Friday, April 26, 2013

கலவரத்துக்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் மீது கடும் நடவடிக்கை தேவை

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்ற வந்தவர்கள் மீது மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாமகவை சேர்ந்த இருவர் பலியாயினர், பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்தனர்.

மாமல்லபுரம் விழாவில் பங்கேற்க வந்த மத்திய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மரக்காணம் அருகே சாலையோர நிழலில் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களை வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த இன்னொரு கும்பலும் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொடூரமான தாக்குதலை நடத்தியதுடன், அந்த வழியே வந்து கொண்டிருந்த வன்னியர்களின் வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

மற்றொரு கும்பல் அரசு பஸ்கள் உள்ளிட்ட 6 வாகனங்களையும் பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு, அந்தப் பழியை மாநாட்டிற்கு வந்தவர்கள் மீது போட்டுள்ளனர். அவ்வழியே வந்தவர்கள் அனை வரும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மரக்காணம் பகுதியை பற்றி எதுவுமே தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர்கள் அங்கு நின்றிருக்கவும் மாட்டார்கள்; வன்முறை கும்பலின் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்க மாட்டார்கள். ஆனால், திட்டமிட்டு தாக்குதலை நடத்திய கும்பல் பழியை அப்பாவிகள் மீது போட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்படுத்தாமல், வெளியூரிலி ருந்து மாநாட்டிற்காக வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை கும்பலின் தாக்குதலில் காயமடைந்த தஞ்சையை சேர்ந்த விவேக் என்ற இளைஞரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற இளைஞரும் உயிரிழந்துவிட்டனர். ஆனால், இவர்கள் விபத்தில் இறந்ததாக கூறி வழக்கை முடித்து, வன்முறையாளர்களைக் காப்பாற்ற காவல்துறை முயல்கிறது.

இந்த வன்முறைகள் அனைத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. போலீசார் நிலைமையை சரியாக கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைகள் குறித்தும், இதை காவல்துறை கையாண்ட விதம் குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த தவறும் செய்யாத பாமகவினர் 1,050 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 4 பேர் மற்றும் ஆயுதப்படை போலீசார் 3 பேர் என 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று காலை ராமதாசுக்கு வழங் கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது-பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை : தமிழகத்தில் வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். வன்னியர் சங்க சார் பில் மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இதற்கு வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு தலைமை தாங்கினார். பாமக மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

இளைஞர்களை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தும் கட்சி பாமகதான். போதை, லாட்டரி, சினிமா ஆகியவற்றில் இருந்து இளைஞர்களை மீட்க போராடி வருகிறோம்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஒரேயொரு சமுதாயத்தால் மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், இந்த நிலை ஏற்பட காவல்துறைதான் காரணம். எனவே, நீங்கள் நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் எங்களை பாதுகாத்து கொள்ள நாங்களே நடவடிக்கை எடுப்போம். எங்களால் முடியாதது ஒன்றுமில்லை. காவல்துறை ஏன் அவர்களை பார்த்து பயப்படுகிறது.

கலவரம் இல்லாத சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய திட்டங்களை வகுத்து அனைத்து சமுதாய தலைவர்களையும் ஒருங்கிணைத்து 32 மாவட்டங்களில் கூட்டம் போட்டு பேசி வருகிறோம். இதற்கு காவல்துறை தடை விதிக்கிறது. என் வீட்டு பெண்ணுக்கு யார் மருமகனாக வரவேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும். அந்த பிரச்னையை முன்வைத்து அனைத்து மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். எங்களை இனி தடுக்க முடியாது. நாங்கள் பொறுத்தது போதும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார். அன்புமணி பேசுகையில், ‘‘2016ல் பாமக ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி, இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு இலவச விதைகள், உரங்கள் வழங்குவோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மதுவை ஒழிக்க இன்று யார், யாரோ நடைபயணம் செல்கின்றனர். பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தத்தான் முதல் கையெழுத்து போடுவோம்’’ என்றார்.

தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் அரசகுமார், கொங்கு வேளாள கவுண்டர் தலைவர் ராஜ்குமார், நாடார் இளைஞர் பேரவை என்ஆர்.தனபால் உள்பட 20க்கு மேற்பட்ட சமுதாய தலைவர்கள் பேசினர். பாமக தலைவர் ஜிகே.மணி, மாநில துணை தலைவர் அம்பத்தூர் கேஎன்.சேகர், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே.மூர்த்தி, ஏ.வேலு, மாவட்ட செயலாளர் வாசு, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஒன்றிய நிர்வாகிகள் காரணை தனுசு, பனங்காட்டு பாக்கம் அருண்குமார் கலந்துகொண்டனர்.

Thursday, April 25, 2013

தாழ்த்தப்பட்டோருக்கு பா.ம.க. எதிரி அல்ல: ராமதாஸ்

"நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்களுடன் சமுதாய நல்லிணக்கத்துடன் வாழ விரும்புகிறோம்' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க. சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:
நாட்டிலேயே இளைஞர்களுக்கு கடந்த 32 ஆண்டுகளாக நல்வழி உறுதிமொழியை வழங்கி வரும் ஒரே கட்சியாக பா.ம.க. உள்ளது. ஒற்றுமையாகவும், வன்முறை, தீவிரவாதம், பெண்ணாசை இன்றியும், மது, புகை, சூதாட்டத்துக்கு அடிமையாகாமலும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞரிடமும் உறுதிமொழி பெற்று வருகிறோம்.
வறுமை நீங்க, நாடு உயர, குடும்பம் உயர நல்வழியில் நடப்போம் என்று தொடர்ந்து உறுதிமொழி எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கிறோம். இந்த நடைமுறை வேறு கட்சிகளில் உள்ளதா?
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி திருமண வயதை எட்டாத சிறுமிகளின் வாழ்க்கை ஒருசிலரால் சீரழிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட பெற்றோர்களும், நாங்களும் எடுத்துக் கூறினால் ஜாதி வெறியைத் தூண்டுவதாக காவல்துறை எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் இச்சட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் சட்டத்தை நீக்கச் சொல்லவில்லை. அதில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும், முறையாக பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
14, 15 வயது சிறுமிகளைக் காணவில்லை என்று புகார் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. தவறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படும். காவல்துறையின் மெத்தனமே இதுபோன்ற தவறுகளுக்குக் காரணம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் சமுதாயத்தில் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
காதல் நாடகம் என்ற பெயரில் பணம் பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம். காதல் புனிதமானது என்ற ஒரு சிலர் கூறுகின்றனர். நாங்கள் காதலை எதிர்க்கவில்லை. 21 வயதுக்கு பின் காதலித்தால் அது காதல். ஆனால், 12, 13, 15 வயது பெண்களை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்வது எந்த வகையில் நியாயம்?
தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற அனைத்து சமுதாய மக்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், வேலு, ஏ.கே. மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Sunday, April 21, 2013

பேரழிவைத் தடுக்க கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்! இராமதாசு அறிக்கை

கூடங்குளம் அணு உலையை அமைப்பதில் நடந்த ஊழல்கள், தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக ரஷ்ய ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்  கூடங்குளம் அணு உலையை இயங்கச் செய்வதற்கான முயற்சியில் இந்திய அணுசக்தித் துறை சென்று கொண்டிருக்கிறது.
இதனால், கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் உழவர்களும், மீனவர்களும் தங்களைக் காப்பாற்றும்படி தொடர்ந்து அபயக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். கூடங்குளம் அணு உலையிலிருந்து திடீர் திடீரென எழும் வெடிச்சத்தத்தாலும், மர்மமான ஓசையாலும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இத்தகைய ஓசை எழுவதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டாலும், கூடங்குளம் அணு உலையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால் அங்கு அச்சமும், பதற்றமும் கலந்த சூழல் உருவாகியுள்ளது.

 
இந்த நிலையில், இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை  வாரியத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் மூத்த அணு விஞ்ஞானியுமான முனைவர். ஏ. கோபாலகிருஷ்ணன் ஆங்கில நாளிதழ் ஒன்றில், ‘கூடங்குளம் பிரச்சினைகளை தீருங்கள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், கூடங்குளம் அணு உலை தொடர்பாக ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.அணு உலையில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும், தரமில்லாத கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும் அணு உலையின் நம்பகத்தன்மை குறித்தும், நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்வதற்கான அணு உலையின் திறன் குறித்தும் அப்பகுதி மக்களிடையே பெருகி வரும் கவலை சரியானது தான் என்று கூறி, அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்திருக்கிறார். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பதைப் போன்ற இரண்டு அணு உலைகளை சீனாவிலும் ரஷ்ய அணு சக்திக் கழகமான ரோசடோம் அமைத்து வருகிறது. இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதை அறிந்த சீன அரசு, தங்களது அணு உலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரத்தை மறு ஆய்வு செய்து உறுதி செய்யும்படி ரஷ்ய அணுசக்திக் கழகத்தை கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய அரசோ அப்பகுதியில் வாழும் தனது சொந்த மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பற்றி  கவலைப்படாமல் உள்ளது.

 
கூடங்குளம் முதலாவது அணு உலையில் கடந்த நவம்பர்/ டிசம்பர் மாதங்களில் இந்திய அணுமின் கழகம் நடத்திய முழு அளவிலான ஹைட்ரோ சோதனை, வால்வுகள் சரியாக செயல்படாததால் தோல்வியடைந்து விட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் இந்தசோதனையை மீண்டும் செய்யும்படி இந்திய அணுமின் கழகத்திற்கு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் ஆணையிட்டிருக்கிறது.  ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்திற்கு முன்பாகவே கூடங்குளத்தில் வால்வுகளைக் கொண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தி ஆணையத்தின்  உறுப்பினரான எம்.ஆர். சீனிவாசன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக அணு உலையின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், இந்தியாவில் ஒரு பகுதியும், ரஷ்யாவில் மறு பகுதியுமாக வடிவமைக்கப்பட்ட வால்வுகளை பொருத்தியதில்  சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது என்றும்  கூறப்படுகிறது. இதன்காரணமாக அணு உலையில் செய்யப்பட்ட இரண்டாவது ஹைட்ரோ சோதனையின் முடிவுகள் வெளியிடப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.

 
ரஷ்ய அணு சக்தித் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களுடன், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகளையும் சேர்த்துப்பார்க்கும்போது  அச்சம் அதிகரிக்கிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்ய அணுசக்தி கழகத்தின் துணை நிறுவனமான ஜியோ- போடால்ஸ்க் என்ற நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு இயக்குனரான செர்ஜி ஷுடோவை ஊழல் குற்றச்சாற்றுகளின் பேரில் அந்நாட்டின் உளவுப் பிரிவினர் கைது செய்தனர். கூடங்குளம் உட்பட உலகம் முழுவதும் ரஷ்யா அமைக்கும் அணு உலைகளுக்கான ஆவி உருவாக்கிகள் உள்ளிட்ட பல கருவிகளை ஜியோ& போடால்ஸ்க் நிறுவனம் தான் வினியோகித்து வருகிறது. இந்தக் கருவிகளை செய்வதற்காக தரமான எஃகு அமைப்புகளை வாங்காமல், உக்ரைன் நாட்டு நிறுவனத்திடமிருந்து தரம் குறைந்த எஃகு அமைப்புகளை வாங்கியதாக செர்ஜி மீது ரஷ்ய உளவுத்துறை குற்றஞ்சாற்றியிருக்கிறது. கூடங்குளம் அணு உலையிலும், பல்கேரியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளிலும் இந்த தரம் குறைந்த எஃகு அமைப்புகள் தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதையறிந்த மற்ற நாடுகள் மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், இந்தியா மட்டும் ரஷ்யாவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டது.

 
ஜியோ& போடால்ஸ்க் நிறுவனம் தயாரித்த ஏராளமான தரம் குறைந்த கருவிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்  இரண்டு அணு உலைகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் குறைபாடுகள் இப்போது தெரியாவிட்டாலும்,  அணு உலைகள் விரைவில் செயல்படத் தொடங்கும்போது பேரழிவை ஏற்படுத்தும் வகையில் தோல்வியடைக்கூடும்.

 
கூடங்குளம் அணு உலை இப்போதுள்ள நிலையில், அதில் உற்பத்தியைத் தொடங்குவதென்பது இந்தியாவின் தென் முனையில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் மீது மரணத்தை திணிப்பதாகவே அமையும். எனவே, இப்போதுள்ள சூழலில் கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் உறபத்தியைத் தொடங்குவதையும், இரண்டாவது அனு உலையின் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலையில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது, இது தொடர்பாக நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரனை நடத்தி முடிக்கப்படும்வரை இப்பணிகளை தொடரக் கூடாது.சென்னையை அடுத்த கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால், அது குறித்தும் வல்லுனர் குழு விசாரணை நடத்த வேண்டும்.

வன்னிய இளைஞர் கலாச்சார விழா: அகிலேஷ் யாதவ் தொடங்கி வைக்கிறார்: ராமதாசு அறிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

      கோடி வன்னியர்கள் கூடும் வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு பெருவிழா வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இவ் விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவிருந்தார்.

    ஆனால், வரும் 25-ம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மிக முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டியிருப்பதால் அவரால் அன்று வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு பெருவிழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. எனினும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த விழாவில் ஏதேனும் ஒரு வகையில் தாமும் பங்கேற்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் அகிலேஷ் யாதவ், வரும் 22ம் தேதி நடைபெறவிருக்கும் வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு கலாச்சார விழாவை தொடங்கிவைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதற்காக 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை வரும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ்யாதவுக்கு விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து அன்று காலை 11 -மணிக்கு சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெறும் வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு கலாச்சார விழாவை அவர் தொடங்கி வைத்து, வன்னிய இளைஞர்களிடையே உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் நான், பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜே. குரு, பா.ம.க. பொதுச்செயலளார் வடிவேல் இராவணன், முன்னாள் நடுவண் அமைச்சர்கள் அரங்க. வேலு, ஏ.கே. மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்கம் ஆகியவற்றின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களும் பங்கேற்கின்றனர். பாட்டாளி இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த 1000 இளைஞர்களும் வெள்ளை சீருடையில் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

   இதைத் தொடர்ந்து நண்பகல் 12- மணிக்கு அதே விடுதியில் நானும் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளோம்.

   கோடி வன்னியர்கள் கூடும் வன்னிய இளைஞர் பெருவிழா ஏற்கனவே அறிவித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதைப்போல, வரும் 25-ந் தேதி சித்திரை முழு நிலவு நாளில் மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெறும். இவ்வாறு கூறியுள்ளார்.

Saturday, April 6, 2013

நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும்




சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்; மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு எங்கும் திறக்கக்கூடாது; உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தொடக்கமாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 06.04.2013 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. பாமக முன்னணி நிர்வாகிகள் உட்பட பாட்டாளி மக்கள் கட்சியினர், பெண்கள் மற்றும் மதுவுக்கு எதிரானவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Thursday, April 4, 2013

மாணவர்கள் மது குடித்து சீரழிந்தாலும் அரசுக்கு டாஸ்மாக் வருமானம் தான் முக்கியம்: ராமதாஸ்

சென்னை: நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடித்து சீரழிந்தாலும் பரவாயில்லை மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம் என்று அரசு கருதுவதையேஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்து நிகழும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நீக்கமற நிறைந்து கிடக்கும் மதுக்கடைகள் தான் அதிக அளவில் விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் ஆகும்.நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றும்படி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தி வரும் போதிலும் அதை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை.நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் உயிர் குடிக்கும் சாத்தான்களாக விளங்குவதால் அவற்றை அகற்ற ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி அதில் வெற்றியும் பெற்றது.உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளையும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கும் மேற்பட்ட மதுக்கடைகளையும் கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் தமிழக அரசு அகற்றியிருக்க வேண்டும்.ஆனால் உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் 20% கூட அகற்றப்படவில்லை. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதையொட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு மதுக்கடைகளை மட்டும் மூடிய தமிழக அரசு, மீதமுள்ள அனைத்து கடைகளிலும் வழக்கம்போல மது விற்பனையை நடத்திக் கொண்டிருக்கிறது.அகற்றப்பட்ட சில கடைகளையும், விதிகளை மீறி குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகிலும் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில பகுதிகளில் இரு நாட்களுக்கு முன்பு மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. உயர் நீதிமன்ற தீர்ப்பைக் காற்றில் பறக்கவிடும் அரசின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருக்கும் போதிலும், ஒரு மதுக்கடை கூட அகற்றப் படவில்லை. மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மாற்றி அமைக்க வேறு இடம் இல்லை என்பதால் அவற்றை அகற்ற முடியாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடித்து சீரழிந்தாலும் பரவாயில்லை மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம் என்று அரசு கருதுவதையே இது காட்டுகிறது. சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் நடந்து கொண்ட தமிழக அரசு இப்போதும் அதே போக்கையே கடைபிடிக்கிறது. அரசியல் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய அரசு இப்படி நடந்து கொள்வது முறையல்ல.சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்; மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு எங்கும் திறக்கக்கூடாது; உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தொடக்கமாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 6ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மிகப்பெரிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.எனது தலைமையில் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர், பெண்கள் மற்றும் மதுவுக்கு எதிரானவர்கள் பெருமளவில் கலந்து கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/05/tamilnadu-tasmac-shops-issue-ramadoss-slams-172853.html

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: