Friday, March 22, 2013

ஈகியர் விக்ரத்திற்கு வீர வணக்கம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு அறிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துத் தர வேண்டும் & இனப்படுகொலைகாரன் இராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நெற்குன்றத்தில் நேற்று இரவு தீக்குளித்த விக்ரம் என்ற இளைஞர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்றசெய்தி கேட்டு பேரதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன்.
அவருக்கு எனது வீர வணக்கங்களை செலுத்துகிறேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள வெறியன் இராஜபக்சேவின் படைகள் படுகொலை செய்த கொடூரம் ஒருபுறம்... அவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடந்த போராட்டத்தில் மத்திய அரசு செய்த துரோகம் மறுபுறம் என தமிழர்கள் கொந்தளித்துக்கிடக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் முடிவடைந்து விட்டாலும், தமிழர்களுக்கு தனி ஈழம் & இராஜபக்சேவுக்கு போர்க்குற்ற தண்டனை என்ற இலக்கை நோக்கி தமிழக மக்களும், மாணவர்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு துணை நிற்பதை விடுத்து தீக்குளிப்பு போன்ற செயல்களில் வீரத்தமிழர்கள் ஈடுபடுவது நமது நோக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.
ஈழத்தமிழர்களைக் காப்பதற்கான முயற்சியில் முத்துக்குமாரில் தொடங்கி முருகதாஸ், செங்கொடி, அண்மையில் கடலூர் மணி என இதுவரை 21 பேரை நாம் இழந்திருக்கிறோம். போராட்டக் களத்தில் நெருப்பாய் தகிக்கும் தமிழ் இளஞர்களை இனியும் இழக்க தமிழ் சமுதாயம் தயாராக இல்லை. தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக இன்னும் பல போராட்டங்களை நாம் நடத்த வேண்டிய நிலையில், தீக்குளித்து உயிர் தியாகம் செய்வது போன்ற செயல்களில் எவரும் ஈடுபடவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: