Monday, February 29, 2016

வணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல: ராமதாஸ் கண்டனம்



டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், வணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உலக சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்களின் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்படுவதாகவும், டீசல் விலை ரூ.1.51 உயர்த்தப்படுவதாகவும்  எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.56.08 ஆக குறைந்துள்ள நிலையில், டீசல் விலை ரூ.47.13 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலைக்குறைப்பு ஓரளவு நிம்மதி அளிக்கும் போதிலும், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் வெளிப்படை தன்மையற்ற முறையும், அவற்றின் மீதான வரிகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசு கடைபிடிக்கும் மனிதநேயமற்ற அணுகுமுறையும் இயற்கை அறத்திற்கு எதிரானவை ஆகும். பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் என அறிவித்தது. இதை மத்திய அரசே கடைபிடிக்கவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா விலை சரியும் போது அதன் பயனை மக்கள் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், விலைக் குறைப்பு செய்யப்படுவதற்கு முன்பே கலால் வரியை உயர்த்தி, விலைக் குறைப்பை மத்திய அரசு தடுப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற, முழுக்க வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும்.

உலக சந்தையில் நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 32.53 டாலர் ஆகும். இது பிப்ரவரி 15 ஆம் தேதி விலையான 30.48 டாலரை விட 2.05 டாலர் அதிகமாகும். இந்த அடிப்படையில் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதாக இருந்தால், டீசல் விலையைப் போல பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டீசல் விலையை உயர்த்தி விட்டு, பெட்ரோல் விலையை குறைப்பதென்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை பெட்ரோல் விலை ஏற்கனவே அதிகமாக உயர்த்தப்பட்டு இப்போது பெயரளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை எண்ணெய் நிறுவனங்கள் விளக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 33 ரூபாய், டீசல் 24 ரூபாய் என்ற விலைக்குத் தான் விற்கப்பட வேண்டும். ஆனால், அதைவிட அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு மத்திய அரசின் ஆசை தான் காரணமாகும்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். இவ்வளவு வருமானத்தை கூடுதலாக  ஈட்டும் மத்திய அரசு இப்போது டீசல் விலையை உயர்த்தாமல் இருந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது.  லிட்டருக்கு ரூ.13.47 கூடுதல் வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அதில் பத்தில் ஒரு பங்கை குறைப்பதால் எதுவும் குறைந்து விடாது. ஆனால், அனைத்து செலவுகளுக்கும் பெட்ரோல், டீசல் மீதான வரியிலிருந்து  தான் வருவாய் திரட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆசை தான் இந்த நிலைக்கு காரணமாகும்.

 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 19.73 ரூபாயை கலால் வரியாக வசூலிக்கிறது. இது தவிர சாலை பராமரிப்புக் கட்டணமாக 2 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது. இவை தவிர தமிழக அரசின் சார்பில் மதிப்பு கூட்டு வரியாக 27%, அதாவது 12.69 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரியாக மட்டும் ரூ.34.42 வசூலிக்கப்படுகிறது.  டீசல் மீதும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்திச் செலவை விட அதிக தொகையை வரியாக வசூலிப்பது கந்து வட்டிக்கடை நடத்துவதை விட மிக  மிக மோசமான செயலாகும். இது போன்ற வணிக நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படக்கூடாது.

டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், அதற்கு இணையாக சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இது சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

Monday, February 22, 2016

சென்னை: மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாவும், வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்காணல், மாநாடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்நிலையில், பாமக சார்பில் இன்னும் சில தினங்களில் சென்னையை அடுத்த வண்டலூரில் மாநாடு நடைபெற உள்ளது.இது தொடர்பாக தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார்
வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன்.

ஆட்சி மாற்றம்... தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும்.
நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
Posted by: Jayachitra Published: Monday, February 22, 2016, 14:00 [IST] .vuukle-custom-rating { font-size: 14px; padding-top: 0px; padding-bottom: 9px; text-align: right; } .vuukle-custom-rating .star-rating{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;display:inline-block;font-size:0;height:20px;margin-bottom:-3px;margin-right:5px;overflow:hidden;position:relative;white-space:nowrap;width:100px;}.vuukle-custom-rating .star-rating input{-moz-appearance:none;display:inline-block;height:100%;margin:0;opacity:0;padding:0;position:relative;width:20%;z-index:2;}.vuukle-custom-rating .star-rating i{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;height:100%;left:0;opacity:0;position:absolute;top:0;width:20%;z-index:1;}.vuukle-custom-rating .star-rating input.rad:hover+i,.vuukle-custom-rating .star-rating input:checked+i{opacity:1;}.vuukle-custom-rating .star-rating i~i{width:40%;}.vuukle-custom-rating .star-rating i~i~i{width:60%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i{width:80%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i~i{width:100%;} உங்களது ரேட்டிங்: googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1413541577263-0'); }); சென்னை: மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாவும், வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்காணல், மாநாடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்நிலையில், பாமக சார்பில் இன்னும் சில தினங்களில் சென்னையை அடுத்த வண்டலூரில் மாநாடு நடைபெற உள்ளது.இது தொடர்பாக தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நெஞ்சம் இனிக்கிறது... 1/13 நெஞ்சம் இனிக்கிறது... வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன். ஆட்சி மாற்றம்... 2/13 ஆட்சி மாற்றம்... தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும். ஆட்சிகளுக்கு முடிவு கட்டி 3/13 ஆட்சிகளுக்கு முடிவு கட்டி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மாற்றத்திற்கான விதை 4/13 மாற்றத்திற்கான விதை அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இவை தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையாக அமைந்தன.
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு மாநாடும் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதில்லை; எந்த ஒரு மாநாட்டுக்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டதில்லை என்று வியக்கும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன். கங்காதரன், கே.என். சேகர், பாலயோகி மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வதை விட பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் இம்மாநாட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை தகர்த்து இம்மாநாட்டை நடத்தவிருக்கிறோம். இது வெற்றிக்கு முதல்படி.

Sunday, February 21, 2016

வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும்! ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல் 

‘’அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே...!
வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி  சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இவை தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையாக அமைந்தன.

பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரையிலான ஓராண்டு காலத்தில் நமது முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்புகள், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்களைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டங்கள், எட்டு திசையிலும் நமது வெற்றிக்கு கொட்டு முரசு கொட்டும் வகையில் 8 மண்டல மாநாடுகள், சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டத்தை உருவாக்கும் வகையில் ‘‘ நாம் விரும்பும் சென்னை’’ கொள்கை ஆவணத்தை வெளியிட்டதுடன், அது குறித்து சென்னை பெருநகரம் முழுவதும்  பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது என நாம் கடந்து வந்த மைல்கற்கள் ஏராளம்.

 இப்போது நாம் நிற்கும் இடத்திலிருந்து ‘மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம்’ என்பது தொட்டுவிடும்  தூரம் தான். தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதன் முதற்கட்டமாகத் தான் தலைநகரின் நுழைவாயிலான வண்டலூரில் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் மாநில மாநாட்டை வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகலில் மிகச்சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.


தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு மாநாடும் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதில்லை; எந்த ஒரு மாநாட்டுக்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டதில்லை  என்று வியக்கும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன். கங்காதரன், கே.என். சேகர், பாலயோகி  மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வதை விட பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் இம்மாநாட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை தகர்த்து இம்மாநாட்டை நடத்தவிருக்கிறோம். இது வெற்றிக்கு முதல்படி.

இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து 20 ஆண்டுகளில் கல்வித் துறையிலும், சுகாதாரத் துறையிலும், வேளாண் துறையிலும் கட்டி எழுப்பப்பட்ட முன்னேற்றங்கள், அடுத்த 50 ஆண்டுகளில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. கல்வியும், சுகாதாரமும் தனியாரின் கைகளுக்கு போய்விட்டன. 

 ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் ஈட்டும் ஊதியத்தின் பெரும்பகுதியை கல்விக்காகவும், மருத்துவச் செலவுகளுக்காகவுமே செலவிட வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் விவசாயம் லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்த நிலை மாறி, விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலைக்கு தூண்டும் கருவியாக மாறிவிட்டது. இவை தவிர சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கண்டது சீரழிவைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பது தாம் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இதுவரை நடந்த 8 மண்டல மாநாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவற்றை விஞ்சும் வகையில் இந்த மாநில மாநாடு அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்... இதை நீங்கள் நிறைவேற்றுவீர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.நமது லட்சியப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கவிருப்பது பாட்டாளிகளின் வருகை தான். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான். சென்னை மாநகரின் நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த மாநாடு நடைபெறவிருப்பதால் போக்குவரத்துக்கும், பொதுமக் களுக்கும் எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வண்டலூரில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’

தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில் கூட்டணி.... படுதீவிரமாக இருக்கும் ராமதாஸ்

சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில்தான் கூட்டணி என்பதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதாகவும் அதிமுகவுடன் கூட்டணி முயற்சிக்கு கட்சியில் சிலர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் எடுத்த எடுப்பிலேயே தடை போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே போட்டி; தங்களது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.இம்முறை சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவை தக்க வைக்க அக்கட்சி பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது

நோ கூட்டணி ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் தனித்து போட்டி என்பது விபரீதமாகத்தான் முடியும்; கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என பாமக ஆதரவு அறிவுஜீவிகள் டாக்டர் ராமதாஸுக்கு ஆலோசனை கூறி இருந்தனராம். ஆனால் இதை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம்
அதிமுக வலை? இதேபோல் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் நிலையில் பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அதிமுக காய்களை நகர்த்தி வருகிறதாம். இதற்கு கட்சியிலும் சிலர் ஆதரவு தெரிவிக்க, ஆனால் 'கூட்டணி' குறித்து யார் பேசினாலும் அதை நிராகரித்து விடுகிறாராம் ராமதாஸ்
ராமதாஸைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்கு சதவீதத்தை பெற்றாக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளாராம். ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில் பாமக 5.23% வாக்குகளைதான் பெற்றது. இதனால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பறிகொடுத்தாக வேண்டிய நிலைக்கு பாமக தள்ளப்பட்டது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 6% முதல் 8% வாக்குகளைப் பெற வேண்டும்; மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் பாமக முனைப்புடன் உள்ளது
Posted by: Mathi Published: Monday, February 22, 2016, 11:16 [IST] .vuukle-custom-rating { font-size: 14px; padding-top: 0px; padding-bottom: 9px; text-align: right; } .vuukle-custom-rating .star-rating{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;display:inline-block;font-size:0;height:20px;margin-bottom:-3px;margin-right:5px;overflow:hidden;position:relative;white-space:nowrap;width:100px;}.vuukle-custom-rating .star-rating input{-moz-appearance:none;display:inline-block;height:100%;margin:0;opacity:0;padding:0;position:relative;width:20%;z-index:2;}.vuukle-custom-rating .star-rating i{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;height:100%;left:0;opacity:0;position:absolute;top:0;width:20%;z-index:1;}.vuukle-custom-rating .star-rating input.rad:hover+i,.vuukle-custom-rating .star-rating input:checked+i{opacity:1;}.vuukle-custom-rating .star-rating i~i{width:40%;}.vuukle-custom-rating .star-rating i~i~i{width:60%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i{width:80%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i~i{width:100%;} உங்களது ரேட்டிங்: googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1413541577263-0'); }); சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில்தான் கூட்டணி என்பதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதாகவும் அதிமுகவுடன் கூட்டணி முயற்சிக்கு கட்சியில் சிலர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் எடுத்த எடுப்பிலேயே தடை போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே போட்டி; தங்களது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.இம்முறை சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவை தக்க வைக்க அக்கட்சி பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது. நோ கூட்டணி 1/5 நோ கூட்டணி ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் தனித்து போட்டி என்பது விபரீதமாகத்தான் முடியும்; கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என பாமக ஆதரவு அறிவுஜீவிகள் டாக்டர் ராமதாஸுக்கு ஆலோசனை கூறி இருந்தனராம். ஆனால் இதை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். அதிமுக வலை? 2/5 அதிமுக வலை? இதேபோல் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் நிலையில் பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அதிமுக காய்களை நகர்த்தி வருகிறதாம். இதற்கு கட்சியிலும் சிலர் ஆதரவு தெரிவிக்க, ஆனால் 'கூட்டணி' குறித்து யார் பேசினாலும் அதை நிராகரித்து விடுகிறாராம் ராமதாஸ். அங்கீகார பிரச்சனை 3/5 அங்கீகார பிரச்சனை ராமதாஸைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்கு சதவீதத்தை பெற்றாக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளாராம். ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில் பாமக 5.23% வாக்குகளைதான் பெற்றது. இதனால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பறிகொடுத்தாக வேண்டிய நிலைக்கு பாமக தள்ளப்பட்டது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 6% முதல் 8% வாக்குகளைப் பெற வேண்டும்; மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் பாமக முனைப்புடன் உள்ளது. பாஜக வரும்? 4/5 பாஜக வரும்? பாமக தலைமையிலான கூட்டணியில் இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் சேரவில்லை. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து பாமகவுக்கு தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகிறது. இதை ராமதாஸ் விரும்பவில்லை. அதே நேரத்தில் விஜய்காந்தோ அதிமுகவோ தங்களை கூட்டணியில் சேர்க்காவிட்டால், பாஜக கடைசியாக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு பாமக தலைமையிலான கூட்டணியில் இணையும் என்றே தெரிகிறது. அத்துடன் சில ஜாதிய கட்சிகளும் பாமக அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Wednesday, February 17, 2016

பாமகவின் நெத்தியடி அட்வைஸ்... வாக்கு சேகரிக்கப் போகும்போது டீ கேட்டு நச்சரிக்கக் கூடாது!

தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பாமக. அதில் கூறியிருப்பதாவது:-1. தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும்.2. ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தலுக்குள் குறைந்தது 3 முறையாவது நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கூறி அவர்களை பா.ம.க.வின் நிரந்தர ஆதரவாளராக மாற்ற வேண்டும்.3. தமிழகத்தின் பெரும்பான்மை வாக்காளர்களான பெண்கள் அதிமுவுக்கும், திமுகவுகும் ஏன் வாக்களிக்கக் கூடாது? பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பதை விளக்கும் துண்டறிக்கையை ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் கொண்டு சென்று சேர்க்க/விளக்க வேண்டும்.4. வறுமையை ஒழிக்க கல்வியும், ஆரோக்கியமும் முக்கியம். ஆனால், இவற்றை பெறுவதற்காக கடன் வாங்கி மக்கள் வறுமையில் தள்ளப்படும் நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கி யிருப்பதையும், பா.ம.க. ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மிச்சமாகும் என்பதையும் வாக்காளர்களிடம் விளக்கிப் புரிய வைக்கவேண்டும்.5. விவசாயிகளுக்கான அனைத்து இடுபொருட்கள், வேளாண் பயன்பாட்டுக்கான கருவிகள், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான செயல்திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்பதை விளக்க வேண்டும்.6. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் யார்? மத்திய அமைச்சராக இருந்த போது அவர் படைத்த சாதனைகள் என்ன? உலக அளவில் அவர் பெற்ற விருதுகள்/பாராட்டுக்கள் என்ன? தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் உருவாக்கியுள்ள செயல்திட்டம் என்ன? என்பதையெல்லாம் பொதுமக்களுக்கு விரிவாக விளக்க வேண்டும்.7. வாக்கு கேட்கச் செல்லும் போது தேநீர் வாங்கித் தரும்படி வேட்பாளரை கேட்கக்கூடாது. மாறாக வேட்பாளருக்கு தொண்டர்கள் தேநீர் வாங்கித் தர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி வலிமையான கட்சி... அதன் தொண்டர்கள் எதையும் எதிர்பாராதவர்கள். எனவே, பிரச்சாரத்திற்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.8. வேட்பாளர் சொந்த வாகனம் வைத்திருந்தால் அதில் சென்று வாக்காளர்களை சந்திக்கலாம். வேட்பாளரிடம் வாகனம் இல்லை என்றால் வாகனம் வைத்திருக்கும் நிர்வாகிகள் வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக வாகனம் அளித்து உதவ வேண்டும்.9. அதிமுக, திமுக கட்சிகள் அளிக்கும் ரூ.1000, ரூ.500 பணத்திற்காக விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையான வாக்குகளை விற்று ஏமாந்து விடக்கூடாது என வாக்காளர்களிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலை மதிப்பற்ற வாக்குரிமையை விலை கொடுத்து வாங்கும் திமுக, அதிமுகவின் கலாச்சாரத்தை பிரச்சாரத்தின் மூலம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.10. பூத் செலவு என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட தேவையற்ற கலாச்சாரம் மற்றும் செலவு ஆகும். பூத் செலவு என்பது பா.ம.க.வின் அகராதியில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.11. பா.ம.க.வின் சுவர் விளம்பரங்கள் சுவற்றின் உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் எழுதப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடந்த இடங்களில் சேரும் குப்பைகளை கட்சியினரே அப்புறப்படுத்த வேண்டும்.12. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களுடன் தொகுதி நிலையிலான தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெளியிடப்பட வேண்டும்.13. ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளில் சாத்தியமானவற்றை தீர்ப்பதற்கான வாக்குறுதியை அளித்து, ஊர்த் தலைவர்களுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.14. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் யாருக்கும் தொல்லை தராத வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். பிரச்சாரத்திற்காக செல்லும் போது ஏதேனும் இடத்தில் மற்ற கட்சியினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் அவர்களின் பிரச்சாரம் முடிவடையும் வரை காத்திருத்து அதன் பின்னர் வாக்கு சேகரிப்பைத் தொடங்க வேண்டும். எதிர்க்கட்சியினரிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.15. தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், கடந்த கால சாதனைகள் ஆகியவற்றைக் கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான அரசியலை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின் பற்ற வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது''இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-release-pmk-election-guidelines-247166.html

Saturday, February 13, 2016

அம்மா குடிநீர் திட்டம்- தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்காக அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படுவதற்கு துளி கூட வாய்ப்பு இல்லாத இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பது சென்னை மாநகர மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

‘‘அம்மா குடிநீர் திட்டம் சென்னை மாநகரில் ஏழை மக்கள் அதிகமாக வாழும் 100 இடங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக அந்த பகுதிகளில் மணிக்கு 2,000 லிட்டர் நீரை எதிர்மறை சவ்வூடு பரவல் மூலம் சுத்திகரித்து  வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஏழை மக்கள் குடிநீர் பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்’’ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எதையும் அவர் அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க முடியாது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக அறிந்திருப்பது தான்.

இலவசக் குடிநீர் திட்டத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறாரே தவிர அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான செலவு குறித்த மதிப்பீடுகள் செய்யப்படவில்லை. இன்றே திட்டச்செலவு மதிப்பிடப்பட்டு, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படுவதாக வைத்துக் கொண்டாலும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தண்ணீரை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்கள் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு  அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் விதிகளின்படி செய்யப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். இன்னும் 15 நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டால் அதன்பிறகு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது. இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு காரணம், இப்படி ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டு விட்டால் 2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றி விடலாம் என்பது தான். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாக  அவர் அறிவித்திருப்பதே, தேர்தல் வாக்குறுதியிலிருந்து பிறழ்ந்து மக்களை ஏமாற்றும் செயல் தான்.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்   5 ஆம் பக்கத்தில்,‘‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்’’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாடு  முழுவதும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம். இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைத் திருப்பதுடன்,  6 லட்சம் இளைஞர்களுக்கு வேலையும் கிடைத்திருக்கும்.

ஆனால், ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய ஜெயலலிதாவுக்கு, இலவசக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆட்சிக்கு வந்த பின்னர்  5 ஆண்டுகளாக ஊழல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு, ஆட்சியை விட்டு அகற்றப்படவிருக்கும் நேரத்தில் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது போன்று அவர் நாடகமாடுகிறார். 

சிலரை சில நேரத்தில் ஏமாற்றலாம்... ஆனால், அனைவரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. ஜெயலலிதாவின் இத்தகைய நாடகங்களைப் பார்த்து தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஜெயலலிதா அரசுக்கான மதிப்பெண் மைனசில் தான் இருக்கும் என்பதை விரைவில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்ற தேர்வில் தமிழக மக்கள் நிரூபிக்கப் போவது உறுதி!’’

Wednesday, February 10, 2016

அதிகார அத்துமீறல், மிரட்டல்: ஜெ.வின் ஆணவத்தை சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி: ராமதாஸ்

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மருத்துவ முகாம் நடத்த தனியார் மருத்துவமனைகளை மிரட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுத் தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு புகழ் சேர வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

விளம்பர வெளிச்சத்தின் ஒளியிலேயே அரசியல் நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது 68 ஆவது பிறந்த நாளை இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு ஆணையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை நடத்துதல், 68 லட்சம் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். மருத்துவ முகாம்களை நடத்துவதற்காக அவர்கள்  தேர்ந்தெடுத்த முறையில் தான் அதிகார அத்துமீறல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்று எழுந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக குறைந்தது 2 முதல் 3 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையிட்டிருக்கிறார். மருத்துவ முகாம்களை நடத்த முன்வராத மருத்துவமனைகள்  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவதுடன், இதுவரை அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

‘‘பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மொத்தம் 16 நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் 30 முதல் 50 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மருத்துவ முகாம்களுக்காக அவற்றை நடத்தும் மருத்துவமனைகளே உள்ளூர் தொலைக்காட்சிகளில்  விளம்பரம் செய்ய வேண்டும். இதுதவிர ஆட்டோ மூலம் ஒலிப்பெருக்கியில் விளம்பரம் செய்தல், துண்டு அறிக்கைகளை வழங்குதல் ஆகியவையும் செய்யப்பட வேண்டும். மருத்துவ முகாம்கள் நடைபெறும் பகுதியில் 8ஙீ4 என்ற அளவில் 4 விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும். அதிமுக ஏற்பாட்டில் தான் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்ற தோற்றம் ஏற்படும் வகையில் அனைத்து மருத்துவ முகாம்களையும் அங்குள்ள அதிமுக நிர்வாகிகளை அழைத்து, அவர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தனியார் மருத்துவமனைகளின்  நிர்வாகிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.


மக்களின் நலனுக்காக மருத்துவ முகாம்களை நடத்துவது வரவேற்கத்தக்கது தான். ஜெயலலிதா பிறந்தநாளுக்காக 680 முகாம்கள் அல்ல... 68,000 மருத்துவ முகாம்களைக் கூட நடத்திக் கொள்ளலாம். அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக இதை செய்யும் ஆளுங்கட்சியினர், கடந்த 5 ஆண்டுகளாக ஊழல் செய்து சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து செய்தால், அது சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, மக்கள் பணத்தை திட்டமிட்டு கொள்ளையடித்ததற்காக செய்யப்படும் பரிகாரமாகவும் இருந்திருக்கும். அதை விடுத்து  மருத்துவமனை நிர்வாகங்களை மிரட்டி, முதலமைச்சர் பிறந்த நாளுக்கு மருத்துவ முகாம்களை நடத்துவது தமது நலனுக்காகவும், புண்ணியத்திற்காகவும் அடுத்தவர் நலன்களை பலி கொடுப்பதற்கு ஒப்பானது ஆகும்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக தனியார் மருத்துவமனைகளை மிரட்டி முகாம்களை நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்த நாளுக்காக தமிழ்நாடு முழுவதும் 670 மருத்துவ முகாம்கள் இதே பாணியில் தான் நடத்தப்பட்டன. அப்போது ஜெயலலிதா எந்த பதவியிலும் இல்லை. ஊழல் செய்து சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு, முதலமைச்சர்  பதவியிலிருந்து நீக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தார். ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பிறந்த நாளுக்காக அரசு எந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அவல வரலாறு கடந்த ஆண்டு எழுதப்பட்டது. கடந்த ஆண்டு ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட அனைத்து வகை அதிகார அத்துமீறலும் இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்காக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகை அத்துமீறல்களுக்கும் அடிப்படை காரணம் என்னவெனில், 5 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் நம்மிடம் கொடுத்துவிட்டார்கள்... இந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் தொடங்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது வரை எதை செய்தாலும் யாரும் நம்மை கேட்க முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதில் எழுந்துள்ள ஆணவம் தான். அந்த ஆணவத்தை அடுத்த சில வாரங்களில் சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 


Monday, February 8, 2016

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இம்முடிவு ஊரக மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.கடந்த 2012 ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET) நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆணை செல்லாது என்று கடந்த 2013 ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது.பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி தான் உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நுழைவுத்தேர்வு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் வகையில் 1956 ஆம் ஆண்டின் இந்திய மருத்துவக் குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு இப்போது முடிவு செய்திருக்கிறது.கடந்த ஆண்டு அக்டோபரில் இதற்கான முயற்சிகள் தொடங்கியபோதே அதை நான் கடுமையாக எதிர்த்தேன். ஆனால், அதற்குப் பிறகும் நுழைவுத்தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் விக்கிரமாதித்தனைப் போல மத்திய அரசு ஈடுபடுவது சரியல்ல.இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் ஒரே மாதிரியான பள்ளிக் கல்வி வழங்கப்படும் வரை பொது நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு எழக்கூடாது. தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வுகள் நடைமுறையில் இருந்தன. அப்போது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர்வது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் சுமார் 70% வரை கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கிறது.இத்தகைய சூழலில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். இந்தியாவில் மருத்துவப்படிப்புக்கு இப்போது 90 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், அவற்றுக்கு பதிலாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் சுமை குறையும் என்பது உண்மை தான். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை களைய முடியும் என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இந்த சீர்த்திருத்தங்களுக்காக ஊரக, ஏழை மாணவர்களின் நலனை பலி கொடுக்கக்கூடாது.அப்படியானால் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்துவது எப்படி? என்ற வினா எழலாம். 12-ஆம் வகுப்புத் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தையும், தேர்வுமுறையையும் நடைமுறைப்படுத்தி, அத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு சிந்திக்கலாம்.மாறாக மாணவர் சேர்க்கைக்கான பொது அளவுகோலாக பொது நுழைவுத்தேர்வை ஒரு போதும் மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது. எனவே, மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-statement-about-entrance-examination-246356.html

Sunday, February 7, 2016

மத்திய அரசு நாடகமாடுகிறது: ராமதாஸ் பேட்டி

கெயில் பிரச்சனையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்த பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுப.அருள்மணி இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு பேட்டி அளித்த ராமதாஸ்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் பா.ம.க நிச்சயம் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப போட்டியிடலாம். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றம் நிகழ்ந்தால் தான் சமூக பொருளாதாரத்தில் மக்கள் முன்னேற்றம் அடைய முடியும் அந்த மாற்றமாக அன்புமணி ராமதாஸை மக்கள் பார்க்கிறார்கள். 

கெயில் பிரச்சணையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாறுபட்டதா என்ற கேள்விக்கு. உண்மை தான். எந்த பிரச்சணையில் தமிழக அரசு சரியாக செயல்பட்டிருக்கிறது. அதற்கு தான் மாற்றம் வேண்டும் என்கிறோம்.

விவசாயிகளை பாதிக்காத வகையில் கெயில் குழாய்கள் பதிக்கப்படும் என்று பொன்ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, சொல்வார்கள் எது நடந்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு சொன்னார்கள் எப்படி நடந்தது. அப்படித் தான் இதுவும். மத்திய அரசின் நாடகம் அது. இது தொடர்பாக பா.ம.க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இது சம்மந்தமாக சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி யோசித்து வருகிறோம் என்றார். 

பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும்: ராமதாஸ்



கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ஊழலும், சீர்கேடுகளும் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகின்றன என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடைபிடிக்கப்படும் முறை அவற்றில் முதன்மையானதாகும்.

தமிழக அரசுக்கு சொந்தமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அரசு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி இப்பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப் படவில்லை. ஆய்வக உதவியாளர் தேர்வில் நடந்த ஊழலும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம். ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிடுவதிலேயே குளறுபடிகள் தொடங்கி விட்டன. ஆய்வக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியுள்ளவர்களின் பட்டியலை பெற்று  பதிவு மூப்பு அடிப்படையில் நியமிப்பது தான் வழக்கம். கடந்த காலங்களில் இவ்வாறு தான் நியமனம் நடைபெற்றது. இப்பணிக்கு இதுவரை போட்டித் தேர்வு நடத்தப்பட்ட வரலாறு இல்லை.

ஒருவேளை போட்டித்தேர்வு மூலம் தான் ஆய்வக உதவியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என  அரசு விரும்பினால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்த போட்டித் தேர்வுகளை நடத்தியிருக்கலாம். ஆனால், அவற்றை விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகமே இந்த போட்டித் தேர்வுகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகளை வெளியிட்டு, அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், எழுத்துத் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது. எழுத்துத் தேர்வு என்பது தகுதித் தேர்வாக மட்டுமே கருதப்படும்;  இந்த தேர்வுகளில் போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்; நேர்காணலில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்பது தான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவலாகும்.

இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனத்திற்கு தடை விதித்தது. இதையே காரணம் காட்டி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இவ்விஷயத்தில் தொடக்கம் முதலே அடுத்தடுத்து தவறுகளை செய்து வந்தது தமிழக அரசு தான். தமிழகத்தைப் பொருத்தவரை கல்வித்துறை பணி நியமனங்கள் வேலைவாய்ப்பக  பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நடைபெறுவது வழக்கம். ஒருகட்டத்தில் மத்திய அரசு ஆணைப்படி ஆசிரியர்கள் நியமனம் போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெற்றது. ஆய்வக உதவியாளர் பணிகளையும் அதே முறையில் நிரப்புவதில் சிக்கல் இல்லை. மாறாக, எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை புறக்கணித்து விட்டு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவதாக கூறுவது ஊழலுக்கே வழி வகுக்கும்.

போட்டித்தேர்வு நடத்தப்பட்டால் அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வக உதவியாளர் பணியை விட உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர் பணிக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 3 மற்றும் 4 ஆம் நிலை பணிகளுக்கோ நேர்காணல்கள் நடத்தப்படுவதில்லை. அவ்வாறு இருக்க இப்பணிக்கு நேர்காணல் நடத்தி அதன் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் செய்ய முயல்வது அநீதி ஆகும். ஆய்வக உதவியாளர் பணிக்கு ரூ.5 லட்சம் வீதம் ஆளுங்கட்சியினர் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். அவ்வாறு பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காகவே நேர்காணல் என்ற குறுக்குவழியை ஜெயலலிதா அரசு கடைபிடிப்பதாக தோன்றுகிறது.

நேர்காணலில் மதிப்பெண்களை வழங்க வரையறுக்கப்பட்ட எந்த நெறிமுறையும் இல்லாத நிலையில்,  நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பது என்பது தகுதியுள்ளோரை  புறக்கணித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களை நியமிப்பதற்கு மட்டுமே உதவும். இந்த திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாது என்பதால் தான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நடத்தாமல் கிடப்பில் போட்டிருக்கிறது தமிழக அரசு. கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும். எனவே,  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் ஆய்வக உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

Saturday, February 6, 2016

2016 தேர்தலில் அன்புமணி தலைமையில் அமைவது பாமக ஆட்சியாக நடைபெறாது... ராமதாஸ் திடீர் குண்டு!

சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் மகளிர் தொண்டு நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் எம்.ஜி.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

அப்போது விழாவில் ராமதாஸ் பேசியதாவது
கடுமையான சட்டங்கள்... பெண்களுக்கு எதிராக எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அன்புமணி ஆட்சியில் அது தீர்க்கப்படும். அன்புமணி ஆட்சியில் பெண்களுக்கான பிரச்சினைகள் எதுவும் நடக்காது. அவ்வாறு நடந்தால் அதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்

பெண்களுக்கு முன்னுரிமை... அன்புமணி ஆட்சியில், பெண்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுப்போம். பெண்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியுடன், வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்போம்.

முதல் கையெழுத்து... பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். அதை, அன்புமணி ராமதாஸ் பேசும்போதே, பா.ம.க. ஆட்சியின் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்து தான் என்று பேசினார்.

மது விலக்கு... இதை அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் கூட்டத்திலேயே கூறிவிட்டார். அதன் பிறகுதான் இப்போது எல்லோரும் மதுவிலக்கு! மதுவிலக்கு! என்று பேசி வருகின்றனர்.

Friday, February 5, 2016

ஜெ, கருணாநிதி, ஸ்டாலின்... சகட்டுமேனிக்கு டுவிட்டரில் கலாய்க்கும் ராமதாஸ்


சென்னை: அரசியல் தலைவர்களில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ஸ்டாலினோ யாருடைய கருத்தென்றாலும் அதற்கு பதிலடியாக கிண்டலடித்து பதிவிடுகிறார் ராமதாஸ்.பாமகவின் திட்டத்தில் திமுக அட்டக்காப்பி அடிப்பதாக கூறும் டாக்டர் ராமதாஸ், 5 ஆட்சியின் சாதனைகளாக ஜெயலலிதா கூறுவது மிகப்பெரிய பொய் என்றும் கூறியுள்ளார்.கடந்த பத்து தினங்களாகவே இவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவும் கிண்டல் கருத்துக்கள் பலரையும் ரசிக்க வைக்கிறது. டாக்டர் ராமதாஸ் பதிவிட்ட டாப் 10 டுவிட்டுகளை நீங்களும் படியுங்களேன்.




மதுவுக்கு எதிராக விதவைகளை திரட்டி போராட்டம் - ஸ்டாலின் : வாக்குறுதி அளிப்பதிலும் காப்பி... போராட்டம் நடத்துவதிலும் காப்பியா


தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எல்லா குறைகளும் களையப்படும் - ஸ்டாலின் : அப்படின்னா... இவ்வளவு கலாமும் உறங்கினோம்னு சொல்லுங்க.


திரைப்படம் பார்த்ததை படம்பிடித்த நிருபருக்கு ஆட்சியர் அடி - உதை : நான் கலெக்டர் அல்ல... ரவுடி என்கிறார் போலும்.
திரைப்படம் பார்த்ததை படம்பிடித்த நிருபருக்கு ஆட்சியர் அடி - உதை : நான் கலெக்டர் அல்ல... ரவுடி என்கிறார் போலும்.

Wednesday, February 3, 2016

மரக்காணம் படுகொலை: ஜெ.வின் வீண் பழியால் நான் சிலுவையில் அறையப்பட்டேன்... ராமதாஸ்

சென்னை: மரக்கோணம் சம்பவத்தில் அப்பாவி தொண்டர்களின் படுகொலையை மூடிமறைக்க முயன்றதற்காக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தத் தீர்ப்பு மூலம் அப்பாவி இளைஞர்களின் படுகொலைக்கு நீதி கிடைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மரக்காணம் படுகொலை... மாமல்லபுரத்தில் 25.04.2013 அன்று நடைபெற்ற சித்திரைப் பெருநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய வன்முறை மற்றும் கலவரத்தில் செல்வராஜ், விவேக் ஆகிய இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் செல்வராஜ் படுகொலை வழக்கை விசாரித்த திண்டிவனம் குற்றவியல் விரைவு நீதிமன்றம், இதில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதன்மூலம் அப்பாவி இளைஞர்கள் படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கிறது

 

தமிழகத்தை பொறுத்த வரை பாஜக சிறிய கட்சி தான்... அன்புமணி ராமதாஸ்

மதுரை: தமிழகத்தை பொறுத்த வரை பாஜக சிறிய கட்சி தான் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி பெரிய கட்சி என்றும் அக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மதுரை பழங்காநத்தத்தில் நேற்று பாமகவின் மகளிரணி சார்பில் மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தமிழகத்தில் மீண்டும் மதுவை கொண்டுவந்த திமுக மது ஒழிப்பு குறித்து பேசுவது ஏமாற்று வேலை என்று கூறினார்.

மேலும், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் கெயில் எரிவாயு திட்டத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார்.பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, பாஜக தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அது ஒரு சிறிய கட்சி என்றும், பாமக பெரிய கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

 

Monday, February 1, 2016

அதிமுக வக்கீல்களை டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினராகப் போடுவதா.. ராமதாஸ் கடும் பாய்ச்சல்

சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் உறுப்பினர்களாக நியமித்ததன் மூலம், அரசு அமைப்பானது அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேர்வாணையத்தில் 10 உறுப்பினர்களின் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவரும், உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் நேற்று ஓய்வு பெற்றார்
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா உத்தரவின்படி, தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஆனால், அவர்கள் அனைவரும் அதிமுகவின் தீவிர உறுப்பினர்கள். இதனால், டிஎன்பிஎஸ்சி அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: