Sunday, April 10, 2016

பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்ட தி.மு.க.வுக்கு நன்றி!: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று வெளியிட்டிருக்கிறார். நல்லவை எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ, என்னவோ... 8 மாதங்களுக்கு வெளியிடப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டங்களையெல்லாம் தி.மு.க.வின் திட்டங்களாக  அறிவித்திருக்கிறார் கலைஞர். அந்த வகையில் பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு தனி அமைச்சர் நியமிக்கப் படுவார், ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்படும், பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க வல்லுனர் குழு அமைக்கப்படும், மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும்,  சிறு&குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் சந்தை அமைப்பு ஏற்படுத்தப்படும், விதை நெல் இலவசம், உழவுக் கருவிகளை வாங்க உதவி, ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், சேலம் மேச்சேரி நீரேற்றுத் திட்டம், தோனி மடுவு பாசனத் திட்டம், கல்வித்தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு, கிரானைட் - தாது மணல் விற்பனையை அரசும், தனியாரும் இணைந்து மேற்கொள்ளுதல், தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு, வள்ளலார் நினைவிடம் உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியமானத் திட்டங்கள் அனைத்தும் பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கையிலிருந்து எடுத்தாளப் பட்டவையாகும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது அண்ணாவின் கொள்கை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு என்பது அவர் வழி வந்த கலைஞர் கொள்கை. அதனால் தான் சிறிதும் யோசிக்காமல் பா.ம.க.வின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து வெளியிடச் செய்திருக்கிறார். மதுவிலக்கை வலியுறுத்தி பா.ம.க. நடத்திய போராட்டங்களின் பயனாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கலைஞர் அறிவித்தார். லோக் அயுக்தா, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை பா.ம.க. வலியுறுத்தியதும் தான், திமுகவும் அவற்றைப் பற்றி பேசத் தொடங்கியது. அப்போதே திமுகவின் தேர்தல் அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் பிரதியாகத் தான் இருக்கும் என்று எண்ணினேன். எனது எண்ணம் அப்படியே நடந்தேறியிருக்கிறது.

மது ஒழிப்பு தொடங்கி ஊழல் ஒழிப்பு வரை அனைத்து திட்டங்களுக்கும் பா.ம.க. மட்டும் தான் ராயல்டி வாங்கி வைத்திருக்கிறதா? மற்ற கட்சிகள் அவற்றை பயன்படுத்தக்கூடாதா? என்ற கேள்வி தி.மு.க.வினரால் எழுப்பப்படலாம். அந்த வினா நியாயமானது தான். அதேநேரத்தில் இந்தத் திட்டங்கள் எதுவும் புதுமையானவை அல்ல. பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருபவை தான். தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த பெருமைக்குரிய கலைஞர் இத்திட்டங்களை தமது முந்தைய ஆட்சிகளிலேயே நிறைவேற்றியிருக்கலாம். உழவுக்கு தனி நிதிநிலை அறிக்கை, நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சர், முழு மதுவிலக்கு ஆகியவற்றை செயல்படுத்தும்படி கலைஞரிடம் நானே பலமுறை நேரில் வலியுறுத்தி உள்ளேன். ஆனால், அப்போதெல்லாம் அவற்றை நிறைவேற்றாமல், இப்போது பாட்டாளி மக்கள் கட்சி அந்த திட்டங்களை வாக்குறுதியாக அளித்த பிறகு, அதை தி.மு.க.வும் அப்படியே பின்பற்றுவதால் தான் பா.ம.க.வின் திட்டங்களை திமுக காப்பியடிப்பதாக கூறவேண்டிய கட்டாயம் உருவெடுக்கிறது.

ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா சட்டம், சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை பற்றி  6 மாதங்களுக்கு முன்பு திமுகவுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் அவற்றை வலியுறுத்தாதது ஏன்?  1973 ஆம் ஆண்டிலேயே லோக் அயுக்தாவுக்கு இணையான பொது ஊழியர் (குற்ற நடவடிக்கை) சட்டம் கொண்டு வந்ததாகவும், பின்னர் முதல்வராக வந்த எம்.ஜி.ஆர் அதை ரத்து செய்து விட்டதாகவும் கலைஞர் அடிக்கடி கூறுவதுண்டு. உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் நோக்குடன் அச்சட்டத்தை அப்போது கலைஞர் கொண்டு வந்திருந்தால், அச்சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அச்சம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே கலைஞருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, பின்னாளில் சர்க்காரியா ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், கோதுமை பேர ஊழல் உள்ளிட்ட புகார்கள் குறித்து அந்த சட்டத்தின்படி விசாரணை நடத்த ஆணையிட்டு, நீதியின் முன் தம்மை  நிறுத்திக் கொண்டாரா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு கலைஞர் விடையளிப்பாரா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டு வருவதாக கடந்த காலங்களில் 5 முறை வாக்குறுதிகளை வழங்கி அத்தனை முறையும் தமிழக மக்களை ஏமாற்றியவர் கலைஞர். தமிழ்நாட்டில் முதல் நாள்... முதல் கையெழுத்து முழு மதுவிலக்கு என்ற முழக்கத்தை பா.ம.க முன்வைத்தவுடன், அதே முழக்கத்தை தி.மு.க.வும் முன்வைத்தது. ஆனால், இப்போது அதிலிருந்தும் தி.மு.க. பின்வாங்கி விட்டது. முதல் நாளில் முதல் கையெழுத்தில் மது விலக்கை ஏற்படுத்துவதாக கூறிவந்த கலைஞர், இப்போது தனிச் சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக கூறுகிறார்.

 டாஸ்மாக் நிறுவனத்தின் பணிகளை மாற்றியமைப்பதற்கு வேண்டுமானால் சட்டத் திருத்தம் தேவைப்படலாம்; அதை பின்னாளில் கூட செய்து கொள்ளலாம். மதுவிலக்கை நடை முறைப்படுத்த சட்டத் திருத்தம் தேவையில்லை. ஆனால், இப்போது சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக கூறுவதன் மூலம் மதுக்கடைகளை மூட கூடுதல் கால அவகாசம் கோருகிறார் கலைஞர். இப்போது கூடுதல் அவகாசம் வாங்கிக் கொண்டு, பின்னாளில் மதுவிலக்கை கிடப்பில் போடுவது தான் தி.மு.க.வின் திட்டம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களின் திட்டம் தமிழக மக்கள் மத்தியில் அம்பலமாகிவிட்டது.

1989 ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தாது மணல் விற்பனையை  தனியாருக்கு தாரை வார்த்தது கலைஞர் தான். அதேபோல், கிரானைட் கற்களை வாங்கி விற்பனை செய்யும் உரிமையை 1989 ஆம் ஆண்டில் தமது மகன் மு.க. அழகிரி, முன்னாள் மருமகன் அதிபன் போஸ் ஆகியோருக்கு வாரி வழங்கியது கலைஞர் தான். அப்படிப்பட்ட கலைஞர் இப்போது கிரானைட், தாது மணல் ஊழலை தடுக்கும் வகையில் அவற்றின் விற்பனையை இளைஞர்களைக் கொண்டு நடத்தப்போவதாக கூறுவது நல்ல நகைச்சுவை. மக்களின் மறதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு 50 ஆண்டுகளாக மக்களை திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வந்தன என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

பா.ம.க. தேர்தல் அறிக்கையிலிருந்து இத்தனைத் திட்டங்களை காப்பியடித்த தி.மு.க. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கான இடு பொருட்களை  இலவசமாக வழங்கும் திட்டத்தை மட்டும் அறிவிக்கவில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுகவுக்கு அக்கறையில்லை, கல்வி நிறுவனங்களின் வருமானத்தையும், அதன்மூலம் ஆட்சியாளர்களுக்கு வரும் வருவாயையும் இழக்க தயாரில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

மக்கள் பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுப்பதுடன் பிரச்சினைக்கான தீர்வையும் முன் வைக்கும் கட்சி எது என்பதை மக்கள் அறிவார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற் றத்திற்காகவும் சிறப்பான செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் திறன் கொண்ட கட்சி எது என்பதையும் மக்கள் அறிவார்கள். அந்தக் கட்சி பா.ம.க. தான் என்பதை மே 19 தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.’’என்று தெரிவித்துள்ளார்.

Monday, April 4, 2016

முதலமைச்சர் வேட்பாளர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை: அன்புமணி





பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பாமக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து 10 நாட்களாகியும், இதுவரை அவர் எதுவும் பேசவில்லை. பேசாதது ஏன். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. 

என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர், மறுநாள் இரண்டு மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்தேன். ஒவ்வொரு மாவட்டமாக மக்களை சந்தித்தேன். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இவ்வாறு கூறினார். 

வாக்களித்த மக்களுக்கு பா.ஜ.கவின் தண்டனையா? ராமதாஸ் கண்டனம்



பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.19 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை 61.32 ரூபாயாகவும், டீசல் விலை 50.09 ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. அடித்தட்டு மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாகக் கூறி கடந்த மார்ச் 17 ஆம் தேதி தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.06 ரூபாயும், டீசல் விலை 1.96 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலைகள்  உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான 35 நாட்களில் பெட்ரோல் விலை இரு தவணைகளில் 5.25 ரூபாயும், டீசல் விலை 3 தவணைகளில் 4.47 ரூபாயும் உயர்த்தப் பட்டிருக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டது கிடையாது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 1, 16 ஆகிய தேதிகளில் தான் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால், இம்முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருந்து, விலையை உயர்த்தியதிலிருந்தே மையஅரசின் நேர்மையின்மை அம்பலமாகி விட்டது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். கச்சா எண்ணெய் விலைகுறைவின் பயன்களை மக்களுக்கு தராமல் அரசே அனுபவிப்பது முறையா? என வினா எழுப்பப்பட்ட போது மத்திய அரசால் பதிலளிக்க முடியவில்லை. எனினும் நிலைமையை சமாளிக்கும் வகையில்,‘‘ எரிபொருள் விலை மிகக் குறைவாக இருந்ததால் தான் வரிகளை உயர்த்தினோம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்துகிறோம். எரிபொருள் விலைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயரும் போது அதை சமாளிக்க கலால் வரிகளை அரசு குறைக்கும்’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். அந்த வாக்கை காப்பாற்ற நினைத்திருந்தால் இப்போது கலால் வரியை கணிசமாக குறைத்து விட்டு இந்த விலையேற்றத்தை தவிர்த்து இருக்கலாம்.

அடுத்தடுத்து 3 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டதாலும், தமிழகத்தில் சாலை பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் சரக்குந்து வாடகையை உயர்த்தப்போவதாக அவற்றின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்போது மீண்டும்  டீசல் விலை உயர்த்தப்பட்டு  இருப்பது சரக்குந்து கட்டணம் மேலும் உயர்த்தப்படுவதற்கு தான் வழிவகுக்கும். இதன் விளைவாக பாலில் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும். யாருக்கோ பயன்படும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக எரிபொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது என்ன வகையான ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

முந்தைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்ட போது அதை எதிர்த்து பாரதிய ஜனதா போர்க்கோலம் பூண்டது. எரிபொருள் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்ணீர் வடித்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறையும் என  பிரதமர் வேட்பாளர் முதல் மக்களவை உறுப்பினர் வேட்பாளர் வரை அனைவரும் வாக்குறுதி அளித்தனர்.  ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு, முந்தைய அரசு செய்த தவறுகளை மட்டுமின்றி, செய்யாத தவறுகளான கலால்வரி உயர்வையும் சேர்த்து செய்கிறது பாஜக. இவற்றையெல்லாம் நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த தண்டனையாகவே பார்க்கத் தோன்றுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை உணர்ந்து அவற்றை நடுவணரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் அனுபவித்து வரும் வலியை  பாரதிய ஜனதாவும் அனுபவிக்கும் நிலையை தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Tuesday, March 29, 2016

தோசையை மாற்றிப் போட்டாலும்” கொள்கை அளவில் ஒற்றுமையாக இருக்கும் திமுக, அதிமுக- ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு மக்கள் தோசையை மாற்றிப் போட்டு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் மக்களைச் சுரண்டும் கொள்கைகளில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கொள்கை உள்ள கட்சி. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 28 ஆவணங்களை வெளியிட்டு உள்ளோம். இதுவரை 15 வரைவு பட்ஜெட்டுகளை வெளியிட்டுள்ளோம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிட்டு வருகிறோம்.



பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களை பற்றி கவலை இல்லை. மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்காக போராடி வருகிறேன். போராட்டக்காரன், போராளி என்று அழைப்பதே எனக்கு பிடிக்கும். பா.ம.க முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி, தன்னுடன் நேருக்குநேர் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்தும் எந்தக்கட்சியும் வரவில்லை. அன்புமணியிடம் திறமை உள்ளது. அவருடன் விவாதிக்க யாருக்கும் திறமை இல்லை.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் செய்வது, இலவசங்களை கொடுப்பது, மதுவை கொடுப்பது போன்ற கொள்கைகளில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தோசையை மாற்றி போடுவது போல 5 முறை கருணாநிதிக்கும், 3 முறை எம்.ஜி.ஆர், 3 முறை ஜெயலலிதா என 2 கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாய்ப்பு அளித்தீர்கள். ஆனால், அவர்கள் கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களுக்கு தொழில் தொடங்க செல்கிறார்கள். இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. கல்விக்கூடங்களை தனியார் நடத்துகிறார்கள். டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

Thursday, March 17, 2016

ஊழல் வழக்கில் அமைச்சர் உதவியாளர் கைது: அமைச்சர்களை தப்ப விடக்கூடாது!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி  ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக சுற்றுலா அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி  கைது செய்யப்பட்டிருக்கிறார்; அமைச்சரின் மகன் தேடப்படுகிறார். இந்த ஊழலில்  மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக கடந்த பல ஆண்டுகளாகவே  குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தாது மணல், கிரானைட், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை வெட்டி எடுத்தல், மின்சாரம், பருப்பு, முட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்தல், அரசுப் பணிகள் சார்ந்த ஒப்பந்தங்களை பெற்றுத் தருதல், வேலை வாங்கித் தருதல் என்று பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் நடப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில்  ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆளுனர் ரோசய்யாவிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக  ஆளுனரிடம் அளித்த புகார் மனு மீது  கடந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், கிருபானந்த முருகன் என்பவர் ஆட்சியாளர்களின் முழு பாதுகாப்புடன் நேற்று அளித்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப் படுகிறார்.  அமைச்சர் சண்முகநாதனின் மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதி மற்றும் பொதுப்பணி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக கிருபானந்த  முருகனிடம் வாக்குமூலம் வாங்கப்படுகிறது. அந்த வாக்குமூலத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ, இல்லையோ அதை காட்டி சில திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். சாதாரண நேரத்தில் இதுபோன்று புகார்கள் அளிக்கப்பட்டால் புகார் கொடுத்தவர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது ஊழல் புகார் மீது அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு காரணம் ஊழலை ஒழிக்க தமிழக ஆட்சியாளர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள் என்பதல்ல... ஊழல் கணக்கு&வழக்கில் நடந்த சில தவறுகளை சரி செய்ய ஆளுங்கட்சி மேலிடம் துடிப்பது தான் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு கூட தெரியும். ஊழல் புகார் மீதான நடவடிக்கைக்கு காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது, ஜெயலலிதாவின் தளபதிகளாக  இருந்து பல்வேறு பேரங்களை முடித்த மூத்த அமைச்சர்கள் இருவருக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்றெல்லாம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது எளிதில் ஒதுக்கிவிடக் கூடிய விஷயமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஊழல்களை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்களாகும்.

ஊழல் குற்றச்சாற்றின் அடிப்படையில் அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பதும், அமைச்சரின் மகன் தேடப்படுவதும், மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதும் அவர்களுடன் மட்டுமே முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இதில் எதையும் ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது ஆட்சியில் எதுவும் நடக்காது. மாறாக,  நடைபெற்ற ஊழல்களுக்கான கணக்கை சரியாக காட்டாததற்காகத் தான் நடவடிக்கை பாய்கிறது.

எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள மூத்த அமைச்சர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  அவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கும் இம்முறைகேடுகளில் பங்கு உண்டு என்பதால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

Wednesday, March 9, 2016

தொழில் அனுமதி ஊழலில் தமிழகத்துக்கு முதலிடம்: ஜெயலலிதா அரசின் சாதனை!: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’புதிய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு வசூலித்து ஊழல் செய்வதில் ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் எத்தகைய ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு இது தான் அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.

2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாக வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி எதிர்மறையான சாதனைகளைத் தான் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த தொழில் அனுமதி ஊழலில் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் 20 பெரிய மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்காக தில்லியைச் சேர்ந்த தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு  நடத்திய ஆய்வில் தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

டது. இவற்றில் தொழிலாளர் வளம், ஆட்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும், அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதாலும் இவை சாத்தியம் ஆகியிருக்கின்றன.

ஆனால், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு முக்கிய அம்சமான ‘நல்ல வணிக தட்பவெப்பநிலை’யில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் நல்ல வணிக தட்பவெப்பநிலை நிலவுகிறதா? என்பது, தொழில் தொடங்க அனுமதி அளிக்க கையூட்டு கோரப்படுகிறதா? அனுமதி தர அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? சுற்றுச்சூழல் அனுமதிக்கு எவ்வளவு காலம் ஆகிறது? என்பன உள்ளிட்ட 22 காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த காரணிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் ஊழலில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து தொழில்துறையினரும் (100%) தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் பெருமளவில் பணத்தை கையூட்டாக தர வேண்டும்; இல்லாவிட்டால்  தொழில் தொடங்க அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இந்த புள்ளிவிவரம் தேர்தல் கருத்துக் கணிப்புகளைப் போல கற்பனையாக எழுதப்பட்டதல்ல. மாறாக தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் நேரடியாக பெறப்பட்டதாகும். தமிழகத்தில் இப்போது தொழில் நடத்துபவர்கள் அனைவரும் அதற்காக  ஆட்சியாளர்களிடம் கையூட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதால் தான் இவ்வாறு பதில் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆய்வில் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. மாறாக இது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். இதுபற்றி ஏராளமான ஆதாரங்களுடன் நான் பலமுறை அறிக்கை வெளியிட்டு உள்ளேன். ஏற்கனவே தொழில் தொடங்கிய சிறு தொழிலதிபர் ஒருவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கும் போது,‘‘ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தொழிற்சாலையை நான் அமைத்தேன். அதில் உற்பத்தித் தொடங்கவிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்டத் துறையிலிருந்து அறிவிக்கை வந்தது. அதில் தொழிற்சாலைக்கு இன்னும் சில அனுமதிகளை வாங்க வேண்டும்; அந்த அனுமதிகளை 10 நாட்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் துறையின் அதிகாரியை சந்தித்த போது, அமைச்சரிடம் பேசும்படி கூறினார்.

 அமைச்சரை சந்தித்த போது, அனைத்து அனுமதிகளையும் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பேரம் பேசி அதை 20 லட்சமாக குறைத்தேன். எனது தொழிற்சாலையின் முதலீடே ரூ.1 கோடி தான் எனும் போது அதற்கு அனுமதி வாங்க ரூ.20 லட்சம் கையூட்டு என்பது மிகப் பெரிய தொகை’’ என்று கூறியிருந்தார். இப்போது இந்த தகவல் வெளியாகியிருப்பதன் மூலம் எனது குற்றச்சாற்று உண்மை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிப்பதில் தாமதமும், ஊழலும் தான் புதிய தொழில் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொழில்வளம்  பெருகாததற்கு காரணம் ஊழல் தான் என்பதற்கு இதை விட வலிமையான ஆதாரம் தேவையில்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை நிலவுவதால் தான் தொழில் தொடங்க யாரும் முன்வருவதில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு குவிந்தாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இதுவரை ஒரு புதிய தொழிற்சாலைக்கு கூட அடிக்கல் நாட்டப்படவில்லை. இந்த அவலநிலைக்கு காரணம் ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆட்சியாளர்களின் ஊழல் வெறி காரணமாக தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 70 நாட்களில் பா.ம.க. ஆட்சி அமையும் போது இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அப்போது தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதை தீர்மானிப்பதற்கான 5 அம்சங்களிலும் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும் என்பது உறுதி!’’

Tuesday, March 8, 2016

மீண்டும் தலைதூக்கும் கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ராமதாஸ்

சென்னை: காவல்துறை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு சென்னையில் மீண்டும் தலைதூக்கியுள்ள கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை கோயம்பேடு சந்தை அருகில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த கும்பலை காவல்துறை கைது செய்து, அக்கும்பலிடமிருந்து அதிநவீன துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறது. சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் எந்த தடையும், அச்சமும் இல்லாமல் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. View Photosசென்னையில் பிடிபட்ட கும்பல் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் இப்போது புதிதாக ஈடுபட்டவர்கள் அல்ல. 4 பேர் கொண்ட இக்கும்பல் பல ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பல வாரங்களாக இவர்களை கண்காணித்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து துப்பாக்கி வாங்க விரும்பும் போக்கிலிகளைப் போல நடித்து ஓரிடத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.பிடிபட்ட கும்பலும் நீண்டநாட்களாக கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதையும், பிகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரூ.40 ஆயிரத்துக்கு கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து ரூ.1 லட்சத்துக்கு விற்பதையும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, மேலும் பல கும்பல்களும் கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டிருக்கின்றன. தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் தலைவிரித்தாடுவதை இந்த வாக்குமூலம் உறுதி செய்கிறது.தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. ஏதேனும் பெரிய அளவில் குற்றச்செயல்கள் நடைபெறும் போது கள்ளத்துப்பாக்கி விற்பனையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதும், அதன்பின் நிறுத்தப்படும் கள்ளத் துப்பாக்கி விற்பனை அடுத்த சில மாதங்களில் மீண்டும் தலைதூக்குவதும் வாடிக்கையாகிவிட்டன.கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கான எந்த முயற்சியையும் தமிழகத்தை ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சியும் மேற்கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் வட இந்திய மாணவர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான போதே தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.தமிழக அரசும், காவல்துறையும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகியிருக்காது. மாறாக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டியதால் தான் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆலமரமாக விழுது விட்டிருக்கிறது.கள்ளத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் காமேஷ், அவருடன் வந்த போக்கிலி ஒருவரால் கள்ளத்துப்பாக்கி மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மதுரையில் சில வாரங்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜு பயன்படுத்தி வந்த இரு அலுவலகங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.அதற்கு ஒருவாரம் முன்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது. அண்மையில் சென்னை வியாசர்பாடியில் பள்ளி வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்தனர். இந்த குற்றச்செயல்கள் நடந்து பல மாதங்களாகியும் இவற்றில் ஒரு குற்ற வழக்கில் கூட இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் 5 ஆண்டுகளில் சட்டம் -ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 9948 படுகொலைகள், சுமார் ஒரு லட்சம் கொள்ளை மற்றும் திருட்டுகள் நடந்துள்ளன. இவை போதாது என கள்ளத்துப்பாக்கி கலாச்சாரமும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்கு கூட கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை தகர்த்து எறியும் திறமை தமிழக காவல்துறைக்கு உண்டு. ஆனால், இதுவரை ஆட்சியாளர்களின் பிடியில் இருந்ததால் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. இப்போது அரசு நிர்வாகத்தில் ஆட்சியாளர்கள் பிடி அகன்றுவிட்ட நிலையில், காவல்துறை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Sunday, March 6, 2016

சாத்தானின் சாபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் : ராமதாஸ்


 அன்புமணி இராமதாஸ் விடுக்கும் உலக மகளிர் நாள் செய்தி! :
 ’’உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் உன்னதமான அவதாரம் என்றால் அது பெண்கள் தான். அவர்கள் தான் இந்த உலகின் ஆக்கும் சக்திகள். அவர்களால் தான் குடும்பமும், சமுதாயமும், ஊரும், மாநிலமும், நாடும், உலகமும் முழுமை பெறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மகளிருக்கு உரிய அங்கீகாரம் வழங்க அரசுகள் தவறி விட்டன. அதற்கெல்லாம் மேலாக மது என்ற தீய சக்தியை பாய விட்டு, ஆண்களை அதற்கு அடிமை ஆக்கி குடும்பங்களை சீரழிக்கும் அழிவு சக்தியாக தமிழக அரசு திகழ்கிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்று மகளிர் கோரினால், அவர்களையே மதுவுக்கு அடிமையாக்கும் இழிசெயலை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. பெண்களை மதிக்காத வீடும், பெண்களை நிம்மதியாக வாழ அனுமதிக்காத நாடும் சாத்தானின் சாபத்திற்கு ஆளானவையாகவே கருதப்படும்.

மது என்ற அரக்கனை ஒழிப்பதன் மூலம் தான் இந்த சாத்தானின் சாபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும். இது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதன்மை இலக்கு ஆகும். ஆட்சியில் அமர்ந்தவுடன் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தை இடுவதன்  மூலம் இந்த சாபத்திற்கு முடிவு கட்டப்படும். அதற்காக கையெழுத்திடும் வரத்தை பெறுவதற்காக கடுமையாக உழைக்க இந்நன்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.’’

மதுவை விற்றுக்கொண்டு மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடு : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் விடுத்துள்ள உலக மகளிர் நாள் செய்தி! 
’’ மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது. 

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும்  சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன. மற்றொரு பக்கம் தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பு  இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில்  தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 37,577 ஆக அதிகரித்துள்ளது.

சமூகச் சூழலை எடுத்துக் கொண்டால்,தமிழகத்தில், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் மது தான். குடும்பங்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்து கொண்டு, அரசே மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சமாகவே இருக்கும். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வென்றதைப் போல தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பமும் பா.ம.க. ஆட்சி என்ற கருவி மூலம் நிறைவேறும்.  இப்படி ஒரு உன்னத சாதனையை படைப்பதற்காக கடுமையாக உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.’’

அரசின் மனித நேயமின்மையே காரணம்!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அறிக்கை:
’’மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த அகதிகளின் உயிரைக் காக்கத் தவறியதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் சில அதிகாரிகளின் மனிதநேயமற்ற அணுகுமுறை தான் இலங்கை அகதி ரவிச்சந்திரனின் தற்கொலைக்கு காரணம் ஆகும். கூத்தியார்குண்டு முகாமிலுள்ள அகதிகளை கணக்கெடுக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முகாமில் நேற்று கணக்கெடுப்புக்காக சென்ற வருவாய் அதிகாரி ஒருவர், ரவிச்சந்திரன் முகாமில் இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் உடல்நலம் பாதித்த பேரனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்ததால் தாமதமானதாக கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரி, ரவிச்சந்திரனின்  பெயரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ முடியும்? என்று ரவிச்சந்திரன் கேட்ட போது, வாழ வழியில்லை என்றால் மின்சாரம் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள் என்று திமிராகக் கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்த  உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மின் கம்பியை கால்களால் மிதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இலங்கைப் போரில், உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தங்களின் உடமைகளையெல்லாம் இழந்து அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை தொப்புள் கொடி உறவுகளாக கருதி அரவணைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசு மனிதநேயமின்றி அவர்களை வேண்டாத விருந்தாளிகளாகவும், கூடுதல் சுமையாகவும் கருதுவதன் விளைவு தான் ஓர் அப்பாவி உயிரை மாய்த்துக் கொண்டதில் முடிந்திருக்கிறது. அரசின் தவறான அணுகு முறையால்  அகதிகள் உயிரை மாய்த்துக் கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டும், மர்மமான முறையிலும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை. இலங்கைத் தமிழ் அகதிகளை மனிதர்களாக பார்க்காமல் விலங்குகளை விட கேவலமாக தமிழக அரசு கருதுவதே இதற்கு காரணம்.

அகதிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்; செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடி அங்குள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இப்போதைய அதிமுக அரசும், முந்தைய திமுக அரசும் இக்கோரிக்கையை காதில் போட்டுக் கொள்வதே இல்லை. மாறாக அங்குள்ள அகதிகளை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் தான் காவலர்கள் இன்பம் காண்கின்றனர். காவல்துறையினரின் கொடுமைகளை தாங்க முடியாமல்  சசிகரன் என்ற அகதி நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றார். செந்தூரன் என்ற அகதி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல முறை சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் அவரது போராட்டத்துக்கு பணிந்து 17 அகதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும், மீதமுள்ள ஈழ அகதிகள் மீதான கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

முகாம்களிலும், சிறப்பு முகாம்களிலும் இழைக்கப்படும் கொடுமைகள், முகாமை விட்டு வெளியேறி சுதந்திரமாக வாழ முடியாத அவலம் ஆகியவற்றை சகித்துக் கொள்ள முடியாத அகதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆஸ்திரேலியாவில் குடியேறும் நோக்குடன் படகுகள் மூலம் பயணம் மேற்கொள்வதும், பயணத்தின் போது படகு கவிழ்ந்து இறப்பதும் வாடிக்கையாகிவிட்டன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று 600க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலரின் உயிரிழப்பு வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் காரணம் ஈழ அகதிகளை அகதிகளாக பார்க்காமல் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அரசு பார்ப்பது தான்.

2011-ஆம் ஆண்டுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இலங்கை தமிழ் அகதிகள் கவுரவமாக வாழ வகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் அடங்கிய அகதிகள் சிறப்பு மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அத்தகைய திட்டம் செயல்படுத்தப் படாததால் மறு வாழ்வு தேடிய அகதிகள் இருக்கும் உயிரை இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மின்சார கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழ் அகதிகளின் உயிரிழப்புக்கும் தமிழகத்தை ஆளும் கட்சியும்,  ஆண்ட கட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.  

போர் உள்ளிட்ட காரணங்களால் தஞ்சம் தேடி வரும் அகதிகளை உள்நாட்டு குடிமக்களைப் போல நடத்த வேண்டும் என ஐ.நா கூறுகிறது. ஆனால், ஈழத் தமிழ் அகதிகளின் நலனுக்காக சட்டம் கூட தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை. 

இந்தியாவில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீன அகதிகளும், திபெத் அகதிகளும் கவுரவமாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது. திபெத் அகதிகளுக்கு கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கொடைக் கானல் போன்ற பகுதிகளில் அவர்கள் வணிகம் செய்ய உதவிகள் வழங்கப் பட்டிருக்கின்றன. வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியர் களுக்குக் கூட சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், நமது சொந்தங்களாக ஈழ அகதிகளை குற்றவாளிகளைப் போலவே ஆட்சியாளர்கள் பார்க்கின்றனர். 

இந்த நிலை மாற்றப்பட்டால் தான் இலங்கை அகதிகள் தமிழகத்தில் சுய மரியாதையுடனும், கவுரவத்துடனும் வாழ முடியும். பாட்டாளி மக்கள் கட்சி அரசு அமைந்தவுடன் ஈழத் தமிழ் அகதிகளின் குறைகள் தீர்க்கப்படும்; கோரிக்கைகள் ஏற்கப்படும் என உறுதியளிக்கிறேன்.’’

Thursday, March 3, 2016

அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்! : ராமதாஸ்

அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:
’’நாளிதழ்களைத் திறந்தாலே அ.தி.மு.க. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்த செய்திகள் தான் பக்கம் பக்கமாக இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இப்புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டிய அரசு, இவற்றை மூடி மறைக்கத் துடிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அரசு பதவியேற்ற நாளில் இருந்தே அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கத் தொடங்கி விட்டது. தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தான் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டத்தையும், விதியையும் காலில் போட்டு மிதித்து விட்டு, பணம் கொடுப்பவர்களுக்குத் தான் அரசு வேலை என்பது எழுதப்படாத சட்டமாக மாறி விட்டது. குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பணி நியமனம் நடக்கும் போக்குவரத்துத் துறை, சத்துணவு மற்றும் சமூக நலத்துறையில் தான் அதிக ஊழல்களும், மோசடிகளும் அரங்கேற்றப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் ஓட்டுனர், நடத்துனர், பொறியாளர் வேலை தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களிடம் மோசடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ. 4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் 7500-க்கும் மேற்பட்ட ஓட்டுனர், நடத்துனர்களும் பொறியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஓட்டுனர், நடத்துனர் வேலைக்கு ரூ.3 லட்சம், பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என விலை நிர்ணயித்து தமிழகம் முழுவதும் தரகர்கள் மூலம் வசூல் வேட்டை நடைபெற்றது. இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்த ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட வலியுறுத்தி தமிழக ஆளுனர் ரோசய்யாவிடம் எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி குழு மனு அளித்தது. ஆனால், அதன் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இடைப்பட்ட காலத்தில் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது உறவினர்களும் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக  இப்போது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு பணியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி  பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மீதும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அறையிலேயே தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமும் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சின்னையா ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் காமராஜ், தோப்பு வெங்கடாச்சலம், ஆனந்தன் உட்பட மேலும் பல அமைச்சர்கள் மீதும் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் மீது மோசடி புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 58 மாதங்களில் 32 அமைச்சர்கள் பதவிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மோசடிப் புகார்களுக்கு ஆளானவர்கள் ஆவர். இதை வைத்துப் பார்க்கும் போது மோசடிக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தான் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும், அவ்வாறு பதவி நீக்கம் செய்வது மட்டுமே தண்டனையாகாது. மாறாக மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால், மக்களுக்காகவே வாழ்வதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, பாதிக்கப் பட்ட மக்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட மறுப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தினால் அது போயஸ் தோட்டம் வரை நீளும் என்ற அச்சம் தான் அவரைத் தடுக்கிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் மீது விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் ஜெயலலிதா விசாரணையை தடுக்கிறார் என்று தான் கருத வேண்டியிருக்கும்.’’

ராமதாஸ் எழுதிய 6 நூல்கள் வெளியீட்டு விழா



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகள் ‘என் கடன் பணி செய்வதே’ தலைப்பில் 5 தொகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

1. சமூக நீதியும் தமிழும் என் உயிர் மூச்சு, 2. மக்களைக் காக்க மது விலக்கு, 3. ஒரே தீர்வு தமிழீழம், 4. நதிநீர் பிரச்சினைக்கு நான் விரும்பும் தீர்வு, 5. எழுக தமிழ்நாடே! ஆகியவை தான் அந்த 5 தொகுதிகளின் தலைப்புகள் ஆகும். அவை மட்டுமின்றி, ராமதாஸின் டுவிட்டர்ப் பதிவுகள் ‘என் குறள்’ என்ற தலைப்பில் தனிப் புத்தகமாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

ராமதாஸ் படைப்பில் உருவான இந்த 6 நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர், தியாகராயா சாலையில் உள்ள ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் வரும் 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். நிறைவாக ராமதாஸ் ஏற்புரை நிகழ்த்துவார். விழாவுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே மணி தலைமையேற்கிறார். 

Monday, February 29, 2016

வணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல: ராமதாஸ் கண்டனம்



டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், வணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உலக சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்களின் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்படுவதாகவும், டீசல் விலை ரூ.1.51 உயர்த்தப்படுவதாகவும்  எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.56.08 ஆக குறைந்துள்ள நிலையில், டீசல் விலை ரூ.47.13 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலைக்குறைப்பு ஓரளவு நிம்மதி அளிக்கும் போதிலும், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் வெளிப்படை தன்மையற்ற முறையும், அவற்றின் மீதான வரிகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசு கடைபிடிக்கும் மனிதநேயமற்ற அணுகுமுறையும் இயற்கை அறத்திற்கு எதிரானவை ஆகும். பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் என அறிவித்தது. இதை மத்திய அரசே கடைபிடிக்கவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா விலை சரியும் போது அதன் பயனை மக்கள் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், விலைக் குறைப்பு செய்யப்படுவதற்கு முன்பே கலால் வரியை உயர்த்தி, விலைக் குறைப்பை மத்திய அரசு தடுப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற, முழுக்க வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும்.

உலக சந்தையில் நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 32.53 டாலர் ஆகும். இது பிப்ரவரி 15 ஆம் தேதி விலையான 30.48 டாலரை விட 2.05 டாலர் அதிகமாகும். இந்த அடிப்படையில் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதாக இருந்தால், டீசல் விலையைப் போல பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டீசல் விலையை உயர்த்தி விட்டு, பெட்ரோல் விலையை குறைப்பதென்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை பெட்ரோல் விலை ஏற்கனவே அதிகமாக உயர்த்தப்பட்டு இப்போது பெயரளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை எண்ணெய் நிறுவனங்கள் விளக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 33 ரூபாய், டீசல் 24 ரூபாய் என்ற விலைக்குத் தான் விற்கப்பட வேண்டும். ஆனால், அதைவிட அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு மத்திய அரசின் ஆசை தான் காரணமாகும்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். இவ்வளவு வருமானத்தை கூடுதலாக  ஈட்டும் மத்திய அரசு இப்போது டீசல் விலையை உயர்த்தாமல் இருந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது.  லிட்டருக்கு ரூ.13.47 கூடுதல் வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அதில் பத்தில் ஒரு பங்கை குறைப்பதால் எதுவும் குறைந்து விடாது. ஆனால், அனைத்து செலவுகளுக்கும் பெட்ரோல், டீசல் மீதான வரியிலிருந்து  தான் வருவாய் திரட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆசை தான் இந்த நிலைக்கு காரணமாகும்.

 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 19.73 ரூபாயை கலால் வரியாக வசூலிக்கிறது. இது தவிர சாலை பராமரிப்புக் கட்டணமாக 2 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது. இவை தவிர தமிழக அரசின் சார்பில் மதிப்பு கூட்டு வரியாக 27%, அதாவது 12.69 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரியாக மட்டும் ரூ.34.42 வசூலிக்கப்படுகிறது.  டீசல் மீதும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்திச் செலவை விட அதிக தொகையை வரியாக வசூலிப்பது கந்து வட்டிக்கடை நடத்துவதை விட மிக  மிக மோசமான செயலாகும். இது போன்ற வணிக நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படக்கூடாது.

டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், அதற்கு இணையாக சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இது சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

Monday, February 22, 2016

சென்னை: மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாவும், வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்காணல், மாநாடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்நிலையில், பாமக சார்பில் இன்னும் சில தினங்களில் சென்னையை அடுத்த வண்டலூரில் மாநாடு நடைபெற உள்ளது.இது தொடர்பாக தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார்
வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன்.

ஆட்சி மாற்றம்... தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும்.
நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
Posted by: Jayachitra Published: Monday, February 22, 2016, 14:00 [IST] .vuukle-custom-rating { font-size: 14px; padding-top: 0px; padding-bottom: 9px; text-align: right; } .vuukle-custom-rating .star-rating{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;display:inline-block;font-size:0;height:20px;margin-bottom:-3px;margin-right:5px;overflow:hidden;position:relative;white-space:nowrap;width:100px;}.vuukle-custom-rating .star-rating input{-moz-appearance:none;display:inline-block;height:100%;margin:0;opacity:0;padding:0;position:relative;width:20%;z-index:2;}.vuukle-custom-rating .star-rating i{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;height:100%;left:0;opacity:0;position:absolute;top:0;width:20%;z-index:1;}.vuukle-custom-rating .star-rating input.rad:hover+i,.vuukle-custom-rating .star-rating input:checked+i{opacity:1;}.vuukle-custom-rating .star-rating i~i{width:40%;}.vuukle-custom-rating .star-rating i~i~i{width:60%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i{width:80%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i~i{width:100%;} உங்களது ரேட்டிங்: googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1413541577263-0'); }); சென்னை: மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாவும், வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்காணல், மாநாடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்நிலையில், பாமக சார்பில் இன்னும் சில தினங்களில் சென்னையை அடுத்த வண்டலூரில் மாநாடு நடைபெற உள்ளது.இது தொடர்பாக தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நெஞ்சம் இனிக்கிறது... 1/13 நெஞ்சம் இனிக்கிறது... வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன். ஆட்சி மாற்றம்... 2/13 ஆட்சி மாற்றம்... தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும். ஆட்சிகளுக்கு முடிவு கட்டி 3/13 ஆட்சிகளுக்கு முடிவு கட்டி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மாற்றத்திற்கான விதை 4/13 மாற்றத்திற்கான விதை அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இவை தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையாக அமைந்தன.
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு மாநாடும் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதில்லை; எந்த ஒரு மாநாட்டுக்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டதில்லை என்று வியக்கும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன். கங்காதரன், கே.என். சேகர், பாலயோகி மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வதை விட பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் இம்மாநாட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை தகர்த்து இம்மாநாட்டை நடத்தவிருக்கிறோம். இது வெற்றிக்கு முதல்படி.

Sunday, February 21, 2016

வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும்! ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல் 

‘’அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே...!
வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி  சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இவை தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையாக அமைந்தன.

பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரையிலான ஓராண்டு காலத்தில் நமது முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்புகள், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்களைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டங்கள், எட்டு திசையிலும் நமது வெற்றிக்கு கொட்டு முரசு கொட்டும் வகையில் 8 மண்டல மாநாடுகள், சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டத்தை உருவாக்கும் வகையில் ‘‘ நாம் விரும்பும் சென்னை’’ கொள்கை ஆவணத்தை வெளியிட்டதுடன், அது குறித்து சென்னை பெருநகரம் முழுவதும்  பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது என நாம் கடந்து வந்த மைல்கற்கள் ஏராளம்.

 இப்போது நாம் நிற்கும் இடத்திலிருந்து ‘மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம்’ என்பது தொட்டுவிடும்  தூரம் தான். தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதன் முதற்கட்டமாகத் தான் தலைநகரின் நுழைவாயிலான வண்டலூரில் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் மாநில மாநாட்டை வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகலில் மிகச்சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.


தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு மாநாடும் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதில்லை; எந்த ஒரு மாநாட்டுக்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டதில்லை  என்று வியக்கும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன். கங்காதரன், கே.என். சேகர், பாலயோகி  மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வதை விட பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் இம்மாநாட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை தகர்த்து இம்மாநாட்டை நடத்தவிருக்கிறோம். இது வெற்றிக்கு முதல்படி.

இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து 20 ஆண்டுகளில் கல்வித் துறையிலும், சுகாதாரத் துறையிலும், வேளாண் துறையிலும் கட்டி எழுப்பப்பட்ட முன்னேற்றங்கள், அடுத்த 50 ஆண்டுகளில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. கல்வியும், சுகாதாரமும் தனியாரின் கைகளுக்கு போய்விட்டன. 

 ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் ஈட்டும் ஊதியத்தின் பெரும்பகுதியை கல்விக்காகவும், மருத்துவச் செலவுகளுக்காகவுமே செலவிட வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் விவசாயம் லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்த நிலை மாறி, விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலைக்கு தூண்டும் கருவியாக மாறிவிட்டது. இவை தவிர சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கண்டது சீரழிவைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பது தாம் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இதுவரை நடந்த 8 மண்டல மாநாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவற்றை விஞ்சும் வகையில் இந்த மாநில மாநாடு அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்... இதை நீங்கள் நிறைவேற்றுவீர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.நமது லட்சியப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கவிருப்பது பாட்டாளிகளின் வருகை தான். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான். சென்னை மாநகரின் நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த மாநாடு நடைபெறவிருப்பதால் போக்குவரத்துக்கும், பொதுமக் களுக்கும் எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வண்டலூரில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’

தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில் கூட்டணி.... படுதீவிரமாக இருக்கும் ராமதாஸ்

சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில்தான் கூட்டணி என்பதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதாகவும் அதிமுகவுடன் கூட்டணி முயற்சிக்கு கட்சியில் சிலர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் எடுத்த எடுப்பிலேயே தடை போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே போட்டி; தங்களது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.இம்முறை சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவை தக்க வைக்க அக்கட்சி பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது

நோ கூட்டணி ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் தனித்து போட்டி என்பது விபரீதமாகத்தான் முடியும்; கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என பாமக ஆதரவு அறிவுஜீவிகள் டாக்டர் ராமதாஸுக்கு ஆலோசனை கூறி இருந்தனராம். ஆனால் இதை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம்
அதிமுக வலை? இதேபோல் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் நிலையில் பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அதிமுக காய்களை நகர்த்தி வருகிறதாம். இதற்கு கட்சியிலும் சிலர் ஆதரவு தெரிவிக்க, ஆனால் 'கூட்டணி' குறித்து யார் பேசினாலும் அதை நிராகரித்து விடுகிறாராம் ராமதாஸ்
ராமதாஸைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்கு சதவீதத்தை பெற்றாக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளாராம். ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில் பாமக 5.23% வாக்குகளைதான் பெற்றது. இதனால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பறிகொடுத்தாக வேண்டிய நிலைக்கு பாமக தள்ளப்பட்டது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 6% முதல் 8% வாக்குகளைப் பெற வேண்டும்; மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் பாமக முனைப்புடன் உள்ளது
Posted by: Mathi Published: Monday, February 22, 2016, 11:16 [IST] .vuukle-custom-rating { font-size: 14px; padding-top: 0px; padding-bottom: 9px; text-align: right; } .vuukle-custom-rating .star-rating{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;display:inline-block;font-size:0;height:20px;margin-bottom:-3px;margin-right:5px;overflow:hidden;position:relative;white-space:nowrap;width:100px;}.vuukle-custom-rating .star-rating input{-moz-appearance:none;display:inline-block;height:100%;margin:0;opacity:0;padding:0;position:relative;width:20%;z-index:2;}.vuukle-custom-rating .star-rating i{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;height:100%;left:0;opacity:0;position:absolute;top:0;width:20%;z-index:1;}.vuukle-custom-rating .star-rating input.rad:hover+i,.vuukle-custom-rating .star-rating input:checked+i{opacity:1;}.vuukle-custom-rating .star-rating i~i{width:40%;}.vuukle-custom-rating .star-rating i~i~i{width:60%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i{width:80%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i~i{width:100%;} உங்களது ரேட்டிங்: googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1413541577263-0'); }); சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில்தான் கூட்டணி என்பதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதாகவும் அதிமுகவுடன் கூட்டணி முயற்சிக்கு கட்சியில் சிலர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் எடுத்த எடுப்பிலேயே தடை போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே போட்டி; தங்களது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.இம்முறை சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவை தக்க வைக்க அக்கட்சி பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது. நோ கூட்டணி 1/5 நோ கூட்டணி ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் தனித்து போட்டி என்பது விபரீதமாகத்தான் முடியும்; கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என பாமக ஆதரவு அறிவுஜீவிகள் டாக்டர் ராமதாஸுக்கு ஆலோசனை கூறி இருந்தனராம். ஆனால் இதை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். அதிமுக வலை? 2/5 அதிமுக வலை? இதேபோல் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் நிலையில் பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அதிமுக காய்களை நகர்த்தி வருகிறதாம். இதற்கு கட்சியிலும் சிலர் ஆதரவு தெரிவிக்க, ஆனால் 'கூட்டணி' குறித்து யார் பேசினாலும் அதை நிராகரித்து விடுகிறாராம் ராமதாஸ். அங்கீகார பிரச்சனை 3/5 அங்கீகார பிரச்சனை ராமதாஸைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்கு சதவீதத்தை பெற்றாக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளாராம். ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில் பாமக 5.23% வாக்குகளைதான் பெற்றது. இதனால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பறிகொடுத்தாக வேண்டிய நிலைக்கு பாமக தள்ளப்பட்டது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 6% முதல் 8% வாக்குகளைப் பெற வேண்டும்; மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் பாமக முனைப்புடன் உள்ளது. பாஜக வரும்? 4/5 பாஜக வரும்? பாமக தலைமையிலான கூட்டணியில் இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் சேரவில்லை. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து பாமகவுக்கு தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகிறது. இதை ராமதாஸ் விரும்பவில்லை. அதே நேரத்தில் விஜய்காந்தோ அதிமுகவோ தங்களை கூட்டணியில் சேர்க்காவிட்டால், பாஜக கடைசியாக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு பாமக தலைமையிலான கூட்டணியில் இணையும் என்றே தெரிகிறது. அத்துடன் சில ஜாதிய கட்சிகளும் பாமக அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Wednesday, February 17, 2016

பாமகவின் நெத்தியடி அட்வைஸ்... வாக்கு சேகரிக்கப் போகும்போது டீ கேட்டு நச்சரிக்கக் கூடாது!

தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பாமக. அதில் கூறியிருப்பதாவது:-1. தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும்.2. ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தலுக்குள் குறைந்தது 3 முறையாவது நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கூறி அவர்களை பா.ம.க.வின் நிரந்தர ஆதரவாளராக மாற்ற வேண்டும்.3. தமிழகத்தின் பெரும்பான்மை வாக்காளர்களான பெண்கள் அதிமுவுக்கும், திமுகவுகும் ஏன் வாக்களிக்கக் கூடாது? பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பதை விளக்கும் துண்டறிக்கையை ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் கொண்டு சென்று சேர்க்க/விளக்க வேண்டும்.4. வறுமையை ஒழிக்க கல்வியும், ஆரோக்கியமும் முக்கியம். ஆனால், இவற்றை பெறுவதற்காக கடன் வாங்கி மக்கள் வறுமையில் தள்ளப்படும் நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கி யிருப்பதையும், பா.ம.க. ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மிச்சமாகும் என்பதையும் வாக்காளர்களிடம் விளக்கிப் புரிய வைக்கவேண்டும்.5. விவசாயிகளுக்கான அனைத்து இடுபொருட்கள், வேளாண் பயன்பாட்டுக்கான கருவிகள், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான செயல்திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்பதை விளக்க வேண்டும்.6. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் யார்? மத்திய அமைச்சராக இருந்த போது அவர் படைத்த சாதனைகள் என்ன? உலக அளவில் அவர் பெற்ற விருதுகள்/பாராட்டுக்கள் என்ன? தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் உருவாக்கியுள்ள செயல்திட்டம் என்ன? என்பதையெல்லாம் பொதுமக்களுக்கு விரிவாக விளக்க வேண்டும்.7. வாக்கு கேட்கச் செல்லும் போது தேநீர் வாங்கித் தரும்படி வேட்பாளரை கேட்கக்கூடாது. மாறாக வேட்பாளருக்கு தொண்டர்கள் தேநீர் வாங்கித் தர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி வலிமையான கட்சி... அதன் தொண்டர்கள் எதையும் எதிர்பாராதவர்கள். எனவே, பிரச்சாரத்திற்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.8. வேட்பாளர் சொந்த வாகனம் வைத்திருந்தால் அதில் சென்று வாக்காளர்களை சந்திக்கலாம். வேட்பாளரிடம் வாகனம் இல்லை என்றால் வாகனம் வைத்திருக்கும் நிர்வாகிகள் வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக வாகனம் அளித்து உதவ வேண்டும்.9. அதிமுக, திமுக கட்சிகள் அளிக்கும் ரூ.1000, ரூ.500 பணத்திற்காக விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையான வாக்குகளை விற்று ஏமாந்து விடக்கூடாது என வாக்காளர்களிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலை மதிப்பற்ற வாக்குரிமையை விலை கொடுத்து வாங்கும் திமுக, அதிமுகவின் கலாச்சாரத்தை பிரச்சாரத்தின் மூலம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.10. பூத் செலவு என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட தேவையற்ற கலாச்சாரம் மற்றும் செலவு ஆகும். பூத் செலவு என்பது பா.ம.க.வின் அகராதியில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.11. பா.ம.க.வின் சுவர் விளம்பரங்கள் சுவற்றின் உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் எழுதப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடந்த இடங்களில் சேரும் குப்பைகளை கட்சியினரே அப்புறப்படுத்த வேண்டும்.12. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களுடன் தொகுதி நிலையிலான தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெளியிடப்பட வேண்டும்.13. ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளில் சாத்தியமானவற்றை தீர்ப்பதற்கான வாக்குறுதியை அளித்து, ஊர்த் தலைவர்களுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.14. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் யாருக்கும் தொல்லை தராத வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். பிரச்சாரத்திற்காக செல்லும் போது ஏதேனும் இடத்தில் மற்ற கட்சியினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் அவர்களின் பிரச்சாரம் முடிவடையும் வரை காத்திருத்து அதன் பின்னர் வாக்கு சேகரிப்பைத் தொடங்க வேண்டும். எதிர்க்கட்சியினரிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.15. தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், கடந்த கால சாதனைகள் ஆகியவற்றைக் கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான அரசியலை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின் பற்ற வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது''இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-release-pmk-election-guidelines-247166.html

Saturday, February 13, 2016

அம்மா குடிநீர் திட்டம்- தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்காக அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படுவதற்கு துளி கூட வாய்ப்பு இல்லாத இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பது சென்னை மாநகர மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

‘‘அம்மா குடிநீர் திட்டம் சென்னை மாநகரில் ஏழை மக்கள் அதிகமாக வாழும் 100 இடங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக அந்த பகுதிகளில் மணிக்கு 2,000 லிட்டர் நீரை எதிர்மறை சவ்வூடு பரவல் மூலம் சுத்திகரித்து  வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஏழை மக்கள் குடிநீர் பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்’’ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எதையும் அவர் அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க முடியாது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக அறிந்திருப்பது தான்.

இலவசக் குடிநீர் திட்டத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறாரே தவிர அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான செலவு குறித்த மதிப்பீடுகள் செய்யப்படவில்லை. இன்றே திட்டச்செலவு மதிப்பிடப்பட்டு, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படுவதாக வைத்துக் கொண்டாலும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தண்ணீரை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்கள் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு  அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் விதிகளின்படி செய்யப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். இன்னும் 15 நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டால் அதன்பிறகு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது. இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு காரணம், இப்படி ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டு விட்டால் 2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றி விடலாம் என்பது தான். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாக  அவர் அறிவித்திருப்பதே, தேர்தல் வாக்குறுதியிலிருந்து பிறழ்ந்து மக்களை ஏமாற்றும் செயல் தான்.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்   5 ஆம் பக்கத்தில்,‘‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்’’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாடு  முழுவதும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம். இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைத் திருப்பதுடன்,  6 லட்சம் இளைஞர்களுக்கு வேலையும் கிடைத்திருக்கும்.

ஆனால், ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய ஜெயலலிதாவுக்கு, இலவசக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆட்சிக்கு வந்த பின்னர்  5 ஆண்டுகளாக ஊழல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு, ஆட்சியை விட்டு அகற்றப்படவிருக்கும் நேரத்தில் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது போன்று அவர் நாடகமாடுகிறார். 

சிலரை சில நேரத்தில் ஏமாற்றலாம்... ஆனால், அனைவரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. ஜெயலலிதாவின் இத்தகைய நாடகங்களைப் பார்த்து தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஜெயலலிதா அரசுக்கான மதிப்பெண் மைனசில் தான் இருக்கும் என்பதை விரைவில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்ற தேர்வில் தமிழக மக்கள் நிரூபிக்கப் போவது உறுதி!’’

Wednesday, February 10, 2016

அதிகார அத்துமீறல், மிரட்டல்: ஜெ.வின் ஆணவத்தை சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி: ராமதாஸ்

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மருத்துவ முகாம் நடத்த தனியார் மருத்துவமனைகளை மிரட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுத் தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு புகழ் சேர வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

விளம்பர வெளிச்சத்தின் ஒளியிலேயே அரசியல் நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது 68 ஆவது பிறந்த நாளை இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு ஆணையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை நடத்துதல், 68 லட்சம் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். மருத்துவ முகாம்களை நடத்துவதற்காக அவர்கள்  தேர்ந்தெடுத்த முறையில் தான் அதிகார அத்துமீறல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்று எழுந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக குறைந்தது 2 முதல் 3 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையிட்டிருக்கிறார். மருத்துவ முகாம்களை நடத்த முன்வராத மருத்துவமனைகள்  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவதுடன், இதுவரை அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

‘‘பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மொத்தம் 16 நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் 30 முதல் 50 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மருத்துவ முகாம்களுக்காக அவற்றை நடத்தும் மருத்துவமனைகளே உள்ளூர் தொலைக்காட்சிகளில்  விளம்பரம் செய்ய வேண்டும். இதுதவிர ஆட்டோ மூலம் ஒலிப்பெருக்கியில் விளம்பரம் செய்தல், துண்டு அறிக்கைகளை வழங்குதல் ஆகியவையும் செய்யப்பட வேண்டும். மருத்துவ முகாம்கள் நடைபெறும் பகுதியில் 8ஙீ4 என்ற அளவில் 4 விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும். அதிமுக ஏற்பாட்டில் தான் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்ற தோற்றம் ஏற்படும் வகையில் அனைத்து மருத்துவ முகாம்களையும் அங்குள்ள அதிமுக நிர்வாகிகளை அழைத்து, அவர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தனியார் மருத்துவமனைகளின்  நிர்வாகிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.


மக்களின் நலனுக்காக மருத்துவ முகாம்களை நடத்துவது வரவேற்கத்தக்கது தான். ஜெயலலிதா பிறந்தநாளுக்காக 680 முகாம்கள் அல்ல... 68,000 மருத்துவ முகாம்களைக் கூட நடத்திக் கொள்ளலாம். அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக இதை செய்யும் ஆளுங்கட்சியினர், கடந்த 5 ஆண்டுகளாக ஊழல் செய்து சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து செய்தால், அது சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, மக்கள் பணத்தை திட்டமிட்டு கொள்ளையடித்ததற்காக செய்யப்படும் பரிகாரமாகவும் இருந்திருக்கும். அதை விடுத்து  மருத்துவமனை நிர்வாகங்களை மிரட்டி, முதலமைச்சர் பிறந்த நாளுக்கு மருத்துவ முகாம்களை நடத்துவது தமது நலனுக்காகவும், புண்ணியத்திற்காகவும் அடுத்தவர் நலன்களை பலி கொடுப்பதற்கு ஒப்பானது ஆகும்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக தனியார் மருத்துவமனைகளை மிரட்டி முகாம்களை நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்த நாளுக்காக தமிழ்நாடு முழுவதும் 670 மருத்துவ முகாம்கள் இதே பாணியில் தான் நடத்தப்பட்டன. அப்போது ஜெயலலிதா எந்த பதவியிலும் இல்லை. ஊழல் செய்து சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு, முதலமைச்சர்  பதவியிலிருந்து நீக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தார். ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பிறந்த நாளுக்காக அரசு எந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அவல வரலாறு கடந்த ஆண்டு எழுதப்பட்டது. கடந்த ஆண்டு ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட அனைத்து வகை அதிகார அத்துமீறலும் இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்காக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகை அத்துமீறல்களுக்கும் அடிப்படை காரணம் என்னவெனில், 5 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் நம்மிடம் கொடுத்துவிட்டார்கள்... இந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் தொடங்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது வரை எதை செய்தாலும் யாரும் நம்மை கேட்க முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதில் எழுந்துள்ள ஆணவம் தான். அந்த ஆணவத்தை அடுத்த சில வாரங்களில் சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 


Monday, February 8, 2016

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இம்முடிவு ஊரக மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.கடந்த 2012 ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET) நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆணை செல்லாது என்று கடந்த 2013 ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது.பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி தான் உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நுழைவுத்தேர்வு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் வகையில் 1956 ஆம் ஆண்டின் இந்திய மருத்துவக் குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு இப்போது முடிவு செய்திருக்கிறது.கடந்த ஆண்டு அக்டோபரில் இதற்கான முயற்சிகள் தொடங்கியபோதே அதை நான் கடுமையாக எதிர்த்தேன். ஆனால், அதற்குப் பிறகும் நுழைவுத்தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் விக்கிரமாதித்தனைப் போல மத்திய அரசு ஈடுபடுவது சரியல்ல.இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் ஒரே மாதிரியான பள்ளிக் கல்வி வழங்கப்படும் வரை பொது நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு எழக்கூடாது. தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வுகள் நடைமுறையில் இருந்தன. அப்போது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர்வது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் சுமார் 70% வரை கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கிறது.இத்தகைய சூழலில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். இந்தியாவில் மருத்துவப்படிப்புக்கு இப்போது 90 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், அவற்றுக்கு பதிலாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் சுமை குறையும் என்பது உண்மை தான். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை களைய முடியும் என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இந்த சீர்த்திருத்தங்களுக்காக ஊரக, ஏழை மாணவர்களின் நலனை பலி கொடுக்கக்கூடாது.அப்படியானால் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்துவது எப்படி? என்ற வினா எழலாம். 12-ஆம் வகுப்புத் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தையும், தேர்வுமுறையையும் நடைமுறைப்படுத்தி, அத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு சிந்திக்கலாம்.மாறாக மாணவர் சேர்க்கைக்கான பொது அளவுகோலாக பொது நுழைவுத்தேர்வை ஒரு போதும் மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது. எனவே, மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-statement-about-entrance-examination-246356.html

Sunday, February 7, 2016

மத்திய அரசு நாடகமாடுகிறது: ராமதாஸ் பேட்டி

கெயில் பிரச்சனையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்த பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுப.அருள்மணி இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு பேட்டி அளித்த ராமதாஸ்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் பா.ம.க நிச்சயம் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப போட்டியிடலாம். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றம் நிகழ்ந்தால் தான் சமூக பொருளாதாரத்தில் மக்கள் முன்னேற்றம் அடைய முடியும் அந்த மாற்றமாக அன்புமணி ராமதாஸை மக்கள் பார்க்கிறார்கள். 

கெயில் பிரச்சணையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாறுபட்டதா என்ற கேள்விக்கு. உண்மை தான். எந்த பிரச்சணையில் தமிழக அரசு சரியாக செயல்பட்டிருக்கிறது. அதற்கு தான் மாற்றம் வேண்டும் என்கிறோம்.

விவசாயிகளை பாதிக்காத வகையில் கெயில் குழாய்கள் பதிக்கப்படும் என்று பொன்ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, சொல்வார்கள் எது நடந்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு சொன்னார்கள் எப்படி நடந்தது. அப்படித் தான் இதுவும். மத்திய அரசின் நாடகம் அது. இது தொடர்பாக பா.ம.க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இது சம்மந்தமாக சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி யோசித்து வருகிறோம் என்றார். 

பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும்: ராமதாஸ்



கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ஊழலும், சீர்கேடுகளும் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகின்றன என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடைபிடிக்கப்படும் முறை அவற்றில் முதன்மையானதாகும்.

தமிழக அரசுக்கு சொந்தமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அரசு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி இப்பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப் படவில்லை. ஆய்வக உதவியாளர் தேர்வில் நடந்த ஊழலும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம். ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிடுவதிலேயே குளறுபடிகள் தொடங்கி விட்டன. ஆய்வக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியுள்ளவர்களின் பட்டியலை பெற்று  பதிவு மூப்பு அடிப்படையில் நியமிப்பது தான் வழக்கம். கடந்த காலங்களில் இவ்வாறு தான் நியமனம் நடைபெற்றது. இப்பணிக்கு இதுவரை போட்டித் தேர்வு நடத்தப்பட்ட வரலாறு இல்லை.

ஒருவேளை போட்டித்தேர்வு மூலம் தான் ஆய்வக உதவியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என  அரசு விரும்பினால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்த போட்டித் தேர்வுகளை நடத்தியிருக்கலாம். ஆனால், அவற்றை விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகமே இந்த போட்டித் தேர்வுகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகளை வெளியிட்டு, அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், எழுத்துத் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது. எழுத்துத் தேர்வு என்பது தகுதித் தேர்வாக மட்டுமே கருதப்படும்;  இந்த தேர்வுகளில் போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்; நேர்காணலில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்பது தான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவலாகும்.

இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனத்திற்கு தடை விதித்தது. இதையே காரணம் காட்டி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இவ்விஷயத்தில் தொடக்கம் முதலே அடுத்தடுத்து தவறுகளை செய்து வந்தது தமிழக அரசு தான். தமிழகத்தைப் பொருத்தவரை கல்வித்துறை பணி நியமனங்கள் வேலைவாய்ப்பக  பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நடைபெறுவது வழக்கம். ஒருகட்டத்தில் மத்திய அரசு ஆணைப்படி ஆசிரியர்கள் நியமனம் போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெற்றது. ஆய்வக உதவியாளர் பணிகளையும் அதே முறையில் நிரப்புவதில் சிக்கல் இல்லை. மாறாக, எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை புறக்கணித்து விட்டு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவதாக கூறுவது ஊழலுக்கே வழி வகுக்கும்.

போட்டித்தேர்வு நடத்தப்பட்டால் அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வக உதவியாளர் பணியை விட உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர் பணிக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 3 மற்றும் 4 ஆம் நிலை பணிகளுக்கோ நேர்காணல்கள் நடத்தப்படுவதில்லை. அவ்வாறு இருக்க இப்பணிக்கு நேர்காணல் நடத்தி அதன் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் செய்ய முயல்வது அநீதி ஆகும். ஆய்வக உதவியாளர் பணிக்கு ரூ.5 லட்சம் வீதம் ஆளுங்கட்சியினர் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். அவ்வாறு பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காகவே நேர்காணல் என்ற குறுக்குவழியை ஜெயலலிதா அரசு கடைபிடிப்பதாக தோன்றுகிறது.

நேர்காணலில் மதிப்பெண்களை வழங்க வரையறுக்கப்பட்ட எந்த நெறிமுறையும் இல்லாத நிலையில்,  நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பது என்பது தகுதியுள்ளோரை  புறக்கணித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களை நியமிப்பதற்கு மட்டுமே உதவும். இந்த திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாது என்பதால் தான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நடத்தாமல் கிடப்பில் போட்டிருக்கிறது தமிழக அரசு. கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும். எனவே,  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் ஆய்வக உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: