமல், கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலமாக மட்டுமே தரமான ஆசிரியர்களை உருவாக்கிவிட முடியாது. கல்வியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்து செய்முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தால், கல்வியியலை மனப்பாடம் சார்ந்த படிப்பு என்ற நிலையிலிருந்து பயிற்சி சார்ந்ததாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியும். தரமான ஆசிரியர்களை உருவாக்க 10 சீர்திருத்தங்களை செய்ய வேண்டியிருக்கும் போது, அவை அனைத்தையும் தொடக்கத்தில் இருந்து செய்யாமல், பத்தாவது சீர்தித்தத்தை மட்டும் செய்துவிட்டால் தரமான ஆசிரியர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய அரசு கருதினால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கொள்கை வகுப்பாளர்கள் அறியாமையில் திளைக்கிறார்கள் என்று தான் பொருளாகும்.

அனைத்து மட்டங்களிலும் தரமான, சமச்சீர் கல்வியை வழங்காமல் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்தினால், கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக

பாதிக்க படுவார்கள். அவர்களின் ஆசிரியர் பணி கனவு கருகிவிடும். மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கூடாது என்பதற்காக தமிழக அரசு முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். எனவே, கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Monday, November 5, 2012

நான் தயார்: அவர்கள் தயாரா?

சென்னையில் 05.11.2012 செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்தால், மூன்று மாதத்தில் மின்வெட்டே இல்லாமல் செய்துவிடுவோம் என்று உறுதி அளித்தார் ஜெயல-தா. ஆனால் இதுவரை மின்உற்பத்திக்கான செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. எண்ணூர் அனல் மின் நிலையம், தஞ்சாவூர் குத்தாலம் எரிவாயு நிலையம் போன்றவைகளை மூடியதும். நிர்வாகம் செய-ன்மையுமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம். இருக்கின்ற மின் நிலையங்களை சரியாக பராமரித்தாலே போதும். சுப்ரீம் கோர்ட்டில் மின்சாரம் கேட்டு வழக்கு தொடுத்திருப்பது தேவையற்றது.
மூன்று மாதத்தில் சொன்னபடி மின்உற்பத்திக்கு தேவையான நடவடிக்கையை எடுக்கப்பட்டுவிட்டது என்று அதிமுக அரசு சொல்கிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ்,
அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நான் நிரூபிக்க தயார். அவர்கள் தயாரா? என்றார்.
மேலும் பேசிய ராமதாஸ், ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவான தேர்ச்சிக்கு காரணம், தரம் இல்லாத கல்வியே. அதை சரியான முறையில் ஒழுங்குப்படுத்த வேண்டும். இலங்கை விவகாரத்தில் பசுமை தாயகம் பொறுப்பாளர்கள் அருள், ஜி.கே.மணி ஆகியோர் ஐ.நா. மன்ற உறுப்பினர்களிடம் தங்கள் கோரிக்கைகளையும், வாதங்களையும் எடுத்து வைத்துள்ளனர். ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பாக்கிறோம். இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. குட்கா, பான்பராக் போன்ற போதைப்பொருட்களை 14 மாநிலங்களில் தடை செய்துள்ளனர்.

Thursday, October 25, 2012

இந்தியா பரிந்துரைத்த 13-வது அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை திட்டம்: டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா முன்வைத்த 13-வது அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஓரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது.
13-வது அரசியல் சட்டத்திருத்தத்தையே அடியோடு ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது. 13-வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது மட்டுமின்றி, இலங்கையிலுள்ள 9 மாநில எல்லைகளையும் மாற்றியமைத்து 5 மாநிலங்களாக குறைக்க ராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இலங்கை அரசின் இந்த சதி திட்டம் நிறைவேறிவிட்டால் ஈழத்தமிழர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படுவது இந்தியாவுக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் ஆகும்.
எனவே, இலங்கையின் 13-வது அரசியல்சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, தமிழர்களுக்கு ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தைப் பறிக்கத் துடிக்கும் இலங்கை ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு எந்தக்காலத்திலும் சம அதிகாரம் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஐ.நா. மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடார்களை இழிவுபடுத்தி மலையாள நாயர்களை உயர்த்தி எழுதுவதா.. ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டமாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வ குடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருபது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது.
இது மிகபெரிய வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில், தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டமாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வ குடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருபது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
அதே பாடத்தின் இன்னொரு பகுதியில், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிந்ததாகவும், மேலாடை அணிவதற்காக நாடார் சமுதாய பெண்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் கூறப்பட்டிக்கிறது. இதுவும் வரலாற்றுத் திரிபாகும்.
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிந்த போது, அதை எதிர்த்தும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்தும் 1836ம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்களை நடத்தியவர் அய்யா வைகுந்தர் ஆவார்.
எனவே நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அய்யா வைகுந்தரின் விடுதலைப் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையிலும் இந்த பாடம் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படியான 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் உள்ள பிழைகள் உடனடியாக திருத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்திய அய்யா வைகுந்தரின் வாழ்க்கை வரலாற்றை மத்திய மற்றும் மாநிலப் பாடத்திட்ட பாடநூல்களில் ஒரு பாடமாக சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Monday, October 22, 2012

'3 வருடத்தில 3000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரமாம்.. மக்கள் காதில் பூ சுற்றும் ஜெ'- ராமதாஸ்

கிருஷ்ணகிரி: மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்ளை திசை திருப்பவே சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்ப 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய போவதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளிசக்தி மின்சாரம் தயாரிக்க ரூ.33 ஆயிரம் கோடி தேவை. இந்த நிதிக்கு என்ன செய்வார்கள்?.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி கூட 3 ஆண்டில் 600 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தியைதான் உற்பத்தி செய்துள்ளார்.

மாயாவதி பார்முலாவை கடைப்பிடிப்போம்

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திப்பதற்கு பாமக தயாராக உள்ளது. எங்கள் தலைமையில் தமிழகத்தில் ஏற்கனவே 3-வது அணி உள்ளது.

தேர்தலில் திராவிட மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம். உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி செய்ததை போல சமுதாயங்களுடன் கூட்டணி வைத்து கொள்வோம்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் மாதம் 17-ந்தேதி பாமக சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர்.

Saturday, October 20, 2012

உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்


மழை நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பருவ மழை துவங்கி கடந்த மூன்று நாட்களிலேயே இதுவரை வரலாறு காணாத அளவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பருவ மழைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், கடந்த மூன்று நாட்களிலேயே சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதையும் காண முடிகிறது.

பல பகுதிகளில் கழிவு நீர் குழாய்கள் உடைந்து குடிநீர் குழாயுடன் கழிவு நீர் கலந்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மூன்று நாட்களுக்கே இப்படி என்றால், இன்னும் பருவ மழை தீவிரமடைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

சென்னை மாநகரமே வெள்ளக்காடாக ஆகி விடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து, இதுவரை உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, October 14, 2012

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் சென்னையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மக்களிடையே பெரும் அச்சமும்,பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், டெங்கு காய்ச்சலை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்கள் வந்தால் டெங்கு காய்ச்சல் ஏற்படுவது இயல்பு தான் என்று கூறி தங்களின் பொறுப்பை தட்டிக் கழிக்க அரசு அதிகாரிகள் முயல்கின்றனர். இது அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பின்மையையும், அலட்சியத்தையுமே காட்டுகிறது.

தமிழகத்தை தற்போது ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல் திடீரென வந்த ஒன்றல்ல. கடந்த ஏப்ரல் மே மாதங்களிலேயே நெல்லை மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போதே கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தவறியதன்  விளைவாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவத் தொடங்கியது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் டெங்கு பரவி ஒரு வயது குழந்தை உட்பட சிலர் உயிரிழந்தனர். ஆனால் அப்போது சென்னை உட்பட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும்   டெங்கு இல்லை என்று மறுப்பு தெரிவிப்பதில் தான் அரசு தீவிரம் காட்டியதே தவிர , டெங்குவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. அண்மையில் சென்னையில் காலரா நோய் பரவி சுமார் 29 பேர் உயிரிழந்தபோம் அதை மறைப்பதில் தான் அரசு அக்கறை காட்டியது. இதுதொடர்பான உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்திய மாநகராட்சி சுகாதார அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

மாநகரங்களில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கும் போதிலும், பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உள்நோயாளிகளாக சேர்ப்பதற்கு படுக்கை கிடைக்காத அவலம் நிலவுகிறது. மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைஅளிப்பதற்கான வசதிகள் இல்லை; டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் அதை செய்வதற்காக அவர்களுக்கு இரத்த வட்டுக்களை செலுத்தும் வசதிகள் இல்லை. இதனால் டெங்குவால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளை சிகிச்சைக்காக 100 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழக அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மற்றும் வட்டத் தலைமை மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும். டெங்கு அறிகுறி காணப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். மாநிலம் முழுவதும் கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுவதுடன்,டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: