Sunday, March 31, 2013

பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி:



வடசென்னை மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிழல் நிதி அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

மதுவுக்கு எதிராக தொடர்ந்து பா.ம.க. குரல் கொடுத்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நமது தொழிலாளர் தோழர்கள், லாரி ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதற்காக நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பா.ம.க சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 31-ந் தேதிக்குள் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, நாகப்பட்டினம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் சமூக அக்கறையில் நலன் உள்ள பெரியவர்களை அழைத்து கொண்டு திமுக தலைவர் கலைஞரிடம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்.

ஆனால் அவர் வேலை நேரம் இரவு 11 மணி வரை இருந்ததை 10 மணியாக மட்டுமே குறைத்தார். கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

பா.ம.க. விரைவில் ஆட்சிக்கு வரும். அப்படி வந்தால் எங்களின் முதல் கையெழுத்து மதுவிலக்கு கையெழுத்துதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டுக் கூட மது இருக்காது என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: